Wednesday 30 January 2013

மழையா பெய்கிறது?

இரவு பனிரண்டு மணிக்கு உறங்கச் சென்றாலும் காலை நான்கு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.  தண்ணி அடித்து விட்டுப் படுத்தாலும் நான்கு மணிதான்.  ஒருக்கணம் ‘என்னடா வாழ்க்கை இது?’ என்று தோன்றும்.  ஆனால் மற்றவர்களுக்கெல்லாம் ஒரு நாளில் 24 மணி நேரம் என்றால் இப்படி நான்கு மணிக்கு எழுந்து கொள்வதால் நமக்கு 30 மணி நேரம் கிடைத்தது போல் இருக்கும்.  அதனால்தான் ஆண்டுக்கு பத்து புத்தகங்களை எழுத முடிகிறது.  இந்த விஷயத்தில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் எனக்கும் நிரம்ப ஒற்றுமை உண்டு.  இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமை உண்டு. நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்காதீர்கள்.
என்னுடைய எழுத்து எக்காரணம் கொண்டும் நாட்குறிப்பாக ஆகி விடக் கூடாது என்று கவனமாக இருப்பேன். ஆனால் அதையும் மீறி ஓரிரு சமயங்களில் அப்படி ஆகிவிடுவதைத் தவிர்க்க முடியவில்லை.  அப்படி ஒருநாள் நேற்று.  வழக்கம் போல் நேற்றும் நான்கு மணிக்கே எழுந்தேன்.    ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கமாகச் செய்யும் ஆயில் புல்லிங், தியானம் போன்ற எந்த வேலைகளையும் செய்யவில்லை.  மெரீனா பீச்சுக்கு வாக்கிங் செல்லவில்லை. (வாக்கிங் செல்லும் போது ஒரு குழப்பம்.  காலை ஐந்தரைக்கு சரியாக விவேகானந்தர் இல்லம் அருகே நான் சென்று கொண்டிருக்கும் போது எதிரே ஒரு நடிகை முழங்கால் வரை நீளும் ட்ரௌசர் போட்டுக் கொண்டு வாக்கிங் செல்கிறார்.  ஆனால் யார் என்று எனக்குத் தெரியவில்ல. ஆனால் நடிகைதான்.) மெரினா வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆறரை ஆகியிருக்கும்.  அதன்பிறகு பப்பு, ஸோரோவை வாக்கிங் அழைத்துச் செல்வேன். அந்த வேலையும் செய்யவில்லை.
எழுந்ததும் கணினியின் முன்னால் அமர்ந்து டைப் செய்ய ஆரம்பித்து விட்டேன்.  செமத்தியான கோடை மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.  அதுவும் கோடை மழை அக்னி நட்சத்திரத்தில் பெய்தால் ரொம்ப அதிர்ஷ்டம்.  பின்னி எடுத்துக் கொண்டிருந்தது மழை.  ஆனால் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் நான் இல்லை.
சாலக்குடியில் நின்ற போது ஒரு பத்திரிகைக்காக ஒரு பெண் என்னைப் பேட்டி எடுத்தார்.  காலை உணவை சாப்பிட்டுக் கொண்டே (எனக்குப் பிடித்த புட்டு, கடலை) பேட்டி கொடுத்தேன்.  பிறகு உடனே போராட்டக் களத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் கேள்விகளை மின்னஞ்சல் செய்யச் சொல்லி விட்டு வந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு என் பதில்களை அனுப்பி வைக்க வேண்டும்.  ஒவ்வொரு கேள்விக்கும் என் பதில்கள் இரண்டு இரண்டு வரிகளே இருந்தன.  என்றாலும் அதற்காக மிகவும் யோசிக்க வேண்டியிருந்தது.
மாத்யமம் பத்திரிகையிலிருந்து ஒரு கட்டுரை கேட்டிருந்தார்கள்.  அதையும் நேற்று மதியமே அனுப்ப வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக உயிர்மை கட்டுரை பாதியிலேயே தொங்கிக் கொண்டிருந்தது.  எந்தப் பத்திரிகைக்கும் தாமதமாக அனுப்புவது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது.  அந்தத் தவறை நான் ஒருமுறை கூட செய்ததில்லை. இவ்வளவு வேலைகளையும் ஒன்றன் பின் ஒன்றாகச் செய்ய வேண்டியிருந்ததால் நேற்று பெய்த கோடை மழையைக் கூட ரசிக்க முடியவில்லை.
இதற்கிடையில் தூர தேசம் ஒன்றிலிருந்து அழைத்த தோழி “கோடை மழையில் ஜன்னல் ஓரம் அமர்ந்து கொண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா?” என்று வேறு கேட்டு வெறுப்பைக் கிளப்பினார்.
சில சமயங்களில் என் அறையில் அமர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் போது மழையில் சென்னை பூராவும் மிதந்து கொண்டிருப்பது கூடத் தெரியாது.  ஒருமுறை இரண்டு தினங்கள் அறைக்குள்ளேயே கிடந்து எழுதிக் கொண்டிருந்த போது ஹமீது போன் செய்தார்.
“மதியத்துக்குள் எழுதி முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்; நேரில் வருகிறேன்; பேசலாம்” என்றேன்.
”என்னது, நேரில் பேசலாமா?”
”ஏன், என்ன விஷயம்?”
”நீங்கள் வெளியூரில் – கேரளாவில் – இருக்கிறீர்களா?”
”இல்லையே, வீட்டில்தான் இருக்கிறேன்.”
”அப்படியானால் உங்களுக்கு விஷயம் தெரியாதா?”
“என்ன விஷயம்?”
”என்னங்க இது, ஊரே வெள்ளத்தில் மிதக்கிறது. உங்களுக்குத் தெரியாதா?”
”என்னது, வெள்ளமா? மழையா பெய்கிறது?”
ஹமீது அதற்கு மேல் பேசவில்லை; இணைப்பைத் துண்டித்து விட்டார்.
சத்தியமாக இப்படித்தான் நடந்தது.  நம்ப முடியாவிட்டால் ஹமீதிடம் கேட்டுப் பாருங்கள்.
20.5.2010.
10.28 a.m.

Monday 28 January 2013

சூடு, சொரணை, மானம் இல்லாமல் உண்டியல் குலுக்குவது எப்படி?

இதுவும் ஏற்கனவே எழுதியதுதான்.  எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவதன் காரணம், என் எழுத்தைப் படிக்க வரும் புதிய வாசகர்களும் அவர்களுடைய கேள்விகளும் சந்தேகங்களும்தான்.  இதெல்லாம் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை.  அதனால் ஏற்கனவே இதைப் படித்து விட்ட வாசகர்கள் இதைத் தாண்டி செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு போன் செய்து “என் மகள் உங்களுக்கு 5000 ரூ. அனுப்பச் சொன்னாள்; உங்கள் வங்கி எண் என்ன?” என்றும் கேட்டார்.  அப்போதெல்லாம் நான் அடுத்த வேளை சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  இருந்தாலும் மாணவர்களிடமிருந்து பண உதவி பெறுவதில்லை என்று மறுத்தேன்.  ஆனாலும் பிடிவாதமாக அனுப்பி வைத்தார்.  அந்த மாணவி அப்போது என்னுடைய தீவிர வாசகி.  பிறகு அவருக்குத் திருமணமான பிறகும் அதே வேலையை ஆரம்பித்தார்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பை 50 பிரதிகள் வாங்கினார்.  அவர் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே அதை விநியோகிக்கப் போவதாகவும் கூறினார்.  ”இதெல்லாம் ஆபத்தான காரியம்; உங்கள் கணவர் ஆட்சேபிக்கலாம்; வேண்டாம்” என்றேன்.  கேட்கவில்லை.  கணவர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து விட்டதாக பின்னர் அறிந்தேன்.  அந்தப் பெண்ணும் என்னைத் தொடர்பு கொள்வதில்லை.
பெண்ணுக்கு மட்டும் இல்லை; என் நெருங்கிய சகா ஒருவன் திருமணமான புதிதில் ஸீரோ டிகிரியைக் கொண்டு போய் தன் மனைவியிடம் கொடுத்து படிக்கும்படி சொல்லியிருக்கிறான்.  நல்ல ஆசாரமான பெந்தகோஸ்தா குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அடுத்த மாதமே அவனை விவாகரத்து செய்து விட்டார்.  அந்தப் பெண் விவாகரத்து வேண்டி என் நண்பனுக்கு அனுப்பியிருந்த நோட்டீஸைப் படித்து நானே மிரண்டு போனேன்.  ஏதோ க்ரூப் செக்ஸ், அனிமல் செக்ஸ் என்று என்னென்னவோ எழுதியிருந்தது.  பஸோலினி இயக்கிய 120 days  of  a Sodom  என்ற பட்த்தைப் பார்ப்பது போல் இருந்த்து அந்த நோட்டீஸ்.  இப்படி இலக்கியத்துக்கு சம்பந்தமில்லாத சராசரிகளிடம் கொண்டு போய் என் எழுத்தை அறிமுகப்படுத்தும் போது இம்மாதிரி மரண விபத்துகளே ஏற்படும்.
அப்படி ஒரு விபத்து என் சிநேகிதி ஒருவருக்கு ஏற்பட்டிருப்பதாக யூகிக்கிறேன்.  அவர் எனக்கு ஓரிரு சந்தர்ப்பங்களில் பண உதவி செய்திருக்கிறார்.  திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.  இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஒரு மெயில் வந்தது.  இது போல் அடிக்கடி நிகழ்வதால் சரி என்று விட்டு விட்டேன்.  அதோடு முடிந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன்.  இரண்டு நாட்கள் கழித்து “I would not be able to do anything for you henceforth and would not be liked to be communicated. Hope you understand and thanks for your co-operation” என்று ஒரு கடிதம் வந்தது.
என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த மிக அவமானகரமான தருணங்களில் இதுவும் ஒன்று என எண்ணினேன்.  என்னோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்று எழுதும் நபரிடம் போய் பணம் வாங்கும் அளவுக்கு நான் கீழ்த்தரமாகப் போய் விடவில்லை என்று ஒரு வரி எழுதிப் போட்டாலும் அந்தக் கடிதத்தின் அவமானகரமான அடி என்னை மிகவும் அதிர வைத்தது.
அராத்து சொன்ன சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது.  அவருடைய ஊர் சிதம்பரம்.  அங்கே வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வருவதுண்டு. நமக்குப் பொதுவாகவே வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் அவர்கள் என்ன ஊர், எந்த தேசம் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படும்.  அந்த ஆர்வத்தில் அராத்தும் ஒரு வெளிநாட்டுக்காரரிடம் “நீங்கள் எந்த ஊர்?” என்று ஆங்கிகலத்தில் கேட்டிருக்கிறார்.  அப்போது அராத்தின் வயது 10.  அதற்கு அந்த வெளிநாட்டுக்கார்ர் சொன்ன பதிலைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்ப்டுவீர்கள்.  அவர் அராத்திடம் “No pen” என்று பதில் சொல்லியிருக்கிறார்.  பத்து வயதுப் பையன் அராத்துக்கு ஒன்றும் புரியவில்லை.  நோ பென் என்று ஒரு பெயர் இருக்குமா?  மறுபடியும் நீங்கள் எந்த தேசம் என்று கேட்க, அந்த வெள்ளைக்கார்ர் மறுபடியும் நோ பென் என்று சொல்லியிருக்கிறார்.  அராத்துக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை.  மறுநாளும் கோவில் பக்கம் சென்று அங்கே வந்த வேறு வெளிநாட்டுக்கார்ர் ஒருவரிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்க அவரும் நே பென் என்று சொல்லியிருக்கிறார்.  ”அட ங்கொக்கால ஓலி, என்னடா இது, எவனைக் கேட்டாலும் நோ பென் ங்கிறான்? என்னடா விஷயம்?” என்று அமைதியாக இருந்து அங்கே வரும் வெளிநாட்டுக்கார்ர்களை கவனித்திருக்கிறான் பொடியன் அராத்து.  பிறகுதான் விஷயம் தெரிந்திருக்கிறது.  அங்கே உள்ள பொடிப்பயல்கள் வெளிநாட்டுக்கார்ர்களைப் பார்த்தால் பென் ப்ளீஸ் பென் ப்ளீஸ் என்று கேட்கிறார்கள்.  வெளிநாட்டுக்காரனும் நோ பென் நோ பென் என்கிறான்.  ஆக, எந்தப் பொடியன் என்ன கேட்டாலும் நோ பென் என்று ஆகி விட்டது பதில்.
அடங் கொம்மால என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தாராம் அராத்து.  அராத்து அப்படித்தான் அசிங்க அசிங்கமாகப் பேசுவார்.  அதே அசிங்கமான வார்த்தையைத்தான் அந்தக் கடிதத்தைப் படித்தபோதும் உச்சரித்தேன்.  நான் என்ன உங்களிடம் பேனா யாசகம் கேட்கும் சிறுவன் என்று நினைத்தீர்களா?
எனக்கு உதவி செய்யும் அளவுக்கு நீங்கள் பெரிய இட்த்தில் இருக்கிறீர்களா என்ன?  ஒரு துறவியின் திருவோட்டில் நீங்கள் இடும் அன்னம் அந்தத் துறவிக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்?  உங்கள் குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்டுவதை அந்தக் குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்? தமிழ் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எழுத்தாளர்களை ஆதரிப்பது நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவியா?
நான் மற்ற சராசரி மனிதர்களைப் பற்றிச் சொல்லவில்லை.  என் எழுத்தின் முக்கியத்துவம் தெரிந்த ஒன்றிரண்டு வாசக நண்பர்களிடம் மட்டுமே இதைக் கேட்கிறேன்.  எல்லோரிடமும் என்று நினைத்து விடாதீர்கள்.
தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரான கோபி கிருஷ்ணனுக்கு மாதம் 500 ரூ மட்டுமே தேவைப்பட்டது. அதுவும் தேநீர் மற்றும் சிகரெட் செலவுக்காக.  அவர் எப்போதும் புகைத்துக் கொண்டே இருப்பார்.  அதனால்தான் அவர் இறந்தார் என்று எழுதியிருக்கிறார் ஒருவர்.  அப்படி அல்ல அது.  சிகரெட் குடிக்க காசு இல்லாத்தால்தான் அவர் இறந்தார்.  பார்ப்பதற்கு 45 வயதுக்கு மேல் சொல்ல முடியாது.  அவர் குடிக்கும் சிகரெட் சுண்டு விரல் நீளம் இருக்கும். ஒரு சிகரெட் அஞ்சு பைசா.  எனக்கு அப்போது பணக்கார நண்பர்கள் கிடையாது.  நானே அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  அவருடைய கதைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை ஆபீசாக ஏறி இறங்கினேன்.  இந்தியா டுடேயில் மட்டும் ஏற்றுக் கொண்டார்கள்.  ஒரு கதைக்கு 1500 ரூ.  ஆனால் கதை வந்து ஆறு மாதம் கழித்துத்தான் செக் வரும்.  (இப்போதும் அதே நிலைதான்).  கோபி கிருஷ்ணனின் முதல் கதை இந்தியா டுடேயில் வெளிவந்து செக் வந்து அவர் கையில் கிடைக்கும் போது அவர் பிணமாகக் கிடந்தார். தமிழ் சினிமா காட்சி மாதிரி இருக்கும்.  ஆனால் அதுதான் உண்மை.
தர்மு சிவராமு, பாரதிக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த கவி என்று அவனைச் சொல்வேன்.  அவனுக்கு சில பணக்கார நண்பர்கள் இருந்தார்கள்.  அந்த நண்பர்கள் அவனுடைய கவிதையின் மீது ஈர்ப்பு கொண்டு அவனுக்கு நண்பனானவர்கள்.  அதில் ஒரு தொழிலதிபரும் உண்டு.  ஒருவர் அவருடைய வீட்டுப் பூஜை அறையில் அவனுடைய படத்தை வைத்திருந்தார்.  60 வயது என்றாலும் பார்ப்பதற்கு 30 வயதுதான் சொல்ல்லாம்.  கட்டை பிரம்மச்சாரி.  சிலம்பாட்ட வீரனைப் போல் இருப்பார்.  பன்றிகள் வாழும் தொழுவத்தில் (சேரிக்குள் சேரி என்று ஒருமுறை என்னிடம் சொன்னார்.  அவர் வார்த்தைகள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன) வாழ்ந்த்தால்  மஞ்சள் காமாலை மாதிரி ஏதோ ஒரு கடும் நோய் தாக்கி மருத்துவம் பார்க்க வழியில்லாமல் செத்தார்.
ங்கோத்தா, இப்படி அனாதையாக தெரு நாய்களைப் போல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.  இந்த நிலை எனக்கு வேண்டாம் என்று நான் தீர்மானம் செய்தேன். அதற்கு நான் முதலில் செய்ய வேண்டியது, என் சுயகௌரவத்தை விட்டுக் கொடுப்பது. சுயகௌரவத்தைக் குப்பையில் எறிந்து விட்டு குப்பையில் கிடந்த திருவோட்டைக் கையில் எடுத்துக் கொண்டேன்.
தர்மு சிவராமு செய்ய மறுத்த காரியம் அது.  அவருக்கு வேண்டிய ஒரு தொழிலதிபர் ஒரு அலுவலகத்தில் அவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்.  தர்மு செய்ய வேண்டியது வேலை அல்ல.  அவ்வப்போது அந்த அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்துப் போட வேண்டும்.  ”என் கவிதைதான் என் கையெழுத்து; போடா உன் உதவியை எடுத்துக் கொண்டு” என்று உதை கொடுத்து அனுப்பி விட்டார்.  என்னோடு தேநீர் அருந்தும் போது கூட “நீ கொடுக்காதே; கொடுப்பதாக இருந்தால் குடிக்க மாட்டேன்” என்று சொல்வார்.  அந்த அளவுக்கு சுயகௌரவம் கொண்டவர்.
எனக்கு என் சுயகௌரவத்தை விட நான் வாழும் சமூகமும் தமிழும் முக்கியமாகத் தோன்றியதால்தான் திருவோட்டைக் கையில் எடுத்தேன்.  ஏனென்றால், எழுத்தாளர்களால்தான் தமிழே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மொழியையும் அம்மொழி சார்ந்த கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே.  இதை நான் தமிழ்ச் சூழலை வைத்துச் சொல்கிறேன். மற்ற சமூகங்களில் இந்த வேலை எழுத்தாளர்களின் தோளில் மட்டுமே விழுவதில்லை; அதைச் செய்ய பல்கலைக் கழகங்களும் மற்றும் பலரும் இருக்கின்றனர்.  அந்தச் சமூகங்கள் எழுத்தாளர்களைத் தங்கள் சொத்தாக நினைத்துக் கொண்டாடுவதால் எழுத்தாளர்களும் இப்படித் தெருநாய்களைப் போல் அநாதைகளாய் சாவதில்லை.
தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வதென்பது ஆஃப்கனிஸ்தானில் ஒரு இசைக் கலைஞனாக வாழ்வதற்கு ஒப்பாகும்.
உத்தமத் தமிழ் எழுத்தாளனின் நடவடிக்கைகளையும், அவருடைய எழுத்தையும் எனக்குப் பிடிக்காது.  ஆனால் தமிழில் எங்கள் எல்லோரையும் விட அதிகம் எழுதியவர் அவர்தான். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரே தான் சினிமாவில் வசனம் எழுதியதால்தான் தன் ஏழ்மை நீங்கியது என்றும், தன் மகனின் கல்லூரிப் படிப்புச் செலவுக்கு சினிமா வசனத்தினால் கிடைத்த பணம்தான் உதவியது என்றும் எழுதுகிறார்.  மாடியில் தனக்கென்று ஒரு அறை கட்டியதற்கும் சினிமா பணம்தான் அவருக்கு உதவியிருக்கிறது.  என்ன ஒரு சமூக அவலம் பாருங்கள்! உலகில் வேறு எந்த இடத்திலும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கலாச்சார அவலத்தைப் பார்க்க முடியாது.
எஸ். ராமகிருஷ்ணன் எப்போதுமே தன்னைப் பற்றி எழுத மாட்டார்.  அந்த விஷயத்தில் அவர் சுஜாதா மாதிரி.  அதனால் நான் சொல்கிறேன்.  15 ஆண்டுகளுக்கு முந்திய கதை அது.  என்னைப் பார்க்க என் எலிப் பொந்துக்கு வருவார். உங்கள் வீட்டுக் கக்கூஸ் அளவுதான் இருக்கும் என் வீடு.  மந்தைவெளி. ”டீ குடிக்க உங்களிடம் காசு இருக்கிறதா?” என்று அவர் என்னையும் நான் அவரையும் கேட்டுக் கொண்டிருப்போம். சரி, கண்ணன் வரட்டும் என்று இன்னொரு நண்பரின் வருகைக்காகக் காத்திருப்போம். சிங்கிள் டீக்கு வழியின்றி இருந்த காலம் அது.
எனவேதான் என் சுயமரியாதையைக் கைவிட்டு திருவோடு ஏந்தத் துணிந்தேன்.  அதனால்தான் ஒரு எழுத்தாளர் 50 லட்சம் பேர் வாசிக்கும் ஒரு பத்திரிகையில் என்னைப் பற்றி ‘இண்டர்நெட் பிச்சைக்காரன்’ என்று எழுதவும், அதைப் பின்பற்றி பதிவுலக அன்பர்கள் என்னை பிச்சைக்காரன், பிச்சைக்காரன் என்று தூற்றவும் ஆரம்பித்தார்கள்.
இந்தப் பிச்சைக்காரத்தனத்திலிருந்து ஒரே நாளில் நான் வெளியே வந்து விட முடியும்.  ஒன்றுமில்லை.  15 ஆண்டுகளாக நான் எழுதி வரும் சினிமா விமர்சனம் என்ற காரியத்தை நிறுத்தி விட வேண்டும். பொய்யாகப் பாராட்டி எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.  சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்த வேண்டும்.  ஒரே நாளில் என் வறுமை என்னை விட்டு அகன்று விடும்.  வசந்த பாலனுக்கு அல்ல; அவருடைய குருநாதரான ஷங்கருக்கே வசனம் எழுதுவேன். ஆனால் என்னால் முடியுமா?  ஜெண்டில்மேனிலிருந்து ஷங்கருடைய படங்களைக் கிழித்துக் கிழித்துத் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.  ஜெண்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி என்று ஷங்கரின் ஒவ்வொரு படத்தையும் குப்பை குப்பை என்று சொல்லி நார்நாராய்க் கிழித்துக் கொண்டிருக்கிறேன்.  அவர் எப்படி என்னை வசனம் எழுதக் கூப்பிடுவார்?
என் சினிமா விமர்சனம் அப்படி என்றால், என் அரசியல் விமர்சனம் எனக்கு உயிராபத்தையே விளைவித்து விடும் போல் இருக்கிறது.  ’என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?’  என்ற அரசியல் கட்டுரையை என்னைத் தவிர வேறு எந்தத் தமிழ் எழுத்தாளராவது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எழுதுவாரா? எழுதுவதற்குத் துணிச்சல் இருக்குமா? (ஞாநி, சோ இருவரும் அரசியல் விமர்சகர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் இங்கே சேர்க்கவில்லை).
கடைசியாகச் சொல்கிறேன்.  இது எனக்குப் பண உதவி செய்யும் அன்பர்களுக்கான வார்த்தை.  மற்றவர்கள் வழக்கம்போல் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று தங்கள் இஷ்டம் போல் திட்டிக் கொண்டு திரியலாம்.
நீங்கள் எனக்குச் செய்யும் உதவி உதவி அல்ல. அது உங்களுடைய பொறுப்பு; கடமை.  நான் உங்களுடைய மனசாட்சியாக இருக்கிறேன்.  அதனாலேயே இந்த சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தையாக இருக்கிறேன்.  எனவே ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப் போன்றதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி.  என்னுடைய தினசரி வாழ்வுக்கான சிறிதளவு பணத்தை நீங்கள்தான் எனக்குத் தர வேண்டும்.  என் எழுத்தின் முக்கியவத்தும் உங்களுக்குத் தெரிந்தால் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.  என்னுடைய எழுத்துப் பயணம் சற்று பொருட்செலவை அளிக்கக் கூடியது. 2001-இல் நான் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணம் ராஸ லீலாவின் 200 பக்கங்களாக மாறியது.  அந்த 4 லட்சம் ரூபாயையும் என் நண்பர் ஷோபா சக்திதான் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு வெளிவந்த அவருடைய நாவல் கொரில்லாவை நான் கடுமையாக விமர்சித்தேன்.  4 லட்ச ரூபாய்க்காக என்னை விற்கவில்லை.  அந்த நாவல் ஈழப் போராட்டத்தை மிக மோசமாகக் கொச்சைப் படுத்தியது.  என்னுடைய அந்த விமர்சனம் எங்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்தியது.  பிறகு அவருடைய ‘ம்’ என்ற நாவல் வந்தது. அது ஒரு இனவாத நாவல்.  சிங்களர்கள் கொடுங்கோலர்கள் என்று ஒரு இனத்தையே பழிக்கும் நாவல் அது.  அதற்கு மேல் ஷோபா சக்தியும் நானும் சந்திக்கவில்லை.  இடையில் ஒருமுறை சந்தித்த போது என் புரவலர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு நான் அவரிடம் என்னை விற்று விட்டேன் என்றார்.  அவருடைய கோபத்தையும், என் விமர்சனத்தால் ஏற்பட்ட காயத்தையும் புரிந்து கொண்டேன்.  அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கவில்லை.  அதற்குப் பிறகு என் பயண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
ஆக, இப்படி எந்தத் தருணத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்வதால்தான் உங்களிடம் திருவோடு ஏந்துகிறேன்.  எனவே என்னுடைய எழுத்துப் பயணத்தைத் தொடர்வதற்கு எனக்கு உங்களுடைய உதவி தேவை. அப்படியே உங்களால் எனக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் மேற்கண்டவாறு அந்தப் பெண் எழுதியபடி கடிதம் எழுதாதீர்கள். பெருமாளுக்குக் கோவில் கட்டுவதற்காக திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார்.  நான் அப்படியெல்லாம் செய்யவில்லை; திருவோடுதான் ஏந்துகிறேன்.  அதையும் தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள். ஏனென்றால், என்னுடைய எழுத்துக்கு உங்களால் உதவி செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தாலும், என் எழுத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்தால் உங்களை என்னுடைய சகபயணியாகவே கருதுவேன்.  அதில் சந்தேகமில்லை.
ஒரு துறவியைப் போலவே நான் உங்களிடம் வருகிறேன்; அன்னமிடுங்கள். அந்த அன்னம் எனக்கு நீங்கள் தரும் உணவு; உதவி அல்ல.
17.9.2010.
4.00 p.m.
(காலடியிலிருந்து)
(என் வங்கிக் கணக்கு எண்:
ICICI   602601 505045
T.Nagar, Chennai.
Account holder’s name:
K. ARIVAZHAGAN

Sunday 27 January 2013

குஞ்சுகள் கோவணத்தை செண்டிமெண்டலாக உருவுவது எப்படி?

அன்புள்ள தல சாரு அவர்களுக்கு,
மீண்டும் உங்களின் வேலைப்பளுவின் இடையே தொல்லை படுத்துவதற்கு மன்னிக்கவும்.
உங்க வலைப்பூவில் செப் 13 ஆம் தேதி எழுதிய பதிவைக் கண்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். படித்த கனம் துக்கம் தொண்டை அடைத்துக்கொண்டது. I can’t express charu. It makes us to feel like it happens to me.
உடனடியாக என்னால் இயன்ற பணத்தை, உங்கள் கணக்கில் செலுத்த முயன்றேன். என் online transfer இல் ஒரு சிறிய கோளாறு. (activation code என் மொபிலில் வரவில்லை). ஆகையால் நான் என் நண்பரின் பழைய Registered Payee கணக்கிற்கு Transfer செய்து, அவரின் அக்கௌன்ட் மூலம் உங்களுக்கு பணத்தை செலுத்துகிறேன் (ரூபாய் 2 ,000) . இந்த சிறிய தாமதத்திற்கு என்னை மன்னிக்கவும். இத்துடன் அவர் Transfer செய்த நகலை இணைத்துள்ளேன்.
சார், இவ்ளோதான் செய்ய முடிந்ததற்கு   நான் வெட்கப்படுகிறேன். உங்களின் பின்னால் நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள், அவர்களை பாஸ்கர் ஒரிங்கினைப்பார்… அந்நாள் வெகு தொலைவில் இல்லை.  சாரு, கூடிய சீக்கிரம் வாசகர்கள் ஆகிய நாங்கள் உங்களை ராஜ மகுடத்தில் உட்கார வைப்போம் என்று மிக்க நம்பிக்கை உள்ளது.
நீங்கள் நீண்ட நலமுடன் வாழ பிராத்திக்கும்,
உங்கள் தீவிர ரசிகன்
ஹரி பிரசாத்
துபாய்
டியர் ஹரி,
முதலில் உங்கள் கடிதத்தை உங்கள் அனுமதியின்றி வெளியிட்டதற்கு என்னை மன்னிக்கவும்.  உங்களுக்கு மெயில் எழுதிக் கேட்க நேரம் இல்லை.
ஒரு நண்பர் நூறு ரூபாய் மணி ஆர்டர் மூலம் அனுப்பி இருந்தார்.  அவரது நல்ல உள்ளத்தை நான் மனதாரப் பாராட்டினேன்.  அவரால் அவ்வளவுதான் முடியும்.  தொகை முக்கியம் அல்ல;  ஒரு கலாச்சார செயல்பாட்டில் நாமும் உடன் இருக்கிறோம்; தோள் கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம்.  தேர் இழுக்கும் நாமும் ஒரு தோள் கொடுப்பது இல்லையா, அது போல.  அந்த நண்பர் முதலில் வங்கியில்தான் நூறு ரூபாயைக் கொடுத்து முயற்சி செய்தாராம்.  ஆனால் வங்கி மூலம் 100 ரூ. அனுப்பினால் என் கணக்கில் 180 ரூ. பிடிப்பார்கள் என்று தெரிந்ததால் பிறகு எனக்கு மெயில் எழுதி, என் முகவரி வாங்கி மணியார்டர் அனுப்பினார்.  அந்த நூறு ரூபாயை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்.
இன்னொரு நெருங்கிய நண்பர் பணம் அனுப்பியிருந்தார்.  நன்றி என்று எழுதினேன்.  என் தந்தைக்கு என் கடமையைச் செய்கிறேன்; இதில் நன்றி எங்கிருந்து வந்தது என்று எழுதினார்.  அதைப் படித்து என் கண்கள் கலங்கி விட்டன.  இப்போது உங்கள் கடிதம்.  இனிமேல் எக்காலத்திலும் தனியன் என்று உணர மாட்டேன்.  உங்களுக்கு ஒரு நற்செய்தி.  ஸீரோ டிகிரியின் ஹிந்தி மொழிபெயர்ப்பும் முடிந்து விட்டது.  அடுத்த ஆண்டு ஸீரோ டிகிரி ஃப்ரெஞ்ச் எடிஷனுக்கான கலந்துரையாடல் பாரிஸில் நடக்க வேண்டும்.  அதுதான் என் இலக்கு.  ஃப்ரான்ஸில் அஸியா ஜெப்பார், தாஹர் பென் ஜெலோன், மிஷல் வுல்பெக் போன்ற பெயர்களோடு என் பெயர் வரும்.  அதுதான் என் வாசகர்களாகிய உங்களுக்கு நான் கொடுக்கும் மிகப் பெரிய அன்பளிப்பாக இருக்கும்…
உங்களுக்கும் நண்பர்களுக்கும் நான் வணங்கும் அய்யப்பனும் சோட்றாணிக்கரை பகவதியும் அருளையும் செல்வத்தையும் வழங்கட்டும்…
சாரு
(இந்தக் கடிதத்துக்காக நாவல் கொஞ்சம் காத்திருக்கலாம் என்று துணிந்து இந்தப் பக்கம் வந்து விட்டேன்… அநேகமாக நாவலை நாளை முடித்து விடுவேன்.  முடித்த அடுத்த கணம் ரெமி மார்ட்டின் தான்.  யார் யார் வருகிறீர்கள்? எங்கே சந்திக்கலாம்?  ஸீரோ டிகிரியை எழுதும் போது கூட இவ்வளவு மன பாரத்தை உணர்ந்ததில்லை. …  )

ஐயோ குப்பி குடுக்க ஆள் இல்லையே, பழுக்கக் காய்ச்சின கம்பியை நம்ப வேண்டி இருக்குதே!

அன்புள்ள சாரு,
உயிர்ம்மையில் நீங்கள் எழுதும் திரை விமர்சனங்கள்(அல்லது சவுக்கடிகள்..உங்களவுக்கு தைரியமான விமர்சனம் நான் படித்ததில்லை) அந்த மாதம் முடிந்தவுடன்தான் நீங்கள் உங்கள் தளத்தில் அதை வெளியிடுவீர்கள்.ஆனால் இந்த மாதம் அழகர்சாமியின் குதிரை+I am விமர்சனத்தை முதல் வாரத்திலேயே இணையத்தில் ஏன் வெளியிட்டீர்கள்?உயிர்மையை படிக்கசொல்லி உங்கள் வாசகர்களுக்கு பரிந்துரை செய்யலாமே!!பெரியார் காட்டுமிராண்டி மொழி என்பதை  மாற்ற பாடுபடுவதாக சொல்லும் நீங்கள்(வரவேற்கிறேன்) இது போன்ற தரமான  சிறு பத்திரிக்கைகளை மக்கள் படிக்க பரிந்துரைக்கலாமே  !!
நன்றிvikidare26@gmail.com

தெரியாமப் பண்ணிப் புட்டேன் சாமி.  என்னய மன்னிச்சுடுங்க… இல்லேன்னா எதாச்சும் பனிஷ்மெண்ட் குடுத்துடுங்க…  என்னா பனிஷ்மெண்ட் குடுக்கலாம் எனக்கு…  ஒரு இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சி என் குதத்தில் செருகலாமா?
சாரு

சாகறதுக்குள்ள எச்சகல படிக்க முடியுமா (அல்லது) எச்சகல படிச்சுட்டு செத்துபோயிட முடியுமா?

அன்புள்ள சாரு நிவேதிதா,
இன்னும் சில நாட்களே நான் உயிரோடு இருப்பேன்.  டிசம்பர் 6 வரை நிச்சயம் இருக்க மாட்டேன்.  அதற்கு முன் எக்ஸைல் நாவலைப் படிக்க ஏதாவது வழி இருக்கிறதா, சொல்லுங்கள்…
மோகன் ராஜ்
அன்புள்ள மோகன் ராஜ்,
எனக்கு இதுவரை என் வாழ்நாளில் வந்த கடிதங்களிலேயே என்னை மிகவும் பாதித்த கடிதம் உங்களுடையதுதான்.
ஏன் நீங்கள் இப்படி எழுதி இருக்கிறீர்கள்?  தங்கள் வயது என்ன?  ஏதாவது அற்புதம் நிகழ்ந்து நீங்கள் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று நான் வணங்கும் அய்யப்பன், ஷீர்டி பாபா, சோட்டாணிக்கரை பகவதி அம்மன், என் குருநாதர் மஹந்த்தா ஆகியோரை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
எப்படி இருந்தாலும் பிரதி கைக்குக் கிடைத்ததும் உங்களிடம் சேர்ப்பிக்கிறேன்.  தங்களுக்கு நான் புத்தகத்தை எப்படி அனுப்பட்டும்?  முகவரி தந்தால் நேரிலேயே வந்து தருகிறேன்.
எக்ஸைல் நாவலின் 376 பக்கத்தில் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகம் வருகிறது.  அது :
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதிபா:
ந சைவ ந பவிஷ்யாம: ஸர்வே வயமத: பரம் (2:12)
இதன் பொருள்:
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லதிருந்திலேன்.  நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே.  இனி நாம் என்றைக்கும் இல்லாமல் போகவும் மாட்டோம்.  அதாவது, ஆன்மாவுக்கு அழிவில்லை.
(கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு செய்த உபதேசம்)

Thursday 24 January 2013

போன வருட ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் மண்டையின் காமெடி

நாலைந்து நெருங்கிய நண்பர்களுக்கு போன் போட்டு திங்கள்கிழமை சென்னைப் பல்கலைக்கழகம்  lingua fest -இல் என்னுடைய பேச்சைக் கேட்க வருகிறீர்களா என்று கேட்டேன்.  அந்த ஐந்து பேருமே திங்கள் கிழமை காலை விடுப்பு கிடைப்பது கடினம், ஸாரி என்று சொல்லி விட்டனர்.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஒரு மாலை விருந்தின் போது சேட்டன் பகத்துடன் பேசிக் கொண்டிருந்தேன்.  மறுநாள் காலை பத்து மணிக்கு Front Lawns இல் நானும் கவிஞர் சேரனும் காஷ்மீரைச் சேர்ந்த சித்தார்த்தா கிகூ, பாங்க்ளா தேஷைச் சேர்ந்த தஹ்மிமா ஆனம் ஆகியோரின் அமர்வு இருந்தது.  ஜெய்ப்பூர் விழா நடந்த டிக்கி அரண்மனையில் அந்த front lawns தான் மிகப் பெரிய இடம்.  சுமார் 2000 பேர் கொள்ளளவு.   அதே நாள், அதே நேரத்தில் சேட்டன் பகத்தின் அமர்வும் இருந்தது.  அது mughal tent.  அதன் கொள்ளளவு 1000.  எனக்குக் கொஞ்சம் பயம்.  சேட்டன் பகத் இந்தியாவில் பிரபலமான பெயர் என்பதால் எல்லா கூட்டத்தையும் அவர் அள்ளிக் கொண்டு போய் விடுவாரோ என்று.  அதை அவரிடம் சொன்னேன்.  அதற்கு அவர் “நான் உங்களைக் கண்டு பயந்து கொண்டிருக்கிறேன்…  என்ன பேச்சு பேசுகிறீர்கள்?” என்றார் என்னிடம்.  என்னுடைய ப்ரூஃப் ரீடராக மாறி இருக்கும் எளுத்தாளருக்கு இது சிரிப்பை வரவழைக்கும்.  ஆனால் மறுநாள் அதுதான் நடந்தது.  front lawns-இல் இடம் போதாமல் வெளியே இருந்த டிவி திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அது மட்டும் அல்ல.  அதே தினம் 11 மணிக்கு இன்னொரு அமர்வு பாமா மற்றும் நமீதாவுடன் (இது வேறு நமீதாங்க)  இருந்தது.  முதல் அமர்வு 11 மணிக்கு முடியாததால் என்னைக் கையைப் பிடித்து அவசர அவசரமாக அடுத்த அமர்வுக்கு அழைத்துச் சென்றார் விழா அமைப்பாளர்களில் ஒருவர்.  அப்போது ஒரு இளம் பெண் அவசர அவசரமாக ஓடி வந்து “நான் உங்களுடைய தீவிரமான ரசிகை…  இந்த அமர்வு முடிந்ததும் அடுத்த அமர்வில் நீங்கள் பேசப் போவதைப் பார்க்க வந்து கொண்டிருக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டே என்னோடு வேக நடையில் வந்து கொண்டிருந்தார்.
அடுத்த அமர்வில் நான் “இங்கே வந்திருக்கும் எழுத்தாளர்களெல்லாம் ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ், ஸெய்ண்ட் ஸ்டீஃபன்ஸ் போன்ற இடங்களில் பேராசிரியர்களாக இருப்பவர்களாக இருக்கிறார்கள்.  எனக்கு இது பயத்தை ஏற்படுத்துகிறது…  ஏனென்றால், நான் ஒரு கல்லூரி ட்ராப் அவுட்” என்றேன்.   உடனே ஒரு பெண் எழுந்து “thats why we like you charu…” என்று கத்தினார்.  என்னோடு ஓடி வந்த அதே பெண்.  ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்திருந்த வட இந்தியப் பெண்.   (சும்மா புருடா விடவில்லை… இந்த இணைப்பில் அந்த விடியோவை நீங்கள் காணலாம்…
அந்த அமர்விலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.  பலரும் இடம் இல்லாமல் வெளியே திரையில்தான் பார்த்தார்கள்.  அப்போதுதான் நான் ஒரு crowd puller என்று நினைத்தேன்.
ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் உலகம் பூராவிலிருந்தும்  262 எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்.  அதில் அடியேனுக்கு மட்டுமே மூன்று அமர்வுகளில் பேச வாய்ப்பு அளிக்கப் பட்டிருந்தது
ஆனால் இப்போது தமிழ்நாடு வந்ததும் crowd puller பற்றி ஐயம் வந்து விட்டது.  யாரைக் கேட்டாலும் திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இலக்கியமா என்று அலறுகிறார்கள்.  300 பேர் அமரக் கூடிய அரங்கில் 30 பேருக்கு எப்படி லெக்சர் பண்ணுவது என்று குழம்புகிறேன்.  எது எப்படியோ, மார்க்கி தெ ஸாத்-இலிருந்து மிஷல் ஃபூக்கோ, மிஷல் வூல்பெக் வரை பேசி விடலாம் என்று முடிவு.  இது சம்பந்தமாக இன்று யோசித்துக் கொண்டிருந்த போது ஒரு அபூர்வமான விஷயம் கண்ணில் தென்பட்டது.  காமரூப கதைகள் நாவலில் பக்கம் 268-இலிருந்து 274 வரை விக்தோர் யூகோ எழுதிய hunch back of notre dame  நாவலின் இசை நாடகத்தைப் பற்றி (notre dame de paris : musical) எழுதியிருக்கிறேன்.  அப்படியே உள்ளத்தை உருக்கும் இசையும் நடிப்பும்…  நீங்களும் பாருங்கள். http://www.youtube.com/watch?v=aBXeXBpTVOk
எல்லோரும் காமரூப கதைகளைப் படித்ததோடு நிறுத்தி இருப்பார்கள்.  நாவலிலேயே இந்த இசை நாடகத்தின் லிங்கைக் கொடுத்திருக்கிறேன்.  யாரேனும் பார்த்தீர்களா?  இந்த இசை நாடகத்திலிருந்து ஒரு பகுதியை மட்டும் விடியோவில் போட்டுக் காண்பித்து விட்டு என் லெக்சரை ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கிறேன்.  (காயத்ரி, கவனிக்கவும்… உங்கள் பல்கலைக்கழகத்தில் அந்த வசதியெல்லாம் இருக்கிறதா?)
***
வரும் 13-ஆம் தேதி (13-2-2012) திங்கள் கிழமை காலை பத்து மணி அளவில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் Paris Musings என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஃப்ரெஞ்ச் துறையினரால் நடத்தப்படும் Lingua Fest 2012 – Polyglots Paradise என்ற மூன்று நாள் விழாவின் தொடக்கவுரை அடியேனுடையது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக் கேம்பஸில் உள்ள தந்தை பெரியார் ஹாலில் (F-50) (Main Building, First Floor) என்னுடைய உரை இருக்கும்.    250 பேர் கொள்ளளவு உள்ள ஹாலில் சுமார் 30 மாணவர்கள்தான் வருவார்கள் என்று தெரிகிறது.  நடிகர்களை அழைத்து கூட்டம் கூட்டலாம் என்ற யோசனை ஃப்ரெஞ்ச் துறையினருக்குத் தெரியாது போல் இருக்கிறது.  அதனால் என்னுடைய பேச்சில் ஆர்வம் உள்ள நண்பர்கள் யாவரும் திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு மேற்கண்ட இடத்தில் கூடலாம்.  ஒரே ஒரு நிபந்தனை:  உரையின் போது யாரும் சீட்டி அடிக்கக் கூடாது.  மற்றபடி சிரிக்கலாம்; அதற்குத் தடை இல்லை.  பெரும்பாலும் மாணவிகள்தான் இருப்பார்கள் என்பதால் கூட  இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கலாம்.
ஃப்ரெஞ்ச் கலாச்சாரம், இலக்கியம், தத்துவம் ஆகியவை எனக்குள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களைப் பற்றி விரிவாகப் பேசலாம் என்று இருக்கிறேன்.  ஒரு மணி நேரம் லெக்சர்.  அவசியம் வந்து கலந்து கொள்ளுங்கள்.  திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு அழைக்கிறேன்.  நியாயமே இல்லைதான்.  இருந்தாலும் ஒரு உற்சாகத்தில் அழைக்கிறேன்.  வந்து விடுங்கள்…

Sunday 20 January 2013

சாரு நிவாரண நிதி - 1


நம்முடைய இணைய தளத்தை கட்டணம் செலுத்திப் படிக்கும் ஒன்றாக ஆக்கலாமா என்று நண்பர்களுடன் ஆலோசித்தேன். சீனிவாசனைத் தவிர மற்ற அனைவரும் வேண்டாம் என்றனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம்: ” இப்போது இந்த இணைய தளத்தின் மொத்த வாசகர் எண்ணிக்கை 15,000. இதைக் கட்டணத் தளமாக மாற்றினால் 100 பேர்தான் வருவார்கள். இப்படியே இலவச இணைய தளமாக இருந்தால் இந்த 15,000 என்ற வாசகர் எண்ணிக்கை ஒரு லட்சமாகவும் கூடும். சுஜாதாவுக்கு அடுத்த படியாக உங்களுக்குத்தான் வாசகர் தளம் அதிகம். எனவே அதை மறுதலித்து விட்டு வெறும் 100 பேருக்கான தளமாக மாற்றாதீர்கள். ”

இதற்கு சீனிவாசன் வைத்த எதிர்வாதம்: “துக்ளக் இதழை ஆன்லைனில் படிக்க ஒரு வாரத்திற்கான கட்டணம் 20 டாலர். ஆக, மாதத்திற்கு 80 டாலர். எனவே சாரு ஆன்லைன் தளத்துக்கும் கட்டணமாக 100 டாலர் வைக்கலாம். நூறு வாசகர்கள் நூறு டாலர் கட்டினால் உங்கள் நிலை சீரடையும். ”

சீனிவாசனுக்கு மறுப்பு: “தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக அரசியல் விவகாரங்களில் சோ என்ன எழுதுகிறார் என்று ஒவ்வொரு வாரமும் தெரிந்து கொள்ளா விட்டால் தூக்கமே வராது என்று சொல்வதற்கு ஒரு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாராவாரம் 20 டாலர் கட்டுவார்கள். அதில் ஆச்சரியமில்லை. ஆனால், கலாச்சாரத் தளத்தில் மிகவும் சீரிய மாற்றங்களைக் கொண்டு வர முனையும் சாருவும் சோவும் ஒன்றா? சிந்தியுங்கள்... ”

சீனிவாசன்: “சாரு, இப்படி சொல்லிச் சொல்லியே உங்களைத் தெருவில் நிற்க வைத்து விடுவார்கள். உங்களுடைய எழுத்தைப் படிக்காவிட்டால் தூக்கமின்றிப் புரள நூறு பேர் இருக்கிறோம். நூறு பேர், நூறு டாலர்...யோசித்துப் பாருங்கள். ”

யோசித்தேன். யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காரியம் நடந்தது. இருதய சோதனைக்காக இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டு ‘நலம் ’ என்ற நற்சான்றிதழுடன் விடுவிக்கப் பட்டேன். செலவு: 15,000 ரூபாய். ஆனாலும் தினசரி ஒமேகா 3 என்ற மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டேன். ஒரு மாத்திரை விலை 50 ரூ. நான் தினசரி இரண்டு சாப்பிட வேண்டும். இந்தச் சத்து வஞ்சிரம் மீனில் உண்டு. ஆனால் அந்த மீன் இந்த மாத்திரையை விடப் பல மடங்கு விலை அதிகம்.

இப்படி நான் ஒரு ‘காஸ்ட்லி ’ யான எழுத்தாளராக இருப்பது துரதிர்ஷடம்தான். அபிநவ் பிந்த்ராவின் ஞாபகம் வருகிறது.

இப்போது உள்ள சாய்ஸ் இரண்டுதான். என்னுடைய பணத் தேவை கருதி நூறு பேருக்கான இணைய தளமாக மாற்றலாம். நிச்சயம் நூறு பேர் நூறு டாலர் கட்டிப் படிப்பார்கள். அவர்களின் பெயர் கூட எனக்குத் தெரியும். அல்லது, 15,000 வாசகர்களை ஒரு லட்சமாகப் பெருக்கலாம்.

ஆனால், என்னுடைய எழுத்து அபிநவ் பிந்த்ராவின் தங்கம் போன்றது. கையில் லேப்டாப் இருந்ததால் பெங்களூர் சென்ற போதும் அங்கிருந்து டைப் செய்து பதிவேற்றம் செய்ய முடிந்தது. கல்லூரி மாணவிகளுடன் ‘ மோக்கா ’ காஃபி ஷாப்புக்குச் சென்றால் எனக்கு ஒரு 500 ரூ. செலவாகும். ஆனால் குட்டிக் கதைகள் என்ற நாவலை எழுதலாம். இல்லாவிட்டால் உத்தமத் தமிழ் எழுத்தாளன் மாதிரி பகவத் கீதைக்கு விளக்கவுரைதான் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

எனவே எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நூறு பேர் கூட வேண்டாம். ஒரு முப்பது பேர் போதும். அந்த முப்பது பேரும் மாதம் முப்பது டாலரை எனக்கு அனுப்பி வைத்தால் உங்கள் மூலமாக 15,000 பேர் இந்த இணைய தளத்தை இலவசமாகப் படிக்கலாம். எனக்காக வேண்டாம்; இந்தப் பதினைந்தாயிரம் பேருக்காக முப்பது பேர் முன்வருவீர்களா?

என்னுடைய ICICI வங்கிக் கணக்கு எண்: XXXXXXXX , T, Nagar, Chennai. Account holder’s name: K. ARIVAZHAGAN.
7.9.2008.
9.15 p.m.

Thursday 17 January 2013

பரவச நிலையில் சாரு !!!



இப்போதெல்லாம் சாருஆன்லைனில்  என் எழுத்து அதிகம் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்று நண்பர்கள் பலர் சொல்லக் கேட்கிறேன்இது சம்பந்தமான விளக்கமே இது:

நான்  நிறைய எழுதுகிறேன்ஆனால் பதிவேற்றம் செய்வதில்லைஎன் தோழி ஒருத்தி  சொன்னாள்: You are addicted to writing, man. அந்தக் கடைசி வார்த்தையில் வரும்மேவை மே மாதத்தை எப்படி உச்சரிக்கிறோமோ அதைப் போல் உச்சரிப்பாள்அமெரிக்காவில் man- அப்படித்தான் உச்சரிப்பார்களோஎனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவு பழக்கம் இல்லாததால் அமெரிக்க உச்சரிப்பு தெரியாது

ஏன் பதிவேற்றம் செய்வதில்லைஎதிரிகள் அதிகம் என்பதால்தான்ஸீரோ டிகிரியை நான் ஒரு உன்மத்த  நிலையிலிருந்தே எழுதினேன்அது போன்ற ஒரு நாவலை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்தால் என் எதிரிகள் என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு என் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்து விடுகிறார்கள்

மீண்டும்  சொல்கிறேன்; எனக்கு யாரும் எந்தத் தீங்கும் செய்ய  முடியாதுஏனென்றால், எனக்கு வழங்கப்படும் தீமையை நான் தீமை என்று நினைப்பதில்லைஅனுபவம் என்றே  கொள்கிறேன். மரணத்தைப்  பற்றி மட்டுமே சிறிது சஞ்சலம்அதுவும் கூட, என் எழுத்து நின்று விடுமே என்ற காரணத்தினால்தான்மற்றபடி மரணத்தைக் கண்டும் அச்சமில்லை

ஸீரோ  டிகிரியை எழுதிய போது இருந்த அதே  உன்மத்த நிலையில்தான் இப்போதும் இருக்கிறேன்நேற்று காலையிலிருந்து மாலை வரை எழுதினேன்அதையெல்லாம் என் சுயநினைவிலிருந்து எழுதினேன் என்று சொல்ல முடியாதுஏதோ ஒரு பேய் அல்லது மோகினி என் உடலில் புகுந்து கொண்டு எழுதுவது போல் தோன்றுகிறதுசாமியாடி சாமி ஆடுவானே அது போல என்று வைத்துக் கொள்ளலாம்அதுவரை பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லைமாலை நான்கரை மணிக்கு எழுந்து சிட்டி செண்டர் சென்று அங்குள்ள அரேபியன் ஹட்டில் சார்கோல் சிக்கன் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்துநேராகச் செல்லுங்கள்என்றேன். யெல்லே பேஜஸ் வரும் போது ஆட்டோக்காரர்எங்கே போக வேண்டும்?” என்று மீண்டும் கேட்ட போது அந்தக் கேள்விக்கு என்னிடம் பதில் இல்லாததால்மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் எங்கே நிறுத்த முடிகிறதோ அங்கே நிறுத்துங்கள்என்றேன்.

இறங்கியவுடன்  எங்கே செல்வது  என்று தெரியவில்லைகடற்கரைக்குச்  செல்லலாமா என்ற யோசனையை நிராகரித்தேன்அப்போது இருந்த பரவச நிலையில் கடற்கரை வேண்டாம் என்று தோன்றியதுகாலையிலிருந்து கடவுளோடு உரையாடியதால் ஏற்பட்ட பரவசம் அது

வேறு  எங்கே செல்வது  என்று தெரியவில்லைபரவசம் உச்சநிலையை அடைந்து விட்டதால்  இனிமேல் எழுத முடியாதுஅதனால் வீட்டுக்குச் சென்று பயனில்லை.   மனோஜ் (ஹமீதின்  மகன்) இன்று பிறந்த நாள் என்று சொல்லியிருந்தான்.   அவன் வீட்டுக்குச் செல்லலாம் என்று நினைத்து ஹமீதை அழைத்தேன். போனை எடுத்துஇதோ ஒரு நிமிடத்தில் கூப்பிடுகிறேன்என்று வழக்கம்போல் சொல்லி அழைப்பைத் துண்டித்து விட்டார்சரி, பரவாயில்லை என்று அங்கிருந்து அபிராமபுரத்திலிருக்கும் மனோஜ் வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தேன்அப்போது நான் இருந்த பரவச நிலையில் ஒரு ஏழெட்டு கிலோமீட்டராவது நடந்தால்தான் மனம் ஒரு கட்டுக்குள் வரும் என்று தோன்றியது

ஆனாலும் ஒரு சந்தேகம், அவ்வளவு தூரம்  நடந்து சென்று அங்கே மனோஜ்  இல்லையானால்  என்ன செய்வதுமனோஜுக்கு மூன்று வயதுதான் ஆகிறது; அதனால் இன்னும் செல்போன் வைத்துக் கொள்ளவில்லைஒரே ஒருநாள்தான்  அவனிடம் செல்போனில் பேசியிருக்கிறேன்அதுவும் அவனுடைய அம்மா போன் மூலம்.  ”டேய் மனோஜ், எப்படிடா இருக்கே?” என்று நான் பேச்சை ஆரம்பித்ததுமேபோனை ஹமீதிடம் கொடுங்கள்; கொஞ்சம் பேசணும்என்று சொல்லி அப்போதே அவன் என் மனதை உடைத்து விட்டான். (அப்பனைப் போலவே பிள்ளை!) ஆனால் எப்போதுமே நான் என் நண்பர்களிடமும், தோழிகளிடமும், காதலியிடமும் வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதையும் பார்ப்பதில்லை. அதற்குள் 15 நிமிடம் ஆகியிருந்ததுஹமீதிடமிருந்து போன் இல்லை.   அதனால் மீண்டும் நானே போன் செய்தேன். ”அட சாருவா, நான் கூப்பிட்றேன்னு சொன்னேன்ல, ஹ்ம்ம்சொல்லுங்க?” என்றார்

உங்கள் வீட்டுக்குத்தான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்…”

அடடா, நான் இங்கே வுட்லண்ட்ஸில் அல்லவா இருக்கிறேன்? இன்னிக்கு சுஜாதா நினைவு நாள் விழா இருக்கே?” 

அவர்  சொன்னதும்தான்  ஞாபகம் வந்ததுமீண்டும் திரும்பி வுட்லண்ட்ஸ்  நோக்கி நடக்க  ஆரம்பித்தேன். என்னைப் பார்த்த உடனேயே ஹமீதுஎன்ன, முகமெல்லாம் ஒருமாதிரி ஜொலிக்கிறது? ஏதோ பரவசத்தில் இருப்பது போல் இருக்கிறதே? இப்படி உங்களை நான் பார்த்ததே இல்லையே?” என்று பல கேள்விகளைப் போட்டார். , பரவசம் முகத்திலேயே தெரிகிறதா என்று நினைத்துக் கொண்டேன்

இயக்குனர் ஷங்கரும், ராஜீவ் மேனனும் பேசியதை ரசித்தேன். சுஜாதாவுக்கு பொய் சொல்லவே தெரியாது; பாசாங்கு இல்லாத இயல்பான மனிதர் என்றார் ஷங்கர்சுஜாதா எப்போதுமே ஒரு 21 வயது இளைஞனின் மனதை விட்டுத் தாண்டியதில்லை என்றார் ராஜீவ். இந்த இரண்டு விஷயங்களையுமே நான் வாழ்க்கையில் பின்பற்றி வருபவன்ஆனாலும் அப்போது இருந்த பரவச நிலையில் என்னால் அந்தக் கூட்டத்தோடு ஒன்ற முடியவில்லைஎல்லாமே அந்நியமாக இருந்ததுநண்பர்கள் நர்சிம், லக்கிலுக், கேபிள் ஷங்கர் போன்ற பலரைக் கண்டேன்ஆனால் எனக்கு என்னவோ நிலவில் நடப்பதைப் போலிருந்தது.  (ஞாபகம், நான் மதுவோ வேறு எந்த போதை வஸ்துக்களையோ உட்கொண்டிருக்கவ்ல்லை). அவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பதற்கும் நான் பதிலுக்குச் சிரிப்பதற்கும் இடையில் மூன்று நிமிடம் இருந்ததுஅவர்களின் சிரிப்பு என் உணர்வுகளில் பதிய அவ்வளவு காலம் ஆனதுஅப்போது பார்த்து ஷாஜி வந்தார். புன்னகைத்தார்ஆனால் நான் மூன்று நிமிடம் கழித்துப் புன்னகை புரிந்த போது அவர் வேறொரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்ததால் என் பதில் புன்னகையை அவரால் கவனிக்க முடியாமல் போயிற்று

நான்  பறந்து கொண்டிருந்தேன்கண்களை மூடி கடவுளுடன்  பேசிக் கொண்டிருந்த  தருணங்களை எண்ணி  ஆழ்ந்து சுவாசித்தேன்அப்போது ஷாஜியின் குறுஞ்செய்தி வந்தது.  “மை  நேம் இஸ் கான் எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் என் மீது கோபமா?” 

, மை நேம் இஸ்  கான் அவருக்குப் பிடிக்கவில்லையாஅப்போதுதான் அந்த விஷயமே எனக்குத் தெரிய வருகிறதுஆனால் அந்தப் பரவச மனநிலையிலும் என் வழக்கமான விளையாட்டு புத்தி வெளியே வந்தது.  “என்னைத்தான் உங்களுக்குப் பிடிக்கவில்லை; உங்களை எப்போதும் எனக்குப் பிடிக்கும்என்று பதில் அனுப்பினேன்

பதறி  விட்டார் மனிதர்என் மீதான  அவருடைய ஆழமான  பிரியத்தையும்  அன்பையும் தெரிவித்து உடனே பதில் செய்தி வந்தது

சும்மா  விளையாடினேன் ஐயா; எங்கே இருக்கிறீர்.

ஸ்காட்ச்  இருக்கிறது; குடிக்கப் போகலாமா?

அப்போதைய  பரவசத்தில் நான் குடிக்கும் நிலையிலும் இல்லைஇன்னொரு  நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று  செய்தி அனுப்பி  விட்டு அங்கிருந்து  நைஸாகக் கிளம்பினேன்

வெளியே  வந்து பிளாட்பாரத்தில்  நீண்ட நேரம்  அமர்ந்திருந்தேன்பக்கத்தில் ஒரு  ஆள் பைக்கில் நீண்ட நேரம் யாருக்கோ காத்திருந்தான்எவ்வளவு நேரம் ஆனது என்று தெரியவில்லைவீட்டுக்கு நடந்தே போய் விடலாம் என்று எழுந்தேன்

போகலாமா  சாரு?” என்ற குரல் வந்தது

பைக்கில்  அமர்ந்திருந்த  உருவம்தான் பேசியது

அட  நவீன்!

நீங்கள் எப்படி இங்கே?

நீங்கள்தானே சாருவெளியே இருக்கிறேன்; வாஎன்றீர்கள்?
28.2.2010.
12.40 p.m.