Sunday 27 January 2013

குஞ்சுகள் கோவணத்தை செண்டிமெண்டலாக உருவுவது எப்படி?

அன்புள்ள தல சாரு அவர்களுக்கு,
மீண்டும் உங்களின் வேலைப்பளுவின் இடையே தொல்லை படுத்துவதற்கு மன்னிக்கவும்.
உங்க வலைப்பூவில் செப் 13 ஆம் தேதி எழுதிய பதிவைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். படித்த கனம் துக்கம் தொண்டை அடைத்துக்கொண்டது. I can’t express charu. It makes us to feel like it happens to me.
உடனடியாக என்னால் இயன்ற பணத்தை, உங்கள் கணக்கில் செலுத்த முயன்றேன். என் online transfer இல் ஒரு சிறிய கோளாறு. (activation code என் மொபிலில் வரவில்லை). ஆகையால் நான் என் நண்பரின் பழைய Registered Payee கணக்கிற்கு Transfer செய்து, அவரின் அக்கௌன்ட் மூலம் உங்களுக்கு பணத்தை செலுத்துகிறேன் (ரூபாய் 2 ,000) . இந்த சிறிய தாமதத்திற்கு என்னை மன்னிக்கவும். இத்துடன் அவர் Transfer செய்த நகலை இணைத்துள்ளேன்.
சார், இவ்ளோதான் செய்ய முடிந்ததற்கு   நான் வெட்கப்படுகிறேன். உங்களின் பின்னால் நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள், அவர்களை பாஸ்கர் ஒரிங்கினைப்பார்… அந்நாள் வெகு தொலைவில் இல்லை.  சாரு, கூடிய சீக்கிரம் வாசகர்கள் ஆகிய நாங்கள் உங்களை ராஜ மகுடத்தில் உட்கார வைப்போம் என்று மிக்க நம்பிக்கை உள்ளது.
நீங்கள் நீண்ட நலமுடன் வாழ பிராத்திக்கும்,
உங்கள் தீவிர ரசிகன்
ஹரி பிரசாத்
துபாய்
டியர் ஹரி,
முதலில் உங்கள் கடிதத்தை உங்கள் அனுமதியின்றி வெளியிட்டதற்கு என்னை மன்னிக்கவும்.  உங்களுக்கு மெயில் எழுதிக் கேட்க நேரம் இல்லை.
ஒரு நண்பர் நூறு ரூபாய் மணி ஆர்டர் மூலம் அனுப்பி இருந்தார்.  அவரது நல்ல உள்ளத்தை நான் மனதாரப் பாராட்டினேன்.  அவரால் அவ்வளவுதான் முடியும்.  தொகை முக்கியம் அல்ல;  ஒரு கலாச்சார செயல்பாட்டில் நாமும் உடன் இருக்கிறோம்; தோள் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.  தேர் இழுக்கும் நாமும் ஒரு தோள் கொடுப்பது இல்லையா, அது போல.  அந்த நண்பர் முதலில் வங்கியில்தான் நூறு ரூபாயைக் கொடுத்து முயற்சி செய்தாராம்.  ஆனால் வங்கி மூலம் 100 ரூ. அனுப்பினால் என் கணக்கில் 180 ரூ. பிடிப்பார்கள் என்று தெரிந்ததால் பிறகு எனக்கு மெயில் எழுதி, என் முகவரி வாங்கி மணியார்டர் அனுப்பினார்.  அந்த நூறு ரூபாயை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இன்னொரு நெருங்கிய நண்பர் பணம் அனுப்பியிருந்தார்.  நன்றி என்று எழுதினேன்.  என் தந்தைக்கு என் கடமையைச் செய்கிறேன்; இதில் நன்றி எங்கிருந்து வந்தது என்று எழுதினார்.  அதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டன.  இப்போது உங்கள் கடிதம்.  இனிமேல் எக்காலத்திலும் தனியன் என்று உணர மாட்டேன்.  உங்களுக்கு ஒரு நற்செய்தி.  ஸீரோ டிகிரியின் ஹிந்தி மொழிபெயர்ப்பும் முடிந்து விட்டது.  அடுத்த ஆண்டு ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் எடிஷனுக்கான கலந்துரையாடல் பாரிஸில் நடக்க வேண்டும்.  அதுதான் என் இலக்கு.  ஃப்ரான்ஸில் அஸியா ஜெப்பார், தாஹர் பென் ஜெலோன், மிஷல் வுல்பெக் போன்ற பெயர்களோடு என் பெயர் வரும்.  அதுதான் என் வாசகர்களாகிய உங்களுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய அன்பளிப்பாக இருக்கும்…
உங்களுக்கும் நண்பர்களுக்கும் நான் வணங்கும் அய்யப்பனும் சோட்றாணிக்கரை பகவதியும் அருளையும் செல்வத்தையும் வழங்கட்டும்…
சாரு
(இந்தக் கடிதத்துக்காக நாவல் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று துணிந்து இந்தப் பக்கம் வந்து விட்டேன்… அநேகமாக நாவலை நாளை முடித்து விடுவேன்.  முடித்த அடுத்த கணம் ரெமி மார்ட்டின் தான்.  யார் யார் வருகிறீர்கள்? எங்கே சந்திக்கலாம்?  ஸீரோ டிகிரியை எழுதும் போது கூட இவ்வளவு மன பாரத்தை உணர்ந்ததில்லை. …  )

No comments:

Post a Comment