Sunday 15 December 2013

"நீயா நானா" கோபி, அந்தோணி சமூக விரோதிகள் - சாரு தாக்கு

சைமன் கோபிநாத் மற்றும் ஆண்டனியின் சமூக விரோதப் போக்கு
June 30th, 2010
என் எழுத்தில் பரிச்சயமுள்ளவர்களுக்குத் தெரியும், நான் எந்த மதத்தையும் சார்ந்தவன் அல்ல என்பது.  கடவுள் நம்பிக்கை உள்ளவனே தவிர எனக்கென்று மத அடையாளம் கிடையாது.  எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லும் வழக்கம் உள்ளவன்.  ஆனால் எந்த மதத்தையும் இன்னொரு மதத்தினர் புண்படுத்துவது இன்றைய கால கட்டத்தில் சமூக அமைதிக்கு ஊறு விளைவிப்பதாகவே அமையும்.  இந்த நிலையில் விஜய் டி.வி.யின் நீயா நானா நிகழ்ச்சி தொடர்ந்து இந்து மதத்தினரை மிகக் கேவலமாக அவமானப்படுத்துவதாக இருக்கிறது என்பது பற்றி ஏற்கன்வே எழுதியிருந்தேன்.  கூடவே சமயம் கிடைத்தால் இஸ்லாமையும் அவர்கள் சீண்டிப் பார்ப்பதும் எதிர்ப்பு வந்தால் உள்ளே அடங்கிக் கொள்வதுமாக இருக்கின்றனர்.  இதற்குக் காரணமானவர்கள் இரண்டு பேர்.  ஆண்டனி மற்றும் சைமன் கோபிநாத்.

ஒரு தாலி தேவையா இல்லையா என்ற நிகழ்ச்சியில் தாலி தேவை என்று வாதிடுகிறார் ஒரு பெண்.  ஆனால் குழந்தைப் பேறு சமயத்தில் டாக்டர்  தாலியைக் கழற்றி வைக்கச் சொன்ன போது என்ன செய்தீர்கள் என்று கேட்கிறார் சைமன் கோபிநாத்.  கழற்றி வைத்தேன் என்கிறார் அந்தப் பெண்மணி.  உடனே கோபிநாத் என்ற சமூக விரோதி அந்தப் பெண்மணியைப் பார்த்து ஆபாசமாகக் கேட்கிறார்: டாக்டர் என்ன சொன்னாலும் கேட்பீர்களா?

ஆண்டனி, கோபிநாத் என்ற இரண்டு சமூக விரோதிகளும்  என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள்.   உடனடியாக அந்த நீயா நானா நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும்.  இதற்கு வாசகர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது சம்பந்தமாக ஒரு இணைப்பு இதோ:
http://www.tamilhindu.com/2009/11/tele-medias-degrading-hindu-religious-feelings/

-----------------------------------------------
மன்னிப்புக் கேள் (4)
June 3rd, 2010
ஹாய் சாரு,

நான் உங்களின் தீவிர விசிறி.  அந்த நீயா நானா நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஏன் கோபி உங்களை மன்னிப்புக் கேட்க வைப்பதிலேயே தீவிரமாக இருந்தார் என்று யோசித்தேன்.  நீங்கள் சொல்வதை அவர் கேட்பதாகவே தெரியவில்லை.  கோபிநாத்தை நினைத்து மிகவும் பரிதாபப்படுகிறேன்.  உங்கள் நிலைமை எனக்கு நன்றாகப் புரிகிறது.  ஏனென்றால், நானும் உங்களைப் போலத்தான்; எதற்கும் எதிர்வினை புரிய நீண்ட நேரம் எடுத்துக் கொள்வேன்.

அன்புடன்,
சுப்பு
***
டியர் சாரு,

’நீயா  நானா’ நிகழ்ச்சி மேல் இருந்த மரியாதையே போய்விட்டது,  அது ஒரு வெறி பிடித்த கூட்டம் போல் தோன்றுகிறது,
தவறே செய்யாத மனிதர்கள் யார் இந்த உலகில்?  ஆண்டனியும் கோபிநாத்தும் தங்கள் வாழ்க்கையில் தவறே செய்ததில்லையா? அல்லது ஒரு ஆன்மீகவாதியின் மீது நம்பிக்கை வைத்தது தவறா?
விடுங்கள்.  இதெல்லாம் ஒரு கேவலமான சூழலையே காட்டுகிறது.
அன்புடன்,
செல்வன்.
***

டியர் சாரு,
நான் உங்கள் தீவிர வாசகன்.

நீங்கள் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்ட நீயா நானா நிகழ்ச்சியை நான் நேற்று பார்த்தேன். அந்த நிகழ்ச்சியில் திட்டமிட்டு உங்களை அவமானப்படுத்தினார்கள்.  நீங்கள் உணர்ச்சிவசப்பட்டது உங்கள் முகத்தில் அப்பட்டமாகத்  தெரிந்தது. அதனால்தான் உங்களால் அங்கு சரளமாக பேசமுடியவில்லை. என்னதான்  பிரபலமான  டாக் ஷோவாக இருந்தாலும் தமிழகத்தின் மிகப்பெரிய எழுத்தாளரை இப்படியா கூப்பிட்டு அவமானப்படுத்துவார்கள்?

தாங்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக உங்களின் கட்டுரையை தமிழிஷில் நான் இப்போதுதான் படித்தேன். அந்த கட்டுரையின் மையக்கருத்தை புரிந்துக்கொள்ளாமல் ஒருவர் உங்களை மிகவும் கடுமையாக த் தாக்கி தமிழிஷ் இல் பின்னூட்டம் இட்டுள்ளார். அவரின் இந்த தாக்குதலுக்கு நீங்கள் தக்க பதிலடி கொடுக்கவேண்டும்.

இப்படிக்கு,
V. சண்முகம்

***
அன்புள்ள சாரு,
ஞாயிறு இரவு நான் பயணத்தில் இருந்தமையால் தாங்கள் பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியைக் காண இயலவில்லை.  எனது நண்பன் என்னைத் தொலைபேசியில் விளித்து அந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றுள்ளீர்கள் என்று சொன்னபோது காண  முடியாமல் போனதற்கு வருந்தினேன். ஆனால் தங்களின் ’மன்னிப்புக்கேள்!’ கட்டுரையைப் படித்த பின்பு அந்த வருத்தம்  காணாமல் விட்டது பார்க்காமல் விட்டது பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டேன். ஒரு எழுத்தாளன் மேல் வெட்ட வெளிச்சமாக இப்படிப்பட்ட ஒரு வன்முறையைச் செய்ய அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது என்று புரியவில்லை.  அவர்களும் இந்தத் தமிழ் சமூகத்தின் பகுதி தானே, எழுத்தாளனிடம் இப்படித்தான்  நடந்து கொள்ளத்  தெரியுமோ என்னவோ? நான் இது பற்றித்  தனியாக எதையும் சொல்ல வேண்டியதில்லை. எனினும் இனிமேல் இது போன்ற போலியான சமூக அக்கறை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அன்புடனும் கண்டிப்புடனும் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
தயாநிதி.
***
கோபிநாத் ஏன் என்னை மன்னிப்புக் கேட்க வைப்பதிலேயே தீவிரமாக இருந்தார் என்றால் அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கிறது.  அந்த நிகழ்ச்சியில் வெளியே தெரியும் உருவம் மட்டுமே கோபிநாத்; மற்றபடி கேள்விகள் அனைத்தும் ஆண்டனியின் மூளையிலிருந்து வருவது.  அன்றைய தினம் கோபியின் காதுகளில் உள்ள ஒலிவாங்கியில் ஆண்டனியின் குரல் இவ்விதமாக ஒலித்திருக்குக்கும்…  “விடாதே; மன்னிப்புக் கேட்கிற வரைக்கும் விடாதே… ’உங்களுக்கென்று பெரிய வாசகர் கூட்டம் இருக்கிறது.  அவர்களைத் திசை திருப்பி விட்டதற்காக நீங்கள் இப்போது மன்னிப்புக் கேட்பீர்களா சாரு?’ மன்னிப்பு கேட்கிற வரைக்கும் விடாதே..” இந்த வாக்கியத்தில் ஒற்றை மேற்கோள் குறிக்குள் இருப்பதை மட்டும்தான் தமிழ் மக்கள் கேட்டிருப்பார்கள்.  மற்றவற்றை கோபி மட்டுமே கேட்டிருப்பார்.  நானும் கெட்ட வார்த்தை பேசுவேன்.  ஆனால் என் வீட்டுக்குள்தான் பேசுவேன்.  இப்படிப் பலர் முன்னிலையில் – அதுவும் நம் நிகழ்ச்சியை மதித்து எங்கிருந்தோ வந்து பேசிக் கொண்டிருப்பவரை குரங்கு மூஞ்சிக்காரன் என்று வர்ணிக்க மாட்டேன்.

ஆண்டனியின் பக்கத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சியின் ஆரம்பக் கட்டங்களைப் பார்த்த போது எனக்கு ஒரு wwf நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் இருந்தது. ”விடாதே… அந்தப் பச்சை சட்டைக்காரனை விடாதே…  நீ என்ன நினைக்கிறேன்னு கேளு… விடாதே விடாதே அமுக்கு….” என்று குறைந்த குரலில் – ஆனால் படு ஆவேசமாகக் கத்துவார் ஆண்டனி.  அந்த் சேடிஸத்தை நான் எழுதி நீங்கள் புரிந்து கொள்ள முடியாது.  விடாதே என்று ஆண்டனி கோபியிடம் சொல்லும் ஆவேசத்தை நான் எப்படி எழுத்தில் மொழிபெயர்க்க முடியும்? அதனால்தான் ஒரே வாக்கியத்தில் “என்னைக் கொலைவெறியுடன்  தாக்கினார்கள்” என்று எழுதினேன்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது சேலத்தைச் சேர்ந்த என் வாசக நண்பர் ராஜா தொலைபேசியில் என்னை அழைத்தார். அவர் இயற்கை உணவை மக்களிடையே பரப்பும் களப்பணியாளர்.  இயற்கை விஞ்ஞானி ஆழ்வாரின் நண்பர்.  அவர் ஆழ்வார் கலந்து கொண்ட ஒரு நீயா நானா நிகழ்ச்சியில் ஆண்டனிக்குப் பக்கத்தில் அமர்ந்து மேடையில் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அனுபவத்தை என்னிடம் விளக்கினார்.  ஆண்டனி கோபிநாத்திடம் “மைக்கை அந்தப் பச்சை சட்டைக்காரனிடம் கொடு; அவனைப் பேசச் சொல்லு… இப்போ அந்தக் குரங்கு மூஞ்சிக்காரண்ட்ட குடு…” என்றே கத்திக் கொண்டிருந்தாராம்.  இதையேதான் நானும் பார்த்தேன்.

ஆண்டனி சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.  நாம் கடுமையாக வெய்யில் அடிக்கக் கூடிய ஒரு பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.  அதனால் நம் எல்லோருக்குமே குரங்கு மூஞ்சியாகத்தான் இருக்கிறது.  சுவிட்ஸர்லாந்து போன்ற சீதோஷ்ண நிலை தமிழ்நாட்டில் இருந்திருந்தால் வெள்ளைத்தோல் மனிதர்களாக இருந்திருப்போம்.  எனவே மற்றவர்களைக் குரங்கு மூஞ்சி என்று சொல்வதற்கு முன்னால் உங்களுடைய முகத்தைச் சற்று கண்ணாடியில் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும், நீங்கள் குரங்கு மூஞ்சி என்று வர்ணிக்கும் மக்கள்தான் உங்களுடைய நீயா நானா நிகழ்ச்சி இவ்வளவு பிரபலம் ஆனதற்குக் காரணம்.  எனவே உங்கள் வெற்றிக்குக் காரணமான மக்களைப் பழிக்காதீர்கள்.

இப்படியாக நீயா நானா நிகழ்ச்சி என்னை மட்டுமல்ல; எல்லோரையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் இன்னொரு முறை கூப்பிட்டால் போவேன்.  ஏன் என்று என்னுடைய முந்தைய கட்டுரையில் விளக்கமாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் என்னை இனிமேல் நீயா நானாவுக்கு அழைக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  நான்தான் மானம் ரோஷம் எதுவுமே இல்லாதவன் என்றால்  மற்றவர்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

சண்முகத்திற்கு என் பதில்: என் கருத்தோடு முரண்படுவதற்கும் என்னை விமர்சிப்பதற்கும் எல்லோருக்கும் உரிமை இருக்கிறது.  நீங்கள் குறிப்பிடும் அன்பரின் பின்னூட்டத்தைப் படித்தேன்.  அவருக்கு பதில் எழுதி அவரிடம் என்னுடய நேர்மையையும் சுபாவத்தையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

ஒரு கல்லை நான் சாமி என்று வணங்குகிறேன்; இன்னொருவர் அதை செருப்பால் அடிக்கிறார்.  இந்த இரண்டு செயல்களாலும் அந்தக் கல்லுக்கு எந்த பாதிப்பும் இல்லை.  அவர் என்னைத் திட்டுவதை நான் வாங்கிக் கொண்டால்தானே கவலைப்பட வேண்டும்?  நான் வாங்கிக் கொள்ளவில்லை.  எனவே அவர் மீது கோபமும் இல்லை.
3.6.2010.
11.55 a.m.

-----------------------------------------------
மன்னிப்புக் கேள் (5)
June 5th, 2010

டியர் சாரு,
உங்களிடம் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம்.  விஜய் டி.வி.யின் நீயா நானா குழுவில் பணியாற்றுபவர்களில் நானும் ஒருவன்.  என் பெயரை தயவு செய்து வெளியிட வேண்டாம்.

நீயா நானாவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான ஆண்டனி கருப்பாக இருப்பவர்களை குரங்கு மூஞ்சி என்று குறிப்பிடுவது பற்றி எழுதியிருந்தீர்கள்.  உண்மை நிலவரம் தெரிந்தால் என்ன எழுதுவீர்களோ தெரியாது.  நிறத்தையும் உருவத்தையும் வைத்து ஏளனம் செய்தால் ஐரோப்பாவில் அதை இனவாதம் என்று சொல்லி ஜெயிலில் போட்டு விடுவார்கள்.  இங்கே ஆண்டனி செய்வது அது மட்டும் அல்ல.  கிட்டத்தட்ட ஒரு மத வெறியரைப் போல் அவர் நடந்து கொள்கிறார்.  முக்கியமாக இந்து மற்றும் இஸ்லாம் மீது தன் மீடியாவை வைத்து பிரச்சினை கொடுக்கிறார்.

சில உதாரணங்கள்:
சில மாதங்களுக்கு முன்பு முஸ்லீம் பெண்கள் பர்தா அணியலாமா கூடாதா என்று ஒரு டாக் ஷோவுக்குத் திட்டமிடப் பட்டு, இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பால் அது கை விடப் பட்டது. பர்தா அணியலாமா கூடாதா என்று சொல்ல அல்லது விவாதிக்க ஆண்டனி யார் என்பது என் கேள்வி.

சென்ற வாரம் – அதாவது, நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஷூட் செய்வதற்கு மறுநாள் ஒரு டாக் ஷோவை ஷூட் செய்ய இருந்தோம்.  பொது இடங்களில் மக்கள் மத அடையாளத்துடன் வரலாமா கூடாதா என்பதே விவாதத்தின் தலைப்பு.  இதிலிருந்தே நீங்கள் ஆண்டனி என்பவரின் இந்து விரோதப் போக்கை உணர்ந்து கொள்ளலாம்.  மத அடையாளம் என்றால் என்ன? நெற்றியில் விபூதியோ, ஸ்ரீசூர்ணமோ அணியலாமா கூடாதா என்பதே அந்தத் தலைப்பின் உள்குத்து.  இதை விவாதிக்க இந்த ஆண்டனி என்பவர் யார்?  இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வரும் ஒரு ஆன்மீக அடையாளத்தைப் பற்றி பணம் பண்ணுவதற்காகவும், தன் டாக் ஷோவை பிரபலப் படுத்துவதற்காகவும் தவறாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமல்ல ஆண்டனியின் நோக்கம்.  இந்து மதத்தின் மீது மற்றவர்களுக்கு துவேஷத்தை ஏற்படுத்துவதே அந்தத் தலைப்பின் நோக்கமாக இருந்தது.  மத அடையாளம் என்றால் அது நேரடியாக இந்து மதத்தைத் தாக்குவதே ஆகும்.   ஏனென்றால், ஒருவரின் மத அடையாளத்தை அவருடைய வர்க்க பேதம் எதுவும் இல்லாமலேயே உடனே தெரிந்து கொள்ளக் கூடியவர்கள் சீக்கியர்கள்.  அவர்கள் தமிழ்நாட்டில் இல்லை.  அதனால்தான் அந்த விவாதத் தலைப்பு இந்துக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்கிறேன்.

இந்த டாக் ஷோவில் உங்கள் நண்பர் மனுஷ்ய புத்திரனும் பிரதம விருந்தாளியாக கலந்து கொள்ள இருந்தார்.  உன்னைப் போல் ஒருவன் என்ற இஸ்லாமிய விரோதப் படத்தில் பாட்டு எழுதியதற்காக அவரையும் மன்னிப்புக் கேட்க வைப்பதற்காக அழைத்தார்களா என்று தெரியவில்லை.  ஆனால் அவர் உங்களைப் போல் வெகுளி அல்ல.  நிச்சயம் அன்றைய தினம் கோபியின் விழிகள் பிதுங்கி இருக்கும்.  மனுஷ்ய புத்திரனின் விவாதத் திறமையும் கூரிய புத்தியும் உயிர்மையின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகின்றன.  (ஆமாம், நான் உயிர்மையின் நீண்ட நாள் வாசகன்).

ஆனால் இந்த டாக் ஷோ ரத்து செய்யப்பட்டு விட்டது;  ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால்.

நீங்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை மீண்டும் சற்று கவனித்துப் பாருங்கள்.  ஒருவர் ஆங்கிலத்தில் மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்.  அவருக்குத் தமிழ் பேசத் தெரியாது.  இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் அவர் சேர்க்கப்பட்டதன் காரணம், அவர் ஆண்டனியின் பினாமி.  அவர் என்ன சொன்னார் பார்த்தீர்களா? கிறிஸ்தவ மதத்தில் நித்யானந்தா போன்ற போலிகள் இல்லை என்றார்.  பிறகு பவா செல்லத்துரை கண்டனம் செய்ததால் “அங்கேயும் சில பாதிரியார்கள் தவறு செய்கிறார்கள்” என்று ஒத்துக் கொண்டார்.  ‘நாங்கள் இந்து மதத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதிகளை மட்டும் தாக்கவில்லை; பொதுவாகத்தான் இருக்கிறோம்’ என்று போலியாகக் காண்பித்துக் கொள்வதற்காகவே தமிழ் பேசத் தெரியாத அந்த நபர் அந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்பட்டார்.

நீயா நானா நிகழ்ச்சி நடத்தும் ஆண்டனி இந்து மற்றும் இஸ்லாமுக்கு எதிராகவே தொடர்ந்து நடந்து கொள்கிறார்.  இதை உங்கள் இணைய தளம் பகிரங்கப் படுத்த வேண்டும்.
அன்புடன்,
3.5.2010.
***
அன்பு நண்பருக்கு,

நான் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவாத அமைப்புகளுக்கு எதிரானவன்.  என்றாலும் எந்த ஒரு மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள ஆண்டனி போன்ற ஊடக நண்பர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.  தமிழ்நாட்டில் மட்டுமே எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சமாதானமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  விநாயகர் ஊர்வலத்தில் திருவல்லிக்கேணியில் எத்தனையோ முஸ்லீம்கள் ஊர்வலத்துக்கு உதவியாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அதே போல் இங்கே தேவாலயங்களும் தர்ஹாக்களும் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களாகவே உள்ளன.

இந்த அமைதியைக் குலைக்க விரும்பும் செயல்கள் மிகவும் கண்டிக்கத் தக்கவை.  ஆண்டனிக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்.  கடவுளுக்கு மதம் கிடையாது.  எல்லா மனிதர்களும் கடவுளுக்கு முன்னால் சமமானவர்களே.
5.6.2010.
7.20 a.m.
(இந்தப் பதிவை எல்லா பதிவர்களும் தங்கள் வலைமனைகளில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்).
-----------------------------------------------
 மன்னிப்புக் கேள் (8)
June 9th, 2010
உயர்திரு சாரு அவர்களுக்கு

வணக்கம்.
பத்து தலைமுறையாக உயர்கல்வி கற்று,  ஒரு பெரு்நகரத்தில் வாழ்ந்து வரும்  ஒரு பரம்பரையில்
வருகின்ற வாரிசின் பண்பியல் தொகுப்பை உங்கள் எழுத்தை ஐந்து வருடங்களாகப்  படித்து வருவதன் மூலம்  நான் அடைந்துள்ளேன். (எனது அப்பா மற்றும் அம்மாவின் படிப்பு முறையே ஐந்து மற்றும் எட்டு. நான் பனிரெண்டாம் வகுப்பு)
 நிற்க.
உங்களின் தரத்திற்கு நீங்கள் ‘நீயா நானா’  நிகழ்ச்சியிலெல்லாம் கலந்து கொள்வது தேவையில்லாதது என்பது என் தாழ்மையான கருத்து. என்னதான் உங்கள் கருத்து அந்த நிகழ்ச்சியின் மூலம்  மக்களுக்குச் சென்றடைய  வேண்டும் என்று நீங்கள் நினைத்தாலும் அந்த நிகழ்ச்சி பார்க்கும் மக்களின் சிந்தனைத் திறன் மீது எனக்கு நம்பிக்கையில்லை.

பணிவன்புடன்
உங்கள் மாணவன்
பெருமாள்
கரூர்.
பெருமாள்,
***
இனிமேல் அவர்களும் அழைக்க மாட்டார்கள்; நானும் கலந்து கொள்வதாக இல்லை.  இதுவே என் முடிவான முடிவு.
9.6.2010.
4.24 p.m.   
--------------------------------------
மன்னிப்புக் கேள் (கடைசி, கடைசி, கடைசி!)
June 11th, 2010

ஹாய் சாரு,
நீங்கள் பங்கேற்ற நீயா நானா நிகழ்ச்சியை யூட்யூபில் பார்த்தேன். கடுமையான கோபம் ஏற்பட்டது.  எப்போதாவதுதான் தமிழ் சேனல்களை நான் பார்ப்பது வழக்கம்.  அதில் நீயா நானாவும் ஒன்று.  காரணம், அந்த நிகழ்ச்சி எனக்குப் பிடித்திருப்பதால் அல்ல; மற்ற குப்பைகளை விட இந்தக் குப்பை பரவாயில்லை; அவ்வளவுதான்.  அன்றைய தினம் கோபிநாத் உங்களிடம் கேட்டது அந்த நேரத்தில் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது.  முழுக்க முழுக்க பழிவாங்கும் உணர்வே அவரிடம் தென்பட்டது.  ஒரு சிறுமியை சாலையோரத்தில் வைத்து வன்புணர்ச்சி செய்வதற்கு ஒப்பான செயல் அது. உங்கள் இடத்தில் நான் இருந்திருந்தால் மதுரை பாஷையில் பதில் சொல்லியிருப்பேன்.  நான் மதுரைக்காரன்.

இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.  இவ்விஷயத்தை நீங்களே கையாள்வதற்கு உங்களுக்கு முழுத்தகுதியும் உள்ளது. இருந்தாலும் நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்பதற்காகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
மகேந்திரா
4.6.2010.
***
சாரு,
நீங்கள் குறிப்பிட்ட அந்த வீடியோவைப் பார்த்தேன்! நீங்கள் சொல்வது சரிதான்! கோபி கேள்வி கேட்கும்போது, தானாக தோன்றி கேட்கும் பட்சத்தில் பொறுமையாக கேட்பார்! ஆனால், கேள்வி கேட்கும்போது, சடாரென்று ஒரு கோபத்துடன் கேட்கிறார்! What a fraud!
அதே போல, மன்னிப்பு கேட்கச்சொல்லிய விஷயத்தில் கோபியின் a.k.a. விஜய் டி.வி.யின் தரம் அதலபாதாளத்துக்கு போய்விட்டது!
அடுத்த முறை எவனாவது இப்படி கேட்டால், “மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது! நாளைக்கு என் ப்ளாக்கில் எழுதுகிறேன்! அதைப் படிச்சுக்கோ” என்று சொல்லிவிடுங்கள்!
நான் உங்களுடைய ரசிகனாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உங்கள் எழுத்தில் தெரியும் நேர்மை எனக்குப் பிடித்திருக்கிறது.
வாழ்த்துக்கள்.
ரவி பாலகிருஷ்ணன்
4.6.2010.
***
பாசமுள்ள சாரு,
நான் உங்களுடைய தீவிர ரசிகன்.உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் .மீண்டும் ஒரு முறை நீங்கள் நீயா நானா-வில் கலந்து கொண்டு கோபி மற்றும் அந்தோனி -யின் மூக்கை உடைக்குமாறு வேண்டி கொள்கிறேன்.
பாசமுள்ள,
அருண்.
4.6.2010.
***
டியர் சாரு,
எண்பதுகளில் நடந்த சம்பவம் இது.  தூர்தர்ஷனில் ஒரு டாக் ஷோவுக்காக சுஜாதாவை அழைத்திருந்தார்கள்.  கல்லூரி மாணவர்களோடு சுஜாதாவின் கலந்துரையாடல்.  மாணவர்கள் கேள்வி கேட்க சுஜாதா பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஆரம்பத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தது.  ஆனால் போகப் போக சுஜாதாவின் மீதான தாக்குதல் என்பதாகப் போய் விட்டது அந்த நிகழ்ச்சி.  சுஜாதா அதை சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.  அவரால் பதில் சொல்ல முடியவில்லை.  உடனே மாணவர்கள் அதைத் தங்களின் வெற்றியாக எடுத்துக் கொண்டு அவரை மேலும் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.  பார்க்கவே பயங்கரமாக இருந்தது.  உங்களுக்கு அந்தச் சம்பவம் ஞாபகம் இருக்கிறதா? அந்த நிகழ்ச்சியின் போது சுஜாதாவின் முகம் எப்படி இருந்தது என்று இப்போதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.  உங்களுடைய விஜய் டி.வி. அனுபவம் எனக்கு அதைத்தான் நினைவு படுத்துகிறது.
மாலா,
யு.எஸ்.
8.6.2010.
***
சாரு,
விஜய் டி.வி.யில் கலந்து கொள்வதில்லை என்ற உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.  உங்கள் கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு உங்களுக்குப் பூரண உரிமை இருக்கிறது. So,  go there fight with them, have fun with them,do watever u want. don t give any restriction to yourself. charu nivedita , the great liberal writer can t tolerate such situations.
பாமினி,
ஆம்ஸ்டர்டாம்
10.6.2010.
***
சாரு,
அருகதைப்பட்டதை விட அதிகமாய் விமர்சிக்கப்பட்டாலும், சாரு,விஜய்  டிவி போண்றவற்றின் நிரந்தரப்  பயனாளர் என்பதாலும் வினையாற்றுவதில் தவறில்லை என்பதாய் உணர்கிறேன்.
சாரு, நித்யானந்தா , விஜய் டிவி ஆகியவற்றை முன்னிறுத்தி செய்யப்படும் பெருவாரியான விமர்சனங்கள் பெருத்த ஏமாற்றத்தையே அளிப்பதாக உள்ளது. விமர்சனங்கள் வெறும் தட்டையான தனி மனிதத் தாக்குதலாகவும், ‘மடக்கி விட்டேன் பாரு ‘ என்று மொண்ணையாகக் கொக்கொரிப்பதாகவும் சுருங்கி விடுகிறது.
நித்யானந்தாவை அறிமுகப்படுத்தவோ, விளம்பரப்படுத்தவோ வல்லமை கொண்ட ஒரு நிறுவனம் அல்லது ஊடகம் என்ற வகையில் சாருவின் வலைத்தளம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதில்லை. நித்யானந்தாவே ஒரு பெரிய நிறுவனம்தான்.

சாருவின் வாச‌க‌ர்க‌ளோ த‌மிழ்த் திருநாட்டின் பெருவாரியான‌ ஜ‌ன‌ர‌ஞ்ச‌க‌  ‌ரசனைக‌ளிலிருந்து மாற்று சிந்த‌னைகளுக்கும், மாற்று எழுத்துக்கும் வேண்டி சாருவையும் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள்.ஆக‌வே ஒரு த‌வ‌றான‌ த‌த்துவ‌த்தை சாருவினால் ‌தன‌து வாச‌க‌ர்க‌ள் மீது திணிக்க‌ முடியாது. சாரு எழுதும் எல்லாவ‌ற்றையும் படிப்ப‌வ‌ன் என்றாலும் கூட‌ சாருவின் மிக்க‌ மிகு க‌ருத்துக்க‌ளிலும் உட‌ன்பாடு
இல்லாத‌வ‌ன். இந்த‌ ‘க‌ட‌வுளை க‌ண்டேன் ‘ தொட‌ரையும், இன்ன‌ பிற‌ பாபா  தொட‌ர்க‌ளையும் , சாருவின் வைன்,பெண்,யாத்திரை ப‌ற்றிய‌ எழுத்துக்களைப்போல‌ வெகு லாவ‌க‌மாக‌வே எதிர் கொண்டேன். அத‌னால் எனக்கு ஏமாற்ற‌ம் இல்லை. இப்பொது குய்யோ, முய்யோ என்று குதிக்கும் ‌இவர்க‌ளில் எத்த‌னை பேர் சாருவின் இந்தத் ‌ தொட‌ர் கால‌த்தில் எதிர்வினை ஆற்றினார்க‌ள் என்று சாரு தெரிவிக்க‌ வேண்டும்.

விஜ‌ய் டிவி குறித்து:  ச‌ந்தேக‌ம் இல்ல‌மால் சாருவைப் போல த‌மிழின் சிற‌ந்த‌ டிவி.. Sterotype த‌மிழ் சேன‌ல்க‌ளுக்கு இடையில் கொஞ்ச‌ம் ச‌ந்தோச‌மாக‌ வைத்திருக்கும் ஒரே டிவி.  ஆனால், அற‌ம் ப‌ற்றிப்  பேச‌ அவ‌ர்க‌ளுக்கு எந்த‌ உரிமையும் இல்லை. கார‌ண‌ம் 12 ம‌ணிக்கு மேல் த‌மிழ‌க‌த்தின் மிக‌ப் பெரிய‌ திருட‌ர்க‌ளுக்கு புக‌ழூட்டும் ஊட‌க‌ வேலையையே அது செய்கிற‌து. ச‌ராச‌ரி ம‌னித‌னின்  செக்ஸ் பிரச்சினையையும், ப‌ய‌ங்க‌ளையும் காசாக்குகிற‌ மூலிகை ம‌ருத்துவ‌ர்க‌ள், ஜோதிட‌ வியாபாரிக‌ள், துர‌திர்ஷ்ட‌க்க‌ல் விற்ப‌னையாள‌ர்க‌ளுக்கு அது துணை போகிற‌து. என‌வே விஜ‌ய் டிவிக்கோ, ஆன்றணிக்கோ சாருவை விம‌ர்சிக்க‌வோ , ம‌ன்னிப்புக் கேட்க‌ வைக்க‌வோ அருக‌தை இல்லை.

நித்யான‌ந்தா , ஸேரோ, ப‌ப்புவைப் போல் சுவ‌ராசிய‌மாக‌ உங்க‌ள் ப‌க்க‌ங்க‌ளில் க‌ட‌ந்து போனார் என்ப‌தை விட‌ , எந்தத்‌ தாக்கீடும் த‌ர்க்க‌ ரீதியாக‌ சிந்திக்கிர‌ வாச‌க‌ர்க‌ளில் உண்டாக்கி இருந்திருக்க‌ முடியாது என்பதாகவே என‌தும் அனுமானம்.

ந‌ல்ல‌ ஆயுள் வேண்டிக் கொண்டு,
சிராஜ்
11.6.2010.
***

இதுபோல் இன்னும் ஒரு 50 கடிதங்களாவது இருக்கும்.  எல்லாவற்றையும் பதிவேற்றம் செய்ய இயலாது.  இத்துடன் நீயா நானா சர்ச்சையை முடித்துக் கொள்கிறேன். அதற்கு முன்னால் சில விஷயங்கள்:

பாமினி சொல்வது போல் பலரும், ‘வேண்டாம்; கலந்து கொள்ளாதீர்கள்’ என்று மிகப் பலரும் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.  எனக்கு இது விஷயத்தில் ஒரு முடிவான கருத்தை எட்ட முடியவில்லை.  அதுவும் சரி, இதுவும் சரி என்றே குழப்பமாகத் தோன்றுகிறது.  மேலும், நீயா நானா கும்பல் என்னை இனிமேல் அழைக்காது என்பது நிச்சயம்.

ஆண்டனி என் மீது கொண்டிருக்கும் வன்மத்துக்கான காரணத்தை விஜய் டி.வி.யின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் ஒருவர் தெரிவித்தார்.  அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு ஆண்டனி பணம் எதுவும் தருவதில்லை என்ற விஷயத்தை நான் அம்பலப்படுத்தியதை விஜய் டி.வி.யின் நிர்வாகக் கூட்டத்தில் விவாதித்துள்ளனர்.  நம் சீர்திருத்தவாதி ஆண்டனி எல்லோருக்கும் பைசா கொடுத்துக் கொண்டிருப்பதாகக் கணக்கு காண்பித்து அதையெல்லாம் தன் பாக்கெட்டில் போட்டுக் கொள்வது நிர்வாகத்துக்குத் தெரிந்து ஆண்டனிக்கு அன்றைய தினம் விழி பிதுங்கியிருக்கிறது.  அந்த வன்மத்தையே அவர் என் மீது காண்பித்திருக்கிறார்.

இப்போதும் பாருங்கள்; எனக்கு 4000 ரூபாய்க்குக் காசோலை அனுப்பியிருக்கிறார்.  ஆனால் பவா செல்லத்துரைக்கு பட்டை நாமம்.  போன் செய்து கேட்டதற்கு “நீங்கள் ஆண்டனியின் நண்பர்; உங்களுக்கு எதற்கு பைசா?” என்று கேட்டாராம் ஆண்டனியின் உதவியாளர்.  என்னிடம் புலம்பித் தள்ளினார் பவா.  அந்த போன் உரையாடலை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

அடுத்தவன் காசை அபகரித்து வாழும் இப்படிப்பட்டவர்கள்தான் சமூக சீர்திருத்தம் பற்றி டாக் ஷோ நடத்துகிறார்கள்!

அது மட்டுமல்ல; மகேந்திரா எழுதியிருக்கும் அந்த உதாரணத்தையே நான் என் நண்பர்கள் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தேன்.  என்னைப் பொறுத்தவரை, நடுத்தெருவில் வைத்து ஒரு சிறுமியை வன்புணர்ச்சி செய்தது போலவே உணர்ந்தேன்.  அதே உணர்வை மகேந்திரா எழுதியிருக்கிறார்.  அதனால்தான் இப்போது வரிந்து வரிந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.  நான் ஒன்றும் ராம்ஜெத்மலானி அல்ல.  என்னுடைய இடம் எழுத்து.  பேச்சு என்று வந்தால் அப்படித்தான் ஒன்று கிடக்க ஒன்று பேசி வைப்பேன்.

இப்போதும் ஞாபகம் இருக்கிறது.  என் விவாகரத்து வழக்குக்காக நீதிமன்றம் செல்ல வேண்டி வந்த போது நீதிபதி என்னிடம் என் முகவரியைக் கேட்டார்.  எனக்கோ என் முகவரி எப்போதுமே ஞாபகம் இருந்ததில்லை; இப்போது கூட.  நான் திருதிரு என்று முழித்ததும் அந்த நீதிபதி செம கடுப்பாகி விட்டார்.  நல்லவேளை, என் மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைப் போடவில்லை.

ஆனால் இனிமேல் டி.வி. நிகழ்ச்சிகளில் இது போன்ற கெரில்லாத் தாக்குதல்களுக்கு எப்போதுமே தயாராக இருப்பேன்.

மாலா சொல்லும் சுஜாதா டாக் ஷோ பற்றி எனக்குத் தெரியாது.  நான் அப்போது தில்லியில் இருந்தேன்.  அப்போது எனக்குத் தமிழ்நாடு பற்றி எதுவுமே தெரியாது.  கவுண்டமணியைப் பார்த்து “நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?” என்று கேட்ட ஆள் நான்.  தூர்தர்ஷனாவது, மண்ணாங்கட்டியாவது.  அது மட்டுமல்ல; பயங்கர திமிர் பிடித்தவனாகவும் இருந்தேன்.   ஒரு பிரபலமான தொலைக்காட்சியின் காலை வணக்கம் நிகழ்ச்சிக்கு அழைத்த போது “முதலில் ரஜினிகாந்தை அழையுங்கள்; அப்புறம் நான் வருகிறேன்” என்று சொன்னேன்.

இப்போது எனக்கு என்ன ஆயிற்று?  என் கருத்து பரவலாகச் சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்; அவ்வளவுதான் வித்தியாசம்.  மேலும், மாலா, சுஜாதாவைக் கேள்வி கேட்ட மடையர்கள் யாருமே அவருடைய கணையாழி கடைசி பக்கங்களைப் படித்திருக்க மாட்டார்கள்.  ஆனால் ஒன்று, முன்னாள் ஜெயகாந்தனிடம் இவர்கள் மாட்ட வேண்டும். கதற அடித்திருப்பார்.  நானும் அப்படித்தான் இருந்தேன்.  இந்த தியானம் யோகா எல்லாம் செய்துதான் இப்படி மிருதுவாக மாறி விட்டேன்.  என்ன செய்வது?

நித்தி மேட்டரை வைத்துக் கொண்டு என் மீது அவதூறு செய்பவர்கள் யாருமே என் வாசகர்கள் கிடையாது.  சந்தர்ப்பம் கிடைத்தால் எனக்கு தர்ம அடி கொடுக்க வேண்டும் என்று காத்திருந்த ரௌடிகளுக்கு இப்போது நானே ஒரு ஆயுதத்தை வழங்கி விட்டேன்.  அவ்வளவுதான்.  என் வாசகர்கள் என்னை விட புத்திசாலிகள்…
11.6.2010.
10.58 a.m.

Sunday 8 December 2013

மண்டையும் ஞானதிருஷ்டியும்

a prediction…November 12th, 2011
தேர்தல் நடப்பதற்கு முன்னதாக எல்லா பத்திரிகைகளும் திமுக வெல்லும் என்று சொல்லிக் கொண்டிருந்த போது திமுகவுக்கு 30 சீட்டுக்குள்தான் கிடைக்கும் என்று எழுதினேன்.  உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இப்போது சொல்கிறேன்… இந்த முறை கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்து விடும்.  எனக்கு இது எப்படித் தெரியும்?  தியானத்தில் கிடைத்த செய்தி.
பின் குறிப்பு:  இதற்கும் என்னுடைய அரசியல் கருத்துகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை…
மேற்கண்ட பதிவை 12-ஆம் தேதி எழுதினேன்.  அப்போது பலரும் கிண்டல் செய்தார்கள்.  இப்போது 16 தினங்களில் நான் சொன்ன வாக்கு பலித்திருக்கிறது.
கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று திருஷ்டியில் தெரிந்ததுமே வஸந்தி ஸ்டான்லிக்கு இது பற்றிக் குறுஞ்செய்தி அனுப்பினேன்.
தாந்த்ரீகமும் மாந்த்ரீகமும் சரியாகப் பின்பற்றப் பட்டால் நமது திருஷ்டி கூர்மையாகும் என்பதற்கு இது எனக்கு இன்னும் ஒரு சான்று.
குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே ஒருவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது நமது சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குறைபாடு.  நாளையே அவர் செய்த குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால் அவர் இதுவரை அனுபவித்த சிறைத் தண்டனைக்கும் அது அவருடைய வாழ்வில் ஏற்படுத்தும் துயரங்களுக்கும்  யார் பொறுப்பு?
கனிமொழியை வரவேற்கிறேன்.  சிறையில் அவர் தியானம் கற்றுக் கொண்டார் என்று பத்திரிகைகளில் வாசித்தேன்.  அவர் அதை நிறுத்தி விடாமல் தொடர வேண்டும்…

Monday 2 December 2013

பாட்டா ஷூ...
April 19th, 2010

சில தினங்களுக்கு முன்பு பாலா போன் செய்தான்.  வயது 24.  என் மகன் கார்த்திக்கின் நண்பர்கள் அனைவரும் என்னை அங்கிள் என்று அழைப்பதால் அவர்களுடன் நெருங்க முடிவதில்லை.  ஆனால் பாலா அப்படி அல்ல.  பெயர் சொல்லியே அழைப்பான்.  இவ்வளவுக்கும் அவனுடைய அம்மாவின் மூலம் நண்பனானவன் பாலா. ஒருநாள் என் நண்பர் ஜோவுக்கு போன் செய்து செருப்பு வாங்க வேண்டும்; எங்கே போகலாம் என்று கேட்டேன்.  அவர் பாட்டா ஷோ ரூம் இருக்கும் இடத்தைச் சொன்னார்.  என் எழுத்தின் மிகத் தீவிர வாசகராக இருந்தும், ரெமி மார்ட்டின் குடித்தும், Calvin Klein ஆடைகள் அணிந்திருந்தும் இப்படி பாட்டா பெயரைச் சொல்லி விட்டாரே என்று அன்றைய நாள் முழுதும் எனக்கு விசனமாகப் போனது. எத்தனை முறை எழுதியிருக்கிறேன், எனக்கு இந்த ஹமாம் சோப்பு, பாண்ட்ஸ் பவுடர், பனியன், பாக்கெட்டில் சொருகிய ரெனால்ட் பேனா போன்ற மிடில் க்ளாஸ் விஷயங்களெல்லாம் பிடிக்கவே பிடிக்காது என்று.  ஜோ மறந்து விட்டார். காரணம், வயது.  ஜோவின் வயது 35.  உடனே பாலாவுக்கு போன் செய்தேன்.  ஆழ்வார்ப்பேட்டையில் காப்லர் செல்லுங்கள் என்றான்.
சில தினங்களுக்கு முன்பு “இன்று ஐ.பி.எல். மேட்ச் இருக்கிறது; எங்கேயாவது போய் குடித்துக் கொண்டே மேட்ச் பார்க்கலாமா?” என்று கேட்டான் பாலா.    நான் தொலைக்காட்சியே பார்ப்பதில்லை என்பதால் இந்த ஐ.பி.எல். என்ற விஷயத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  ஆனால் பாலா பார்ப்பதில் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை என்பதால் மாலை நான்கு மணிக்குக் கிளம்பினோம். பாலா ஷூ அணியாமல் வந்து விட்டதால் டென்.டௌனிங் செல்ல முடியவில்லை.  செருப்புக் காலோடு போவதானால் டாஸ்மாக்தான் போக வேண்டும்.  பிறகு யோசித்துப் பார்த்த போது செருப்புக் காலோடு அனுமதிக்கும் இடம் சவேரா ஓட்டலில் உள்ள மூங்கில் பார் தான் என்பது ஞாபகம் வந்தது.
பாலாவின் செருப்புக் காலைப் பார்த்ததும் இன்னொரு பாலா ஞாபகம் வந்தார்.  அல்மோஸ்ட் ஐலண்ட் கருத்தரங்கிற்காக தில்லி சென்ற போது அதே விமானத்தில் வந்த இயக்குனர் பாலா.  நான் கடவுளுக்காக ஜனாதிபதி விருது வாங்கச் செல்கிறார்.  அவருடைய செருப்புக் காலைப் பார்த்து ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  இப்படியேதான் ஜனாதிபதி மாளிகைக்கும் போவாரோ என்று நினைத்தேன்.  பிறகு புகைப்படங்களைப் பார்க்கும் போது ஜனாதிபதியிடம் விருது வாங்கும் போதும் அதே செருப்புக் கால்தான்.  அதோடு சட்டையில் வேறு இரண்டு பட்டன்களைத் திறந்து விட்டிருந்தார்.  கலைஞன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.  அதிகாரிகளுக்காக நம்மை மாற்றிக் கொள்ளவே கூடாது.
மூங்கில் பாரில் தொலைக்காட்சிப் பெட்டி என் முதுகுப் பக்கம் இருக்குமாறு பார்த்து அமர்ந்து கொண்டு பாலாவிடம் “ஐ.பி.எல். மேட்சில் எத்தனை ஓவர்?” என்று கேட்டேன்.  அப்போது அந்தப் பக்கமாக வந்த பேரர் என்னை வெளிநாட்டுக்காரன் என்று நினைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் ஐ.பி.எல். பற்றி விளக்க ஆரம்பித்தார்.  ஐ.பி.எல். பற்றித் தெரியாதவர் நிச்சயமாக இந்தியராக இருக்க முடியாது என்ற அவருடைய எண்ணத்தை மெச்சிக் கொண்டே “நான் லோக்கல் மைலாப்பூர்காரன்தான்” என்றேன்.
***
இப்போதெல்லாம் அவ்வளவாக ராயர் கஃபே பக்கம் செல்வதில்லை.  கொழுப்பைக் குறைக்க கன்னாபின்னா என்று நடைப் பயிற்சி செய்து விட்டு ராயர் கஃபேயில் இட்லியாக முழுங்கினால் சரி வராது என்றுதான் அங்கே அடிக்கடி செல்வதில்லை.  சென்ற வாரம் ஒருநாள் காலையில் ஏழு மணிக்குச் சென்றேன்.  சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண், பார்த்த முகமாகத் தெரிந்தது.  பிறகு அவரே ஹலோ சொன்னதும் தெரிந்து விட்டது.  முன்னாள் நடிகை சங்கீதா.  அவர் பக்கத்தில் அவர் கணவர் சரவணன்.  இருவரையும் இரண்டொரு முறை தியான வகுப்புகளில் சந்தித்திருக்கிறேன்.  எனக்கு சங்கீதாவைப் பார்க்கும் போதெல்லாம் நடிகர் விஜய்யின் ஞாபகம் வரும்.  பிட் படங்களில் நடித்துக் கொண்டிருந்த விஜய்க்கு நல்லதொரு திருப்பத்தைக் கொடுத்த படம் ’பூவே உனக்காக’.  அதில் விஜய்யின் ஜோடி சங்கீதா. அந்தப் படம் வந்து இந்தப் பதினான்கு வருடங்களில் விஜய்யின் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது.  விஜய்யின் வளர்ச்சியைப் போன்றதுதான் ஜெயமோகனின் வளர்ச்சியும்.  இப்படிப்பட்ட நடிகரும் இப்படிப்பட்ட எழுத்தாளரும் தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியம்.
ராயர் கஃபேயின் அன்றைய தினம் சோமனையும் சந்திக்க முடிந்தது.  அவரைப் பார்த்து நீண்ட காலம் ஆகிறது.  சங்கீதக் கலைஞர்.  சங்கீத விஷயங்களை அவர் பேசக் கேட்க வேண்டும். நேரம் போவதே தெரியாது.  கர்னாடக சங்கீதத்தில் கடந்த 30 ஆண்டுகளாக பிரசித்தி பெற்ற அத்தனை கலைஞர்களின் கச்சேரியையும் நேரிலேயே கேட்டிருக்கிறேன்.  நான் ஆழ்ந்து ரசித்து, ஆனால், எழுதாதமல் விட்டிருக்கும் விஷயங்களில் கர்னாடக சங்கீதமும் ஒன்று.  சோமன் கே.வி. நாராயணஸ்வாமியின் சிஷ்யர்.  கே.வி.என். அரியக்குடி ராமானுஜ அய்யங்காரின் சிஷ்யர்.
அன்றைய தினம் சோமன் ஒரு விஷயம் சொன்னார்.  அய்யங்காரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஒருமுறை கேவிஎன் எங்கோ போய் விட்டாராம்.  இரண்டொரு தினங்களில் கே.வி.என். திரும்பி வந்த போது அய்யங்கார் தன் சுருக்குப்பையைத் திறந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொடுத்து “பணம் வேண்டுமானால் என்னிடம் கேள்; எங்கேயும் போய் விடாதே” என்று சொல்லியிருக்கிறார்.  அய்யங்கார் எந்தக் காரணத்திற்காகவும் ஒரு தம்பிடிக் காசு செலவு செய்ய மாட்டார் என்பதும், 80 ஆண்டுகளுக்கு முன்பு 10 ரூபாய்க்கான மதிப்பு எவ்வளவு இருந்திருக்கும் என்பதும் இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய விஷயங்கள். குரு சிஷ்ய பாரம்பரியத்தின் அருமைக்கு இது ஒரு உதாரண சம்பவம்.
1938-இல் மியூசிக் அகாதமியில் அய்யங்கார் ஆற்றிய உரை அந்தக் காலத்தில் மிகவும் புரட்சிகரமான ஒன்று.
19.4.2010.
12.40 p.m.

Saturday 30 November 2013

அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும் மண்டையின் எழுத்து - நான்-ஸ்டாப் காமெடி

premieres gouttes de pluie…
July 6th, 2011

’ஏன் அதிகம் எழுதுவதில்லை?’ என்று கேட்டார் நண்பர் ஒருவர்.  இணையதளத்தில்தான் அதிகம் எழுதுவதில்லை; மற்றபடி எழுத்து தொடர்பான வேலைகளில்தான் அதிகம் மூழ்கியிருக்கிறேன் என்றேன்.

ஸீரோ டிகிரி இந்தி மொழிபெயர்ப்பு மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கிறது.  நானும் கூடவே அதில் சம்பந்தப்பட்டிருக்கிறேன்.  நான் ஸீரோ டிகிரியில் அதிகம் சம்ஸ்கிருதம் கலந்த தமிழைப் பயன்படுத்தி இருப்பதால் இந்திக்கு அது லகுவாக இருக்கிறது.

ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் மொழிபெயர்ப்பிலும் துணை செய்து கொண்டிருக்கிறேன்.

ராஸ லீலா ஆங்கில மொழிபெயர்ப்பு ஒரு பக்கம் என்னை அதிகம் வேலை வாங்கிக் கொண்டிருக்கிறது.  அதன் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுள் அடியேனும் ஒருவன்.

இதற்கிடையில் டாக்டர் ராமானுஜம் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் தேகம் நாவலை அவ்வப்போது சரி பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  இவருடைய மொழிபெயர்ப்பு என்னை அதிகம் வேலை வாங்கவில்லை.

இவ்வளவுக்கு இடையில் எக்ஸைல் நாவலை அதிவேகத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அடியேன் எழுதிய முதல் ஃப்ரெஞ்சுக் கவிதை அதில் இடம் பெறுகிறது.  தலைப்பு: premieres gouttes de pluie.  கவிதை எதைப் பற்றியது?  கவிதையை இங்கே வெளியிடலாமா?  மூச்… இதை வெளியே சொன்னதற்கே என் மேனேஜர் என்னைக் கன்னாபின்னா என்று திட்டுவார்.  நாவல் வெளிவரும் வரை வாயே திறக்காதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் என் ஜெர்மன் மொழிபெயர்ப்பாளரின் வற்புறுத்தலால் ஸால்ஸா வகுப்புக்கு வேறு சென்று கொண்டிருக்கிறேன்.  58 வயது ஸால்ஸாவுக்குத் தடை இல்லையாம்.  கலகம் காதல் இசையில் ஸால்ஸா பற்றி விரிவாக எழுதியிருப்பது எனக்கு உள்ள கூடுதல் தகுதியாம்.  சே… என்ன வாழ்க்கைடா இது!

Saturday 16 November 2013

சாருவின் மனைவி அவந்திகா நித்யானந்தவிற்கு எழுதிய கடிதம்

இதன் ஒரிஜினல் இந்த சுட்டியில் உள்ளது: http://bit.ly/1aKJo0H

காமம் என்று வந்தால் தாய், மகன், அப்பா, மகள் உறவுகூட அத்துப்போய்விடும் என்று நான் அறிந்து அன்று விக்கித்துப்போனேன்.  என் மகன் கார்த்திக் இதைப்பற்றிக் கேட்டபொழுது உன் அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றுவிடு என்றான்.”
சாரு நிவேதிதாவைப்பற்றி சொல்லப்பட்ட இந்த வரிகளைச் சொன்னது யார்?
பேஸ் புக்கில் சாரு நிவேதிதாவால் செக்ஸ் டார்ச்சர் அனுபவித்த அப்பாவி பெண் எழுத்தாளர் அல்ல.

சாருவின் சொந்த மனைவி அவந்திகா அவர்கள், தம் கைப்பட எழுதிய கடிதத்தில் இருக்கும் சில பகீர் வரிகள்தான்  இவை.

திருமதி அவந்திகா அவர்கள் (ஆன்மீக பெயர் : மா ஆனந்த வள்ளி) 2009 வருடம் நித்யானந்தா தியான பீடத்தில் நடத்தப்பட்ட பத்து நாட்கள் தியான முகாமில் (நித்யானந்தம் தியான முகாம்) கலந்துகொண்ட பொழுது, தன் குருநாதரான பரமஹம்ஸ நித்யானந்தரிடம் தன் கைப்பட எழுதிய 9 பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தை கண்ணீருடன் அளித்தார்.
நான் நித்யானந்த பதிப்பகத்தில், தமிழ் பிரசுர பிரிவின் பொறுப்பாளராக இருந்ததால் தமிழில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் என் கைக்கு வந்தது.

இணையதளத்தின் வழியாக தனது வாசகியிடம் வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்தியதற்காக எழுத்தாளர் சாரு நிவேதிதா மீது எழுந்த குற்றச்சாட்டு ஆதாரத்தோடு எழுந்தாலும், தன்னைக் களங்கப்படுத்தவும், தன் புகழைக் கெடுக்கவும் நடத்தப்பட்டுள்ள அவதூறு இது என்றும், தன்னுடைய பாஸ்வேர்டை ஒரு எழுத்தாளர் நண்பரிடம் கொடுத்ததாகவும், அவர்தான் தன் பெயரில் இப்படி விளையாடியிருக்க வேண்டும் என்றும், அந்த உரையாடலுக்கும் தனக்கும் சம்பந்தமே கிடையாது என்றும் சொல்லி தன்மீதான மொத்தக் குற்றச்சாட்டையும் மறுப்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் வேலை.  ஆனால் சாருவைப் பற்றி அவர் மனைவியே எழுதிக் கொடுத்த உண்மைகளில் சில, ‘சாருவிற்கு ஆறுமாதத்திற்கு ஒருமுறை ஒரு புதுக் கல்லூரி மாணவி மாறிவிடுவாள்’ (ஆதாரம்: அவந்திகா தன் கைப்பட எழுதிய 9 பக்க கடிதம்).

இதையும் தாண்டிய அதிர்ச்சிகரமான அடுத்த வரிகளை சாருநிவேதிதாவே தன்னைப் பற்றி சொல்லியிருக்கிறார்.. ஓரினச் சேர்க்கையை ரொம்ப தீவிரமாக நான் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன்,” என்று சொல்லியுள்ளார். (ஆதாரம்: புத்தகத்தின் பெயர்: ஒழுங்கின்மையின் வெறியாட்டம் பக்கம்: 85 ஆசிரியர்: சாரு நிவேதிதா).

பெண்களுக்கு ஆபாச கு–கு அனுப்புவதும், சாட் செய்வதும் சாரு நிவேதிதாவின் காமவிகார விளையாட்டுகளில் ஒன்று.  அதற்கான ஆதாரம் சாரு நிவேதிதா எனக்கு அனுப்பிய ஆபாச SMS 094422 99992 என்ற தன்னுடைய சொந்த மொபைலிலிருந்து 09442288705 என்ற என்னுடைய மொபைல் போனுக்கு ஏப்ரல் 24, 2010 அன்று ஒரு ஆபாச SMS வந்தது.  அந்த கு–கு வந்த உடனேயே என்னுடைய மொபைல் போனை switch off செய்து விட்டேன்.  சாரு நிவேதிதா அதோடு விடாமல் மே 7, 2010 குமுதம் ரிப்போர்ட்டரில் என்னைப்பற்றி அவதூறு கட்டுரை எழுதினார்.

இவ்வளவு கீழ்த்தரமான மனிதர் ஒருவர் இந்து சன்யாசினிகள் பற்றியும், குருநாதர் பற்றியும் அவதூறாக தொடர்ந்து கட்டுரைகளை எழுதிக்கொண்டிருந்தபொழுது, எனக்கு அவரைப்பற்றி அவர் மனைவி தந்த கடிதம் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.  அப்பொழுது அந்தக் கடிதத்தை பத்திரிகைக்கு கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்து ஆஸ்ரம நிர்வாகத்தினரிடம் ஒப்புதல் கேட்ட பொழுது, அவர்கள் இதைப்பற்றி என் குருநாதரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

அப்பொழுது என் குருநாதர், ஒவ்வொரு மனிதரும் இன்னொருவரை பற்றிச் சொல்லும்பொழுது அவர் தன்னைப்பற்றித்தான் சொல்லுகின்றார், என்னை குருவாக ஏற்று நம்பிக்கையுடன் தந்த கடிதத்தை நாம் நம் தேவைக்காகப் பயன்படுத்தக்கூடாது.  அவர்கள் இப்பொழுது என்னை குருவாக ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், அவதூறு செய்தாலும் அந்த நேரத்தில் என் மீது வைத்த நம்பிக்கையால் தந்தார்கள். நான் அந்த நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றேன்,” என்று ஒப்புதல் தர மறுத்துவிட்டார்கள். அதற்கு பிறகு சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதைச் செய்வோம் என்று முடிவெடுத்தேன்.
நான் சட்ட ரீதியாக வழக்கு தொடரப்போகிறேன் என்று தெரிந்துகொண்டதும் சாரு நிவேதிதா ஆள் வைத்து என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார்.

உயிர்போனாலும் பரவாயில்லை என்று துணிந்து அவர் மீது பிடதி காவல் நிலையத்தில் ஜூலை 8, 2020 அன்று வழக்கு பதிவு செய்தேன் (FIR No :403/2010).

உயிரைப் பணயம் வைத்து இவ்வளவு தூரம் துணிந்து முயற்சி செய்ததற்கு காரணம், மிகவும் புனிதமான குரு சிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்திய இவருக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்பது மட்டும்தான். இதைப்போல் எதிர்காலத்தில் எந்தப் போக்கிரிக்கும் குரு சிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்தும் திமிர் வரக்கூடாது என்ற சமூக பொறுப்போடும்தான் வழக்கு பதிவு செய்தேன். (நித்யானந்தாவின் செக்ஸ் ஒப்பந்தத்தைப் படித்துவிட்டுத்தான் கையெழுத்துப் போட்டீர்களா? உங்களுடன் அவர் மேற்படி தாந்திரிக் செக்ஸ் வைத்துக்கொண்டாரா? என்று லட்சக்கணக்கான மக்கள் படிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் ஆபாசமாக எழுதியிருந்தார்)

இவ்வளவு ஆபாசமாக எழுதியதற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்லி சட்ட ரீதியாக ஜூலை 19 2010 அன்றும், அக்டோபர் 4 2010 அன்றும் வக்கீல் மூலமாக முறைப்படி நோட்டீஸ் அனுப்பினேன்.

ஒரு பெண்ணால் எவ்வளவு துயரங்களையும் தாங்கிக்கொள்ள முடியும்.  ஆனால் அவளுடைய ஒழுக்கத்தை சந்தேகப்பட்டால் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது.

ஒரு சன்னியாசினியான என்னால் சாதாரண அவதூறுகளை கால் தூசுக்கு சமமாகக் கருதி தாங்கிக்கொள்ள முடியும்.  ஆனால் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயம், என்னுடைய மாதாவாக, பிதாவாக, தெய்வமாக உணருகின்ற என் குருநாதரைப் பற்றியும், என்னைப்பற்றியும் அவதூறாக எழுதி குருசிஷ்ய உறவைக் கொச்சைப்படுத்தியதுதான். அதை என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை.

அதனால் சாரு நிவேதிதாவின் மேல் பெங்களூரு Additional Magistrate Court ல்  வழக்கு தொடர்ந்திருக்கின்றேன்.  (வழக்கு எண் BPR: 75 37/ 2011). என்னிடம் எல்லா ஆதாரமும் சரியாக உள்ளதால், சட்டத்தினிடமிருந்து இனித் தப்ப முடியாது என்று நன்றாகத் தெரிந்துகொண்டு தொடர்ந்து மர்ம நபர்களால் கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இதுபோன்ற மனிதர்கள் புனிதமான சமூகசேவை குணம் கொண்ட எழுத்தாளர் குலத்திற்கே வாழும் அவமானச் சின்னங்கள்.
பத்திரிகையாளர் என்ற போர்வையில் பெண்களை அவதூறு செய்கின்ற இந்த சாரு நிவேதிதாவின் மனைவியே வெறுத்துப்போய் அவரின் தோழியிடம் சொன்ன வார்த்தைகள் பார்ப்பவர்களையெல்லாம் படுக்கைக்கு அழைக்கும் காம மிருகம் அவன், கொடூரன். சாமிதான் என்னைக் காப்பற்ற வேண்டும்.”

டிசம்பர் மாதம் 29,2010 அன்று திருவண்ணாமலையில் நடைபெற்ற என் சத்குருநாதருடைய 34 வது அவதார திருவிழாவில் கலந்து கொண்ட திருமதி. அவந்திகா (மா ஆனந்த வள்ளி) எல்லா பக்தர்களின் முன்னிலையில் சாமியின் பாதத்தில் விழுந்து, சாமி!அவர் இன்னமும் திருந்தவேயில்லை. உங்களை அவதூறு செஞ்சி பெரிய பாவம் பண்ணிட்டார். அவர் அப்படியே இருக்காரு சாமி. அவருக்கு நீங்கதான் நல்ல புத்தி தரணும்,” என்று அழுதுகொண்டே மன்றாடியதை நானே அருகில் இருந்து என் கண்ணால் பார்த்தேன்.
சட்டத்தையும் சமூகத்தையும் ஏமாற்ற நினைக்கும் இந்தக் கொடூரனுக்கு சமூகம்தான் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு, உலக உத்தமர் சாரு நிவேதிதா, நான் செல்போன் உபயோகப்படுத்துவதே இல்லை.  என்னுடைய பத்திரிக்கை நண்பர்தான் மா நித்ய சுப்ரியாவிற்கு SMS அனுப்பியிருக்க வேண்டும்.  அந்தக் கடிதமே ஒரு பொய். திட்டமிட்ட சதி.  என் மனைவி  கடிதத்தில் குறிப்பிட்டிருக்கும் அந்த சாரு நிவேதிதா நான் அல்ல,” என்று கூட பதிலளித்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நவீன தொழில் நுட்பத்தின் மூலமாக அந்தக் கடிதத்தை எழுதியது அவர் மனைவிதான், அந்த SMS அனுப்பியது அவர்தான் என்பதை 100 சதவிகிதம் நிரூபிக்க முடியும்.
என் குருநாதர் அந்தக் கடிதத்தை தரவேண்டாம் என்று சொல்லியிருந்தார். ஆனால் இப்போது சாருநிவேதிதா மீதான வழக்கின் ஆதாரங்களுள் ஒன்றான இந்தக் கடிதம், பொதுமக்களுக்கு கிடைக்கும் ஒருபடிவமாக மாறிவிட்டதால் இதைப் பகிர்கிறேன்.
எனக்கு நியாயம் தேவை. அந்த கொடூரனால் இனி எந்தப் பெண்ணுமே பாதிக்கப்படக்கூடாது என்பது மட்டும்தான் என் நோக்கம்.










Saturday 26 October 2013

சாநி என்ற மனநோயாளி

    1)    ஒரு நாவல் புகழ் அருந்ததி ராய்க்கு புக்கர் பரிசு கொடுக்கப்பட்ட போது பரிசுக்கான காரணமாக புக்கர் நிறுவனம் சொன்னது, அருந்ததி ராய் தன் நாவலின் மூலம் ஆங்கில மொழியை மிகவும் செழுமைப்படுத்தியிருக்கிறார். ஆனால் ஆங்கிலத்தை முறையாகப் பயிலாத எனக்கே அவருடைய நாவலில் பக்கத்துக்கு ரெண்டு தப்பு புலப்பட்டது. Undress, disrobe என்ற வார்த்தைகளுக்குக் கூட வித்தியாசம் தெரியாமல் மட்டமாக எழுதியிருந்தார் அவர்
    2)    சேதன் பகத் இவருக்கு கூட்டம் வந்துவிடுமோ என்று பயந்தார் (ஜெய்ப்பூர் விழாவில்)
    3)    நோபல் பரிசு வாங்கின புத்தகங்களை விட இவரு எழுத்து டாப் டக்கர
    4)    ஹருகி முரகாமி புத்தகத்த இவரால படிக்க முடியல
    5)    George Szirtes இவருக்கு நோபல் பரிசு கிடைத்துவிடுமோ என்று பயந்தார்
    6)    இளையராஜாவிற்கு சரக்கு இல்லை
    7)    ரஹமானுக்கு சரக்கு தீர்ந்துவிட்டது, ஏ.ஆர். ரஹ்மான் ஒரு வேஸ்ட்
    8)    வழக்கு என் 18/9 படத்த 10 நிமிஷம் பார்த்து வாந்தி வந்துவிட்டது
    9)    மணிரத்தினம் ஒரு உருப்படாத கேஸ்
    10)    ஜெமோ ஒரு சமுக விரோதி
    11)    சுரா, புதமைபித்தன் எழுத்து எல்லாம் குப்பை
    12)    பத்து வருஷம் உயிர்மைல எழுதி மனுஷ் காசு குடுக்கல (ஓசி ஓல்)
    13)    கமல் ஒரு தண்டம்
    14)    சில பெண்கள் எல்லாம் இவருக்கிட்ட குழந்தை பெத்துக்க துடிக்கிறாங்க
    15)    மிஷ்க்கின் ஒரு dangerous fellow (கொஞ்சம் கேர்புல்லா ஹான்டில் பண்ணனும்)
    16)    கோபிநாத், அந்தோனி சமூக விரோதிகள்
    17)    ஹமாம் சோப்பு போட்டு குளிச்சு, ரேனால்ட் பேனா வைத்திருக்கிற மிடில் கிளாஸ் கண்டா வெறுப்பா இருக்கு

இதெல்லாம் சாரு என்ற ஒரு மன நோயாளி தனது ப்ளோகில் எழுதியதில் இருந்து தொகுக்கப்பட்டது. இவர் இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம்

சாநி என்ற கபடதாரி

சாநி: கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான். ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது. நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம். ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா? இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்? ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள்........ இப்படித் தனக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒரு எழுத்தாளனைப் படித்து, அவனைத் திட்டி பக்கம் பக்கமாக தன் ப்ளாகில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை அவர்கள் தங்கள் குழந்தையையோ மனைவியையோ கொஞ்சுவதற்கு எடுத்துக் கொண்டிருந்தால் இப்படி ஸைக்கோவாக மாறி இருக்க மாட்டார்கள். இவர்களின் எழுத்தைப் படித்தால் இவர்கள் கிரிமினல்கள் மட்டும் அல்ல, ஸைக்கோக்கள் என்றே முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

charuonline.com திரட்டிய சாருவின் "மரியாதையான" ஒரு சில பதிவுகள்:
நீங்கள் நேரில் இருந்திருந்தால், நீங்கள் ஒரு ஆணாகவும் இருந்திருந்தால் உங்கள் கன்னம் பழுத்திருக்கும் ....... சில சமூகங்களில் திருமணமான கையோடு அடுத்த நாளே மணமகனை விவாக ரத்து செய்யும் பெண்கள் அதிகம் உண்டு. காரணம் என்னவென்றால், திருமணம் ஆனவுடனேயே முதல் இரவிலேயே குதத்தில் புணர ஆரம்பித்து விடுவான்கள் அந்த நெடுநாள் ஹோமோசெக்ஸ்காரர்கள். மறுநாளே விவாகம் ரத்தாகி விடும். நீங்களும் அதே மாதிரி ஒரு காரியத்தைத்தான் செய்திருக்கிறீர்கள் ....... வேசியிடம் கூட யாரும் ஃப்ரீயாக ஓக்க முடியாது. ஆனால் தமிழில் எழுதினால் ஃப்ரீ ஓல் .... நீங்கள் படிக்கவில்லை; அல்லது, உங்களுடைய shithead-இல் ஏறவில்லை ......உங்கள் சிநேகித மிருகங்களை கேரட்டை வைத்து சுய மைதுனம் செய்து கொள்ளச் சொல்லுங்கள்; அதற்கு மட்டுமே அந்த விலங்குகள் லாயக்கானவை (12/10/2010)

அப்படிப் படிக்காமல் இப்படி ஒரு கடிதம் எழுதத் துணிந்திருந்தால் உங்களை செருப்பால்தான் அடிக்க வேண்டும் ...... இரண்டு எழுத்தாளர்களையும் படிக்காமல் இரண்டு பேருக்கும் அறிவுரை சொல்ல வந்திருக்கும் அற்பப் பதரே, நீ எங்களைப் படிப்பதை விட சீக்குப் பிடித்த வேசியின் யோனியை நக்கலாம் ......... இலக்கிய விவாதத்தில் உன்னைப் போன்ற தெருநாய்களெல்லாம் நுழையக் கூடாதுடா (15.7.2010)

வேசியை பஜனை செய்து கொண்டிருக்கும் போது பஜனை இன்பத்தில் “உனக்கு வீடு வாங்கித் தருகிறேன்; கார் வாங்கித் தருகிறேன்” என்று உளறுவதற்கு ஒப்பானது. நண்பர் என்னுடைய தீவிர வாசகர். திருமணமாகாதவர். சனிக்கிழமை இரவு தண்ணியைப் போட்டால் சாரு நிவேதிதா என்ற கேணக் கூதியின் ஞாபகம் வந்து விடுகிறது. உடனே போனைப் போடு (2/9/2010)

ஏனென்றால், மிஷ்கின் தனியாக வாழ்பவர். அது மட்டும் அல்லாமல் பிரபலமாகவும் இருப்பதால் அவருடைய அந்தரங்க வாழ்க்கை எப்போதுமே ஊடகங்களின் வெளிச்சத்திலேயே இருக்கும். அதனால்தான் நியூசிலாந்து சென்ற போது மேட்டர் பண்ணினாயா என்று கேட்டேன். இது ஒரு மனிதனின் மேல் நான் கொண்ட அதீதமான அன்பினாலும், வாத்சல்யத்தினாலும் கேட்ட கேள்வி (23/10/2010)

ஜெயமோகனை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர் முகத்தில் காறித் துப்புங்கள் என்று என் வாசகர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன் ….. அப்போதே நீங்கள் ஜெயமோகனை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா? ………. சரி, ஜெயமோகன், என்னுடைய குஞ்சு கூட கொஞ்சம் சிறிய சைஸாக, ஊனமுற்றதாகத்தான் இருக்கிறது. அதையும் கொஞ்சம் ஆராய்ந்து கட்டுரை எழுதுங்களேன், ப்ளீஸ் (20/4/2010)

அப்போது என் உள் மனதில் “நீ உன் பெண்டாட்டியை ஒழுங்கா பண்றியா?” என்று கேட்க வேண்டும் போல் ஆர்வம் எழுந்தது. நாம் நினைப்பதையெல்லாம் கேட்டு விட முடிகிறதா, செய்து விட முடிகிறதா என்ன? அதெல்லாம் காமன்மேன்களுக்கு மட்டுமே உரிய சலுகைகள் (7/9/2012)

சாநி என்ற ஆன்லைன் பிச்சைக்காரனுக்கு ஏன் நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கொடுக்கக்கூடாது?

இவர் முன்னுக்கு பின் முரணாக செய்யும் பதிவுகளை பார்த்தும், நீங்கள் பணம் குடுத்தால், உங்களை விட ஒரு சர்வ முட்டாள் இருக்க முடியாது! இவர் மேட்டுக்குடி வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, உங்களை ஒரு காமன்மேனாக இருக்க வைத்துவிடுவார்! நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை உங்கள் குடும்பத்துக்கு செலவழியுங்கள், இந்த "பணக்காரனுக்கு" அல்ல!
  1. இவரும் இவர் மனைவியும் 60000 ரூபாய் பென்ஷன் வாங்கிகிறார்கள்
  2. இவர் மகன் (step-son ), கப்பலில் வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார், 
  3. இவர் வளர்க்கும் உயர்த்த ஜாதி நாய்களுக்கு மாத செலவு 15000 ரூபாய். இந்த நாய்களுக்கு pedigree ப்ராண்ட் உணவுதான், உணவின் விலையை பாருங்கள் (http://www.dogspot.in/Pedigree/)
  4. இவர் குடிக்கும் ரெமி மார்டின் சரக்குக்கு மாத செலவு 10000 ரூபாய் (சாநி: "நண்பர்களுக்கு ஒரு அறிவிப்பு. நான் அதிகம் மது அருந்துவதில்லை என்று உங்களுக்குத் தெரியும். அருந்தினாலும் மிக ஸ்ட்ரிக்டாக ரெமி மார்ட்டின் தான். அது தவிர வேறு எதை அருந்தினாலும் பால்பிடேஷன் வந்து விடுகிறது. சிறுமலையில் இரண்டு நாளும் ரெமி மார்ட்டின் தான். ஒன்றுமே ஆகவில்லை. ஆனால் சில சமயங்களில் சூழ்நிலை காரணமாக அவ்வளவு ஸ்ட்ரிக்டாக இருக்க முடியவில்லை. அப்படி மூன்று தினங்களுக்கு முன்னால் இந்திய பிராந்தியை அருந்தியதிலிருந்து பால்பிடேஷன். நேற்று இரவிலிருந்து தொடர்ந்து உள்ளது. non stop")
  5. இவர் போடுவதெல்லாம் "brand name" உடைகள்தான் - (சாநி: "இப்போது நான் அணிந்துள்ள கண்ணாடியும் எனக்குப் பிடிக்கவே பிடிக்காமல் அவந்திகா என் தலையில் கட்டியது. விலை 40,000 என்பதால் எனக்குப் பிடித்தபடி இன்னொரு கண்ணாடி வாங்க முடியவில்லை. சிட்டி செண்டர் போய் எனக்குப் பிடித்த ஸி.கே. (Calvin Klein) அல்லது Giordano பிராண்டுகளில் சட்டை ட்ரௌசர் எடுத்து வருவேன். (உலகின் புகழ் பெற்ற 20 ஃபாஷன் பிராண்டுகளில் இந்த இரண்டும் இடம் வகிப்பவை). ஆனால் முதல் இடம் வகிக்கும் Louis Vuitton தான் எனக்கு மிகப் பிடித்தது. ஆனால் அது இன்னும் இந்தியா போன்ற ஏழை நாடுகளின் பக்கம் வரவில்லை")
  6. மாதா மாதம் உண்டியல் குலுக்கி அந்த பணம் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாது!
  7. 10 டௌனிங் பாருக்கு பணக்காரர்கள்தான் போக முடியும், ஆனால் இந்த பணக்கார பிச்சைக்காரனால் அங்கு ஆனாசியமாக போக முடியும்! (சாநி: "நட்ட நடுவில் நடன அரங்கில் மட்டும் ஒளி வெள்ளம். ஒரு 50 வயதான ஆள் ஒரு 20 – 25 வயது கொண்ட பெண்ணுடன் ஆடிக் கொண்டிருக்கிறான். ஆடுபவனின் வயதுதான் முக்கியம். எல்லா இளைஞர்களும் மிரண்டு போவார்கள். ஒரே கைதட்டலும் விசிலும் ரகளை பறக்கும்")
  8. வழக்கம் போல் யோகமுத்ரா போய் சாப்பிடலாம் என்றால் அதில் இரண்டு பிரச்சினைகள்" - அதாவது ஏழை எழுத்தாளம் தினமும் நூற்றி அம்பது ருபாய் சாண்ட்விச்சும் போய் வர ஆட்டோ சார்ஜ் நூறும் சேர்த்தால், ஓரு ஏழை எழுத்தாளன் காலையில் பசியாற அவர் செலவு செய்யும் தொகை வெறும் இருநூற்றி அம்பது தான் 
  9. "தீபாவளி அன்று சாப்பிட எனக்கு எதுவுமே கிடைக்காது, நூடுல்ஸ் இல்ல ஓட்ஸ் தான் சாப்பிடனும்னு ஒரு பத்தி. இன்னொரு பத்தியில் தனக்காக தன் மனைவி சைவமாக இருந்தாலும் பன்றி,நத்தை, மீன், மாட்டு கறியை சமைத்து தரும் அற்புத மனுஷின்னு புகழாரம் - ஏம்பா தெரியாம தான் கேட்குறேன், உங்களுக்காக பன்றி, மாட்டு கறி,நத்தை,மீன் எல்லாம் சமைத்துக் கொடுக்கும் உங்கள் மனைவி தீபாவளி அன்னைக்கு நாலு தோசை சுட்டுக் கொடுக்க மாட்டாங்களா?
  10. பாப்லோ நெருதா/மரியோ பர்கஸ் யோசா தன் நாட்டுக்காக பல தியாகங்களை செய்தவர்கள், ஆனால் இந்த இன்டர்நெட் பிச்சைக்காரன் தான் வாழும் தெருவிற்கு கூட ஒரு புல் பூண்டை பிடிங்குனது இல்லை!
  11. இந்த மாதிரி செண்டிமெண்ட் போஸ்டை போட்டே 35 வயது கீழ் உள்ளவர்களின் ஜட்டியை உருவுவதே இவர் வேலையாக போய்விட்டது
  12. எக்சைல் நூல் வெளியீட்டின் போது நூலகம் வைக்கிறேன் என்று சில பிரதிகளை ஏலத்துக்கு விட்டார், அந்த பணம் எங்கே போனது என்று அந்த மாசாணி அம்மனுக்கே வெளிச்சம் - http://charuleaks.blogspot.in/2013/03/blog-post_10.html
  13. 25 -35 வயதில் இந்த மாதிரி வாழ்கையை அடுத்தவன் காசில் கொண்டாடுகிற பேர்வழியிடம் பணத்தை கொடுத்துவிட்டு 40-50 வயதில் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அப்போது இதை நினைத்து வருத்தப்படுவீர்கள்
  14. வளைகுடா நாட்டில் வேலை செய்பவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிப்பார்கள் என்று எனக்கு தெரியும்! நிர்மல் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை he is flushing down the toilet!
  15. இவரது Exile புத்தகத்தை ரூ15000 ஏலம் எடுத்த ராஜா ராஜேந்திரனை கேவலப்படுத்தி வட்டத்தை விட்டு தூக்கினார்.
  16. அந்த வட்டத்தில் Baskar Raja (வாசகர் வட்டத்தை ஆரம்பித்தவர்) , Parthiban Nedunchezhian (வாசகர் வட்டத்தை ஆரம்பித்தவர்), Karthikeyan Venkatraman, Arul Selvan, Arun Dir ((Exile வெளியீட்டு விழாவிற்கு போஸ்டர் ஒட்டியவர்கள்)), சிவம் ஷிவம் (ஒரு காலத்தில அட்மினா இருந்தார்), பிரியமுடன் துரோகி, Sasi Kala, Nathan MC (மூணு மாசம் பணம் கொடுத்து நிறுத்தின உடனே, சாருகிட்ட இருந்த அர்ச்சனை வாங்குனாரு), கிருஷ்ண மூர்த்தி (சாருவ தூக்கிப்பிடிச்சு தூக்கி எறியப்பட்டவர்). இவங்களோட பதிவுகள பார்த்திங்கனா தெரியும் எவ்வளவு முட்டாள்தனமா இந்த ஆள ஆதரிச்சு பணம் செலவழிச்சு எட்டி உதைக்கப்பட்டார்கள் என்று. இவனுக்கு உதவி செய்தவர்கள் அனைவரையும் எட்டி உதைத்து தூக்கி எறிந்து இருக்கிறான், list is endless)
  17. "மொழிபெயர்ப்புகள் முடிந்து விட்டால் யாசகம் நின்று விடும். நிச்சயம் மேன் ஏஷியன் புக்கர் எனக்குக் கிடைக்கும்" - உண்மையில் மேன் ஏஷியன் புக்கர் பரிசுக்கு தகுதியானவர்கள் இந்த மாதிரி உளற மாட்டார்கள்!
  18. "இப்படி பத்துப் பதினைந்து தர்மசேனன்கள் என் பக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் என் சிலே பயணத்துக்குப் பணம் தர முடியாது. எல்லோரும் மத்தியதர வர்க்கம். அதனால்தான் உங்களிடம் கையேந்துகிறேன். முடிந்தால் தாருங்கள். இல்லாவிட்டால் அவமானம் செய்யாதீர்கள்" - மத்தியதர வர்க்கத்தை எவ்வளவு கேவலமாக பேசுகிறார் இவர்? இவர் பணம் குடுத்து குடுத்தே இவர் வாசகர்கள் ஒரு கேடு கெட்ட மத்தியதர வர்க்கமாகத்தான் இருக்க முடியும்!
  19. தாய்லாந்த் போய் இவர் சாதித்தது மேலே உள்ள படத்தில் உள்ள குட்டி மார்பில் உண்டியல் குலுக்குன காசை சொருகுனதுதான்!


Tuesday 2 July 2013

இந்தப் புகழ் அனைத்தையும் என் குரு நித்யாவுக்கே சமர்ப்பிக்கிறேன்

கொஞ்சம் சுயபுராணம்

டியர் சாரு,
நான் உங்கள் எழுத்துக்களின் மிகத் தீவிரமான விசிறி. உங்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த நண்பனுக்கு நன்றி. அதோடு உங்கள் புத்தகங்கள் இங்குள்ள வாடகை நூலகத்திலும் கிடைக்கின்றன. அங்கிருந்துதான் உங்கள் புத்தகங்களை எடுத்துப் படித்து வருகிறேன். உங்களிடம் என்னை வசீகரித்த முக்கியமான பண்பு, நீங்கள் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் எழுதுகிறீர்கள். மற்ற எழுத்தாளர்கள் அப்படி இல்லை. உங்கள் மனதில் பட்டதை – அது சரியோ தவறோ அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் – அப்படியே பட்டவர்த்தனமாக எழுதுகிறீர்கள். அதற்கு மிகப் பெரிய தைரியம் வேண்டும். ஆனால் உங்கள் எழுத்தை எதிர்கொள்வதற்கான மனோதிடமோ, முதிர்ச்சியோ, நகைச்சுவை உணர்வோ தமிழர்களாகிய எங்களிடம் இல்லை என்பதை எண்ணி வருத்தமடைகிறேன்.
உனக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று என் நண்பர்கள் கேட்கும் போதெல்லாம் உங்கள் பெயரைத்தான் சொல்கிறேன். ஆனால் அதற்கு அவர்கள் சொல்லும் பதில் என்ன தெரியுமா? ” ஓ அவனா, எப்போதும் செக்ஸ் பற்றியே யோசித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பானே ... “ இதைக் கேட்டு எனக்கு எரிச்சல்தான் வரும். ஆனால் உடனே குஷ்வந்த் சிங் இந்தியர்களைப் பற்றி சொன்னதும் ஞாபகம் வந்து விடும். அவர் சொன்னார்,“இந்தியர்களுக்கு எப்போதும் கடவுள், செக்ஸ், பணம் என்ற மூன்றைப் பற்றித்தான் கவலை ” என்று.
அவர்கள் இப்படிச் சொல்வதற்கு இன்னொரு காரணம், இன்றைய இளைஞர்களிடையே படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. நான் படிக்கும் பொறியியல் கல்லூரியில் (மூன்றாம் ஆண்டு) நான் எப்போதும் இலக்கியப் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து என் சக மாணவர்கள் என்னைக் கிண்டல் செய்யாத நாள் இல்லை. ஒருநாள் என் நண்பன் என்னைப் பார்த்து “உன் மனைவியோடு செக்ஸ் கொள்ளும்போது கூட புத்தகம்தான் படிப்பாயா? ” என்று கேட்டான். பாவம், இந்த உலகத்தில் அவர்கள் எத்தனை அருமையான விஷயத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று, அவர்களிடம் உங்கள் புத்தகங்களைக் கொடுத்தால் மிக ஆர்வமாகப் படிக்கிறார்கள். அது மட்டும் அல்ல; சினிமா நடிகர்களுக்கு இருப்பது போல் உங்களுக்கு எங்கள் கல்லூரியில் ஒரு பெரிய ரசிகர் மன்றமே இருக்கிறது.
Keep rocking Charu…
எஸ். செழியன்,
தஞ்சாவூர்.
30.1.2010.
***
அன்புள்ள சாரு ,
சொல்லிக் கொள்ளும் அளவுக்கு நான் சிறப்பு பெற்றவன் இல்லை. நீங்கள் ஆலமரம் என்றால் நான் அதன்கீழ் கிடக்கும் சருகு போல் தான் தகுதி கொள்வேன். ஆனால் இந்தக் கடிதத்தை உங்களுக்கு அனுப்புவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எல்லோரும் உங்கள் எழுத்தின் மீது கொண்டுள்ள அபிமானத்தை அவர்களின் கடிதங்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன். நான் அதிகம் பயன்படுத்தும் இணைய உலாவி கூகிள் நிறுவனத்தின் கூகிள் குரோம். அதில் அடிக்கடி உலாவப்படும் இணைய தளங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அம்சமாக முதல் எட்டு தளங்களின் முதல் பக்கங்கள் திரைப்பிடிப்பாக முகப்புத் திரையில் இருக்கும். அப்படியான எனது கணினியின் குரோம் பயன்பாட்டில் , தங்களது வலைத்தளம் ஐந்தாவது இணைப்புப் படமாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஒரு வருட காலத்துக்கும் மேல் இருப்பதாகும்.
சொல்லப்போனால் தங்களுடையதுதான் பொதுத் தளங்களாக நான் படிப்பவற்றில் முதலிடம். இதில் பெருமையும் கொள்கிறேன். அதனால் இதனை உங்களிடம் இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன். அது எப்படி என்றால், முதல் நான்கு வலைத்தளங்களில் மூன்று என் தொழில் சார்ந்தவை; நான்காவது நான் அவ்வப்போது - இல்லை அடிக்கடி - விளையாடச் செல்லும் இணைய விளையாட்டுத் தளமாகும்.
ஆக , வெளியுலக ரீதியாக நான் செல்லும் முதல் தளம் உங்கள் சாருஆன்லைன் டாட் காம் தான். இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை அல்லது குறைந்தது ஒரு நாளைக்கு பத்து தடவையாவது சென்று தங்களின் புதிய பதிவுகள் உள்ளனவா என்று பார்ப்பேன். அதிலும் முதலில் பார்ப்பது டைட்டில் பார் தான். உங்கள் தளத்தில் புதிய பதிவுகளின் தலைப்பு டைட்டில் பாரில் தெரிவது ஒரு நல்ல அம்சம். பக்கம் முழுமையாக பதிவேறுவதற்குள் டைட்டில் மாறியிருந்தால் உள்செல்வேன் , இல்லையென்றால் மூடிவிடுவேன். என் கூகிள் குரோமில் உங்கள் தளம் முதலிடம் பெற வேண்டும். அதற்காக தினமும் நிறைய பதிவுகளை வெளியிடுங்கள்.
தங்கள் எழுத்துப் பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தங்களுக்காக இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு ,
இன்பராஜ் .
1.2.2010.
***
இந்தப் புகழ் அனைத்தையும் என் குரு நித்யாவுக்கே சமர்ப்பிக்கிறேன் என்று சொன்னால் அது ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டது போல் உங்களுக்குத் தோன்றும். ஆனாலும் எனக்கு வேறு மாதிரி சொல்லத் தெரியவில்லை. ஏனென்றால், இந்த திடீர்ப் புகழுக்கு தர்க்கரீதியான விளக்கம் எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. நான் 35 ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், 2008-இல் கூட நான் எழுதிய 10 புத்தகங்கள் வந்தன. எந்த சலனமும் இல்லை. திடீரென்று இந்த ஆண்டுதான் இப்படி.
ஆனால் இந்தப் பிராபல்யத்துக்கு உயிர்மையும் மனுஷ்ய புத்திரனும் முக்கியமான காரணம். அவர் மட்டும் உயிர்மையை ஆரம்பிக்காமல் காலச் சுவடிலேயே இருந்திருந்தால் நானும் 300 பேருக்கு மட்டுமே எழுதிக் கொண்டிருந்திருப்பேன்.
இன்னொரு காரணம், கணினி வசதி, இணைய தளம். என் நண்பர் வாசு சொன்னார். சென்னையிலிருந்து அவர் தில்லிக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது அவர் கையிலிருந்த அடியேனின் புத்தகத்தைப் பார்த்து விட்டு பக்கத்திலிருந்த பெண்மணி என்னைப் பற்றிப் பேச ஆரம்பித்தாராம். தில்லி போய் சேரும் வரை பேச்சு நீடித்தது. என் எழுத்தை அவ்வளவு கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கிறார். ” விமர்சனமோ பாராட்டோ, அவ்வளவு நேரம் உங்கள் எழுத்தைப் பற்றி நடு வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது விவாதித்துக் கொண்டிருந்தது த்ரில்லிங்-ஆக இருந்தது ” என்றார் வாசு.
“அவருக்கு என்ன 60 வயது இருக்குமா? ” என்றேன்.
” எப்படி அவ்வளவு சரியாகச் சொல்கிறீர்கள்? ”
“ இளைஞர்களுக்குத்தான் என் எழுத்து பிடிக்கிறது; அதனால் சொன்னேன். ”

***

சமீபத்தில் நடந்த இன்னொரு சம்பவம். என் தோழி ஒருவர் அழகு நிலையத்துக்கு சென்றிருக்கிறார். தற்கொலைப் படை என்று சொல்கிறோமே, அந்த ரகம் அவர். அவர் கையிலிருந்த என் புத்தகத்தைப் பார்த்து விட்டு அங்கே வந்த மற்றொரு பெண் ஆர்வத்துடன் பேசியிருக்கிறார். ’ தற்கொலைப் படை ’ யின் போனிலிருந்து என்னோடும் பேசினார்.
” மிகவும் சோர்வான முகத்துடன் வந்த அந்தப் பெண் உங்களோடு பேசும் போது அடைந்த உணர்வை பரவசம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சினிமா நட்சத்திரம் அல்லது மைக்கேல் ஜாக்ஸன் மாதிரி பாப் ஸ்டாருக்குத்தான் இப்படிப்பட்ட ரசிகர்கள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன் ” என்றார் தோழி.
அந்த முகம் தெரியாத வாசகி பேசியதிலிருந்து நானும் அதை உணர முடிந்தது.
” அவ்வளவு பரவசம் அடையும் அந்தப் பெண்ணிடம் என் தொலைபேசி எண்ணைக் கொடுத்தீர்களா? ” என்று தோழியிடம் கேட்டேன். முறைத்தார்.

***
சமீபத்தில் உயிர்மையில் சாருஆன்லைன் பற்றி வந்துள்ள ஒரு தகவல் மிகவும் உற்சாகமளிப்பதாக இருந்தது. இதை மனுஷ்ய புத்திரனைத் தவிர வேறு யாரும் இவ்வளவு வெளிப்படையாக சொல்லியிருக்க மாட்டார்கள். அந்தக் கட்டுரையில் அவர் உயிர்மையை விட அதிக வாசகர்களால் சாருஆன்லைன் படிக்கப்படுகிறது என்று குறிப்பிடுகிறார். இதற்குக் காரணமாக இருந்த உங்கள் அனைவருக்கும், என்னுடைய கட்டுரைகளை இரவு பகல் பாராமல் பதிவேற்றம் செய்து வரும் தங்கவேலுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***
ஆயிரத்தில் ஒருவன் பற்றி பல வாசகர்கள் கேட்டுள்ளனர். உயிர்மையில் அது பற்றிய என் கட்டுரை வெளிவந்து விட்டது. படித்துக் கொள்ளவும். படிக்க முடியாதவர்களுக்கு சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அந்தப் படம் ஒரு அருவருக்கத்தக்க, ஆபாச குப்பை. மட்டுமல்லாமல், ஒரு இனத்தையே மிகக் கேவலமாக அவமானப்படுத்தியிருக்கிறார் செல்வராகவன். சோழ மக்கள் என்ன நர மாமிசம் தின்னும் காட்டுமிராண்டிகளாகவா வாழ்ந்தார்கள்? அப்படித்தான் காட்டியிருக்கிறார் இயக்குனர். இதை எப்படித் தமிழ் மக்கள் பொறுத்துக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அதை விட ஆச்சரியம், லக்கிலுக், அபிலாஷ் போன்ற ’ பின்நவீனத்துவ ’ விமர்சகர்கள் இந்தப் படத்தைப் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள். அந்தக் கொடுமையைத்தான் தாங்க முடியவில்லை.
***
1.2.2010.
6.20 p.m.

Sunday 23 June 2013

பரவச நிலையில் சாரு

இப்போதெல்லாம் சாருஆன்லைனில்  என் எழுத்து அதிகம் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்று நண்பர்கள் பலர் சொல்லக் கேட்கிறேன்.  இது சம்பந்தமான விளக்கமே இது:

நான்  நிறைய எழுதுகிறேன்.  ஆனால் பதிவேற்றம் செய்வதில்லை.  என் தோழி ஒருத்தி  சொன்னாள்: You are addicted to writing, man. அந்தக் கடைசி வார்த்தையில் வரும் ‘மே’வை மே மாதத்தை எப்படி உச்சரிக்கிறோமோ அதைப் போல் உச்சரிப்பாள்.  அமெரிக்காவில் man-ஐ அப்படித்தான் உச்சரிப்பார்களோ?  எனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவு பழக்கம் இல்லாததால் அமெரிக்க உச்சரிப்பு தெரியாது.

ஏன் பதிவேற்றம் செய்வதில்லை?  எதிரிகள் அதிகம் என்பதால்தான்.  ஸீரோ டிகிரியை நான் ஒரு உன்மத்த  நிலையிலிருந்தே எழுதினேன்.  அது போன்ற ஒரு நாவலை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் என் எதிரிகள் என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்.

மீண்டும்  சொல்கிறேன்; எனக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்ய  முடியாது.  ஏனென்றால், எனக்கு வழங்கப்படும் தீமையை நான் தீமை என்று நினைப்பதில்லை;  அனுபவம் என்றே  கொள்கிறேன். மரணத்தைப்  பற்றி மட்டுமே சிறிது சஞ்சலம்.  அதுவும் கூட, என் எழுத்து நின்று விடுமே என்ற காரணத்தினால்தான்.  மற்றபடி மரணத்தைக் கண்டும் அச்சமில்லை.

ஸீரோ  டிகிரியை எழுதிய போது இருந்த அதே  உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்.  நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன்.  அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாது.  ஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறது.  சாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்.  அதுவரை பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை.  மாலை நான்கரை மணிக்கு எழுந்து சிட்டி செண்டர் சென்று அங்குள்ள அரேபியன் ஹட்டில் சார்கோல் சிக்கன் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து ‘நேராகச் செல்லுங்கள்’ என்றேன்.

யெல்லே பேஜஸ் வரும் போது ஆட்டோக்காரர் “எங்கே போக வேண்டும்?” என்று மீண்டும் கேட்ட போது அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லாததால் “மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் எங்கே நிறுத்த முடிகிறதோ அங்கே நிறுத்துங்கள்” என்றேன்.
இறங்கியவுடன்  எங்கே செல்வது  என்று தெரியவில்லை.  கடற்கரைக்குச்  செல்லலாமா என்ற யோசனையை நிராகரித்தேன்.  அப்போது இருந்த பரவச நிலையில் கடற்கரை வேண்டாம் என்று தோன்றியது.  காலையிலிருந்து கடவுளோடு உரையாடியதால் ஏற்பட்ட பரவசம் அது.

வேறு  எங்கே செல்வது  என்று தெரியவில்லை.  பரவசம் உச்சநிலையை அடைந்து விட்டதால்  இனிமேல் எழுத முடியாது.  அதனால் வீட்டுக்குச் சென்று பயனில்லை.   மனோஜ் (ஹமீதின்  மகன்) இன்று பிறந்த நாள் என்று சொல்லியிருந்தான்.   அவன் வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்து ஹமீதை அழைத்தேன். போனை எடுத்து “இதோ ஒரு நிமிடத்தில் கூப்பிடுகிறேன்” என்று வழக்கம்போல் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்.  சரி, பரவாயில்லை என்று அங்கிருந்து அபிராமபுரத்திலிருக்கும் மனோஜ் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்.  அப்போது நான் இருந்த பரவச நிலையில் ஒரு ஏழெட்டு கிலோமீட்டராவது நடந்தால்தான் மனம் ஒரு கட்டுக்குள் வரும் என்று தோன்றியது.

ஆனாலும் ஒரு சந்தேகம், அவ்வளவு தூரம்  நடந்து சென்று அங்கே மனோஜ்  இல்லையானால்  என்ன செய்வது?  மனோஜுக்கு மூன்று வயதுதான் ஆகிறது; அதனால் இன்னும் செல்போன் வைத்துக் கொள்ளவில்லை.  ஒரே ஒருநாள்தான்  அவனிடம் செல்போனில் பேசியிருக்கிறேன்.  அதுவும் அவனுடைய அம்மா போன் மூலம்.  ”டேய் மனோஜ், எப்படிடா இருக்கே?” என்று நான் பேச்சை ஆரம்பித்ததுமே “போனை ஹமீதிடம் கொடுங்கள்; கொஞ்சம் பேசணும்” என்று சொல்லி அப்போதே அவன் என் மனதை உடைத்து விட்டான். (அப்பனைப் போலவே பிள்ளை!) ஆனால் எப்போதுமே நான் என் நண்பர்களிடமும், தோழிகளிடமும், காதலியிடமும் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதையும் பார்ப்பதில்லை. அதற்குள் 15 நிமிடம் ஆகியிருந்தது.  ஹமீதிடமிருந்து போன் இல்லை.   அதனால் மீண்டும் நானே போன் செய்தேன். ”அட சாருவா, நான் கூப்பிட்றேன்னு சொன்னேன்ல, ஹ்ம்ம்… சொல்லுங்க?” என்றார்.

“உங்கள் வீட்டுக்குத்தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்…”

”அடடா, நான் இங்கே வுட்லண்ட்ஸில் அல்லவா இருக்கிறேன்? இன்னிக்கு சுஜாதா நினைவு நாள் விழா இருக்கே?”

அவர்  சொன்னதும்தான்  ஞாபகம் வந்தது.  மீண்டும் திரும்பி வுட்லண்ட்ஸ்  நோக்கி நடக்க  ஆரம்பித்தேன். என்னைப் பார்த்த உடனேயே ஹமீது “என்ன, முகமெல்லாம் ஒருமாதிரி ஜொலிக்கிறது? ஏதோ பரவசத்தில் இருப்பது போல் இருக்கிறதே? இப்படி உங்களை நான் பார்த்ததே இல்லையே?” என்று பல கேள்விகளைப் போட்டார். ஓ, பரவசம் முகத்திலேயே தெரிகிறதா என்று நினைத்துக் கொண்டேன்.

இயக்குனர் ஷங்கரும், ராஜீவ் மேனனும் பேசியதை ரசித்தேன். சுஜாதாவுக்கு பொய் சொல்லவே தெரியாது; பாசாங்கு இல்லாத இயல்பான மனிதர் என்றார் ஷங்கர்.  சுஜாதா எப்போதுமே ஒரு 21 வயது இளைஞனின் மனதை விட்டுத் தாண்டியதில்லை என்றார் ராஜீவ். இந்த இரண்டு விஷயங்களையுமே நான் வாழ்க்கையில் பின்பற்றி வருபவன்.  ஆனாலும் அப்போது இருந்த பரவச நிலையில் என்னால் அந்தக் கூட்டத்தோடு ஒன்ற முடியவில்லை.  எல்லாமே அந்நியமாக இருந்தது.  நண்பர்கள் நர்சிம், லக்கிலுக், கேபிள் ஷங்கர் போன்ற பலரைக் கண்டேன்.  ஆனால் எனக்கு என்னவோ நிலவில் நடப்பதைப் போலிருந்தது.  (ஞாபகம், நான் மதுவோ வேறு எந்த போதை வஸ்துக்களையோ உட்கொண்டிருக்கவ்ல்லை). அவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பதற்கும் நான் பதிலுக்குச் சிரிப்பதற்கும் இடையில் மூன்று நிமிடம் இருந்தது.  அவர்களின் சிரிப்பு என் உணர்வுகளில் பதிய அவ்வளவு காலம் ஆனது.  அப்போது பார்த்து ஷாஜி வந்தார். புன்னகைத்தார்.  ஆனால் நான் மூன்று நிமிடம் கழித்துப் புன்னகை புரிந்த போது அவர் வேறொரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததால் என் பதில் புன்னகையை அவரால் கவனிக்க முடியாமல் போயிற்று.

நான்  பறந்து கொண்டிருந்தேன்.  கண்களை மூடி கடவுளுடன்  பேசிக் கொண்டிருந்த  தருணங்களை எண்ணி  ஆழ்ந்து சுவாசித்தேன். 

அப்போது ஷாஜியின் குறுஞ்செய்தி வந்தது.  “மை  நேம் இஸ் கான் எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் என் மீது கோபமா?”

ஓ, மை நேம் இஸ்  கான் அவருக்குப் பிடிக்கவில்லையா? 
அப்போதுதான் அந்த விஷயமே எனக்குத் தெரிய வருகிறது.  ஆனால் அந்தப் பரவச மனநிலையிலும் என் வழக்கமான விளையாட்டு புத்தி வெளியே வந்தது.  “என்னைத்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களை எப்போதும் எனக்குப் பிடிக்கும்” என்று பதில் அனுப்பினேன்.

பதறி  விட்டார் மனிதர்.  என் மீதான  அவருடைய ஆழமான  பிரியத்தையும்  அன்பையும் தெரிவித்து உடனே பதில் செய்தி வந்தது.

சும்மா  விளையாடினேன் ஐயா; எங்கே இருக்கிறீர்.

ஸ்காட்ச்  இருக்கிறது; குடிக்கப் போகலாமா?

அப்போதைய  பரவசத்தில் நான் குடிக்கும் நிலையிலும் இல்லை.  இன்னொரு  நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று  செய்தி அனுப்பி  விட்டு அங்கிருந்து  நைஸாகக் கிளம்பினேன்.

வெளியே  வந்து பிளாட்பாரத்தில்  நீண்ட நேரம்  அமர்ந்திருந்தேன்.  பக்கத்தில் ஒரு  ஆள் பைக்கில் நீண்ட நேரம் யாருக்கோ காத்திருந்தான்.  எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லை.  வீட்டுக்கு நடந்தே போய் விடலாம் என்று எழுந்தேன்.

“போகலாமா  சாரு?” என்ற குரல் வந்தது.

பைக்கில்  அமர்ந்திருந்த  உருவம்தான் பேசியது.

அட  நவீன்!

நீங்கள் எப்படி இங்கே?

நீங்கள்தானே சாரு ’வெளியே இருக்கிறேன்; வா’ என்றீர்கள்?

28.2.2010.
12.40 p.m.

Wednesday 12 June 2013

சொந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கும் சாரு


Oct 10, 2008ல் சாரு :


வீட்டு உரிமையாளரிடமிருந்து ஓலை வந்து விட்டது. வீட்டைக் காலி பண்ணச் சொல்லி

வீடு பார்க்க ஆரம்பித்தோம்

பழைய கதைதான். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் வாடகைதான் எகிறி இருந்தது. இருபது ஆயிரத்துக்குக் குறைந்து வீடே இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் ஒரே ஒரு அறையில் குடியிருந்தேன். வாழ்வதற்கு 300 சதுர அடி உள்ள ஒரே ஒரு அறை எனக்குப் போதும். ஆனால் என்னுடைய புத்தகங்களை வைப்பதற்குத்தான் குறைந்த பட்சம் 700 சதுர அடிகள் தேவை



முதல் மாடியில் ஒரு வீடு அகப்பட்டது. 700 சதுர அடிதான். போதாது என்று திரும்பிய போது வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் சாதகமான அம்சங்களை அடுக்கினார். வீட்டுக்கு எதிரே கலங்கரை விளக்கம். தினமும் காலையில் கடற்கரையிலேயே வாக்கிங் போகலாம். ஆஹா ஆனந்தம். வீட்டின் உரிமையாளர் ஒரு பெண். அங்கேயே க்ரௌண்ட் ஃப்ளோரில் வசிக்கிறாராம். 25 வயது இருக்கும். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பவரைப் போல் இருந்தார். சரி, அவர் எப்படி இருந்தால் நமக்கு என்ன? ஆனால் அவர் சொன்ன வாடகைதான் எனக்கு என்னென்னவோ விபரீத எண்ணங்களை வரவழைத்து விட்டது.

வாடகை 20,000 ரூபாயாம். வீட்டுக்கா அல்லது... 

சரி, எதுக்கு வம்பு என்று ஓடி வந்து விட்டேன்

இப்போது ஒரு சுமாரான வீடு கிடைத்திருக்கிறது. ஆனால் முன் பணமாகக் கொடுக்க வேண்டிய தொகை இந்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகி விட்டது. பழைய ஓனரிடம் இருக்கும் தொகையை வாங்கி புதிய ஓனரிடம் கொடுக்கலாம் என்றால் இன்னும் ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது

எனது வாசகர்களிடம் மீண்டும் விண்ணப்பிக்கிறேன்

இது பற்றிப் பலரும் கேலியும் அவதூறும் செய்வார்கள். ஐந்து லட்சம் விற்பனையாகும் பெரும் பத்திரிகையில் கூட அவதூறு செய்து எழுதுவார் பிரபல கட்டுரையாளர். ப்ளாகில் எழுதுபவர்களோ...கேட்கவே வேண்டாம். பஸ்ஸில் அட்டை வைத்து பிச்சை கேட்கும் சிறுமியின் ஞாபகம் வருவதாக எழுதியிருந்தார் ஒரு ப்ளாகர். யார் கலைஞன், யார் பிச்சைக்காரன் என்று கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள் ப்ளாகில் எழுதுபவர்கள். பார்த்துக் கொள்ளுங்கள்

நன்று. என் தொழில் எழுத்து. அட்டை வைத்துப் பிச்சை எடுப்பது அல்ல. பிச்சை எடுப்பது என்பது இன்று முதலீடே இல்லாத ஒரு பெருந்தொழில். பல கோடிகள் அதில் புரளுகின்றன. செக்ஸ் தொழிலைப் போல் மிகக் கொடூரமான வன்முறையும், நம்பவே முடியாத படு பாதகங்களும் நிறைந்த ஒரு தொழில் அது. பஸ்ஸில் அட்டை போடும் அந்தச் சிறுமியிடம் பேசினால் அது உங்களுக்குப் புரியும்

ஆனால் என்னுடைய தொழில் எழுத்து. இதில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சம் உழைப்பவன் நான்தான். ‘ இந்த 2008-இல் நான் எழுதியிருக்கும் பக்கங்களை எண்ணிச் சொல்லுங்கள்என்று இரண்டு நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். ஒரு வாரமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகங்களாகப் போட்டால் இருபது வரும் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்கு உழைத்தும் இப்படிக் காசு கேட்டு அட்டை போடும் நிலைக்குக் காரணங்கள் இரண்டு

ஒன்று, நானேதான். என்னுடைய சமரசமற்ற போக்கு. யாரோடும் எதற்காகவும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை. இது பற்றி நிறைய எழுதி விட்டேன். இரண்டு, என் எழுத்துக்கு ஊதியம் கிடைப்பதில்லை. காரணம், இலக்கியப் பத்திரிகைகள் நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன

700 சதுர அடிக்கு 20,000 ரூ. வாடகை கேட்ட ஓனரைப் பற்றிச் சொன்னேன். அதே சமயம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நேற்று இப்போது நான் குடியிருக்கும் வீட்டு ஓனர் வந்தார். அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தருவதற்காக. அவரும் ஒரு பெண்மணிதான். செக்கில் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்து விட்டுமற்றதை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். ப்ளாங்க் செக். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

என்னுடைய வங்கிக் கணக்கு எண்:
ICICI A/c No.
T.Nagar Branch, Chennai 17.
Account holder’s name: k. arivazhagan 


இப்போ நம்ம அல்டிமேட் எழுத்தாளர் 2002ல் என்ன எழுதிருக்காருன்னு பார்ப்போம் :


நானும் அவந்திகாவும் ஒரு சோதிடரை சந்திக்க நேர்ந்தது. சோதிடர் என்பதைவிட clairvoyant என்று சொல்லலாம். எழுபது வயது அம்மா. கண்களை மூடி தியானித்து வருங்காலத்தையும் கடந்த காலத்தையும் நிகழ்காத்தையும் காணக் கூடியவர்.

“விரைவில் நீங்கள் ஒரு வீடு வாங்குஈர்கள். அதன் அருகே ஒரு நதியும் தெரிகிறது” என்றார்.

‘நிச்சயமாக இல்லை’ என்று நினைத்துக் கொண்டேன். அதிலும் நதிக்கருகில் வீடா ? அப்படியானால் அடையாறு தான். அடையாறில் வீடு வாங்க வேண்டுமானால் அதற்கு வைர வியாபாரயாக அல்லவா இருக்க வேண்டும் ?

ஆனால் அந்த அம்மா சொன்னது மிக விரைவில் பலிதமாயிற்று. அடையாறு அல்ல. சின்மயா நகர். நதி ? என்ன செய்வது ? வீட்டுக்கு எதிரும் புதிரும் திரும்பின இடமெல்லாம் கூவம் தான் வளைந்து நெளிந்து ஓடுகிறது

-------------------------------------



சொந்த வீட்டுக்கு எதுக்குய்யா வாடகை கொடுக்குற ?? தமிழன் தான் எதையும் நியாபகம் வச்சுக்க மாட்டான், நல்லா தலையில் மிளாகாய் அரைக்காலாம்னு நினைச்சுட்டிங்களா சாரு ?? அது எப்படி ? பழைய ஹவுஸ் ஓனர் கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கினாலும் இன்னும் ஐம்பதாயிரம் ருபாய் குறையுதாமாம்... அட்றா..அட்றா.அட்றா.. சொந்த வீட்டுக்கு வாடகை மட்டும் தான் கொடுப்பாருன்னு பார்த்தா அதுக்கு அட்வான்ஸ் வேற கொடுத்திருக்காரு நம்ம சாரு...