Monday 28 January 2013

சூடு, சொரணை, மானம் இல்லாமல் உண்டியல் குலுக்குவது எப்படி?

இதுவும் ஏற்கனவே எழுதியதுதான்.  எழுதியதையே திரும்பத் திரும்ப எழுதுவதன் காரணம், என் எழுத்தைப் படிக்க வரும் புதிய வாசகர்களும் அவர்களுடைய கேள்விகளும் சந்தேகங்களும்தான்.  இதெல்லாம் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்பது, பாவம், அவர்களுக்குத் தெரியவில்லை.  அதனால் ஏற்கனவே இதைப் படித்து விட்ட வாசகர்கள் இதைத் தாண்டி செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் எனக்கு போன் செய்து “என் மகள் உங்களுக்கு 5000 ரூ. அனுப்பச் சொன்னாள்; உங்கள் வங்கி எண் என்ன?” என்றும் கேட்டார்.  அப்போதெல்லாம் நான் அடுத்த வேளை சோற்றுக்கே சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  இருந்தாலும் மாணவர்களிடமிருந்து பண உதவி பெறுவதில்லை என்று மறுத்தேன்.  ஆனாலும் பிடிவாதமாக அனுப்பி வைத்தார்.  அந்த மாணவி அப்போது என்னுடைய தீவிர வாசகி.  பிறகு அவருக்குத் திருமணமான பிறகும் அதே வேலையை ஆரம்பித்தார்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்பை 50 பிரதிகள் வாங்கினார்.  அவர் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே அதை விநியோகிக்கப் போவதாகவும் கூறினார்.  ”இதெல்லாம் ஆபத்தான காரியம்; உங்கள் கணவர் ஆட்சேபிக்கலாம்; வேண்டாம்” என்றேன்.  கேட்கவில்லை.  கணவர் அந்தப் பெண்ணை விவாகரத்து செய்து விட்டதாக பின்னர் அறிந்தேன்.  அந்தப் பெண்ணும் என்னைத் தொடர்பு கொள்வதில்லை.
பெண்ணுக்கு மட்டும் இல்லை; என் நெருங்கிய சகா ஒருவன் திருமணமான புதிதில் ஸீரோ டிகிரியைக் கொண்டு போய் தன் மனைவியிடம் கொடுத்து படிக்கும்படி சொல்லியிருக்கிறான்.  நல்ல ஆசாரமான பெந்தகோஸ்தா குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண் அடுத்த மாதமே அவனை விவாகரத்து செய்து விட்டார்.  அந்தப் பெண் விவாகரத்து வேண்டி என் நண்பனுக்கு அனுப்பியிருந்த நோட்டீஸைப் படித்து நானே மிரண்டு போனேன்.  ஏதோ க்ரூப் செக்ஸ், அனிமல் செக்ஸ் என்று என்னென்னவோ எழுதியிருந்தது.  பஸோலினி இயக்கிய 120 days  of  a Sodom  என்ற பட்த்தைப் பார்ப்பது போல் இருந்த்து அந்த நோட்டீஸ்.  இப்படி இலக்கியத்துக்கு சம்பந்தமில்லாத சராசரிகளிடம் கொண்டு போய் என் எழுத்தை அறிமுகப்படுத்தும் போது இம்மாதிரி மரண விபத்துகளே ஏற்படும்.
அப்படி ஒரு விபத்து என் சிநேகிதி ஒருவருக்கு ஏற்பட்டிருப்பதாக யூகிக்கிறேன்.  அவர் எனக்கு ஓரிரு சந்தர்ப்பங்களில் பண உதவி செய்திருக்கிறார்.  திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.  இனிமேல் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று ஒரு மெயில் வந்தது.  இது போல் அடிக்கடி நிகழ்வதால் சரி என்று விட்டு விட்டேன்.  அதோடு முடிந்திருந்தால் இந்தக் கட்டுரையை எழுதியிருக்க மாட்டேன்.  இரண்டு நாட்கள் கழித்து “I would not be able to do anything for you henceforth and would not be liked to be communicated. Hope you understand and thanks for your co-operation” என்று ஒரு கடிதம் வந்தது.
என் வாழ்வில் நான் சந்திக்க நேர்ந்த மிக அவமானகரமான தருணங்களில் இதுவும் ஒன்று என எண்ணினேன்.  என்னோடு தொடர்பு கொள்ள விரும்பவில்லை என்று எழுதும் நபரிடம் போய் பணம் வாங்கும் அளவுக்கு நான் கீழ்த்தரமாகப் போய் விடவில்லை என்று ஒரு வரி எழுதிப் போட்டாலும் அந்தக் கடிதத்தின் அவமானகரமான அடி என்னை மிகவும் அதிர வைத்தது.
அராத்து சொன்ன சம்பவம் ஒன்று எனக்கு ஞாபகம் வந்தது.  அவருடைய ஊர் சிதம்பரம்.  அங்கே வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வருவதுண்டு. நமக்குப் பொதுவாகவே வெளிநாட்டுக்காரர்களைப் பார்த்தால் அவர்கள் என்ன ஊர், எந்த தேசம் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்படும்.  அந்த ஆர்வத்தில் அராத்தும் ஒரு வெளிநாட்டுக்காரரிடம் “நீங்கள் எந்த ஊர்?” என்று ஆங்கிகலத்தில் கேட்டிருக்கிறார்.  அப்போது அராத்தின் வயது 10.  அதற்கு அந்த வெளிநாட்டுக்கார்ர் சொன்ன பதிலைக் கேட்டால் நீங்கள் ஆச்சரியப்ப்டுவீர்கள்.  அவர் அராத்திடம் “No pen” என்று பதில் சொல்லியிருக்கிறார்.  பத்து வயதுப் பையன் அராத்துக்கு ஒன்றும் புரியவில்லை.  நோ பென் என்று ஒரு பெயர் இருக்குமா?  மறுபடியும் நீங்கள் எந்த தேசம் என்று கேட்க, அந்த வெள்ளைக்கார்ர் மறுபடியும் நோ பென் என்று சொல்லியிருக்கிறார்.  அராத்துக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை.  மறுநாளும் கோவில் பக்கம் சென்று அங்கே வந்த வேறு வெளிநாட்டுக்கார்ர் ஒருவரிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்க அவரும் நே பென் என்று சொல்லியிருக்கிறார்.  ”அட ங்கொக்கால ஓலி, என்னடா இது, எவனைக் கேட்டாலும் நோ பென் ங்கிறான்? என்னடா விஷயம்?” என்று அமைதியாக இருந்து அங்கே வரும் வெளிநாட்டுக்கார்ர்களை கவனித்திருக்கிறான் பொடியன் அராத்து.  பிறகுதான் விஷயம் தெரிந்திருக்கிறது.  அங்கே உள்ள பொடிப்பயல்கள் வெளிநாட்டுக்கார்ர்களைப் பார்த்தால் பென் ப்ளீஸ் பென் ப்ளீஸ் என்று கேட்கிறார்கள்.  வெளிநாட்டுக்காரனும் நோ பென் நோ பென் என்கிறான்.  ஆக, எந்தப் பொடியன் என்ன கேட்டாலும் நோ பென் என்று ஆகி விட்டது பதில்.
அடங் கொம்மால என்று சொல்லி விட்டு வீட்டுக்கு வந்தாராம் அராத்து.  அராத்து அப்படித்தான் அசிங்க அசிங்கமாகப் பேசுவார்.  அதே அசிங்கமான வார்த்தையைத்தான் அந்தக் கடிதத்தைப் படித்தபோதும் உச்சரித்தேன்.  நான் என்ன உங்களிடம் பேனா யாசகம் கேட்கும் சிறுவன் என்று நினைத்தீர்களா?
எனக்கு உதவி செய்யும் அளவுக்கு நீங்கள் பெரிய இட்த்தில் இருக்கிறீர்களா என்ன?  ஒரு துறவியின் திருவோட்டில் நீங்கள் இடும் அன்னம் அந்தத் துறவிக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்?  உங்கள் குழந்தைக்கு ஒரு வாய் சோறு ஊட்டுவதை அந்தக் குழந்தைக்கு நீங்கள் செய்யும் உதவி என்றா நினைப்பீர்கள்? தமிழ் சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு அநாதைகளாக அலைந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற எழுத்தாளர்களை ஆதரிப்பது நீங்கள் அவர்களுக்குச் செய்யும் உதவியா?
நான் மற்ற சராசரி மனிதர்களைப் பற்றிச் சொல்லவில்லை.  என் எழுத்தின் முக்கியத்துவம் தெரிந்த ஒன்றிரண்டு வாசக நண்பர்களிடம் மட்டுமே இதைக் கேட்கிறேன்.  எல்லோரிடமும் என்று நினைத்து விடாதீர்கள்.
தமிழின் மிக முக்கியமான எழுத்தாளரான கோபி கிருஷ்ணனுக்கு மாதம் 500 ரூ மட்டுமே தேவைப்பட்டது. அதுவும் தேநீர் மற்றும் சிகரெட் செலவுக்காக.  அவர் எப்போதும் புகைத்துக் கொண்டே இருப்பார்.  அதனால்தான் அவர் இறந்தார் என்று எழுதியிருக்கிறார் ஒருவர்.  அப்படி அல்ல அது.  சிகரெட் குடிக்க காசு இல்லாத்தால்தான் அவர் இறந்தார்.  பார்ப்பதற்கு 45 வயதுக்கு மேல் சொல்ல முடியாது.  அவர் குடிக்கும் சிகரெட் சுண்டு விரல் நீளம் இருக்கும். ஒரு சிகரெட் அஞ்சு பைசா.  எனக்கு அப்போது பணக்கார நண்பர்கள் கிடையாது.  நானே அடுத்த வேளை சோற்றுக்கு சிங்கியடித்துக் கொண்டிருந்த காலம்.  அவருடைய கதைகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை ஆபீசாக ஏறி இறங்கினேன்.  இந்தியா டுடேயில் மட்டும் ஏற்றுக் கொண்டார்கள்.  ஒரு கதைக்கு 1500 ரூ.  ஆனால் கதை வந்து ஆறு மாதம் கழித்துத்தான் செக் வரும்.  (இப்போதும் அதே நிலைதான்).  கோபி கிருஷ்ணனின் முதல் கதை இந்தியா டுடேயில் வெளிவந்து செக் வந்து அவர் கையில் கிடைக்கும் போது அவர் பிணமாகக் கிடந்தார். தமிழ் சினிமா காட்சி மாதிரி இருக்கும்.  ஆனால் அதுதான் உண்மை.
தர்மு சிவராமு, பாரதிக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த கவி என்று அவனைச் சொல்வேன்.  அவனுக்கு சில பணக்கார நண்பர்கள் இருந்தார்கள்.  அந்த நண்பர்கள் அவனுடைய கவிதையின் மீது ஈர்ப்பு கொண்டு அவனுக்கு நண்பனானவர்கள்.  அதில் ஒரு தொழிலதிபரும் உண்டு.  ஒருவர் அவருடைய வீட்டுப் பூஜை அறையில் அவனுடைய படத்தை வைத்திருந்தார்.  60 வயது என்றாலும் பார்ப்பதற்கு 30 வயதுதான் சொல்ல்லாம்.  கட்டை பிரம்மச்சாரி.  சிலம்பாட்ட வீரனைப் போல் இருப்பார்.  பன்றிகள் வாழும் தொழுவத்தில் (சேரிக்குள் சேரி என்று ஒருமுறை என்னிடம் சொன்னார்.  அவர் வார்த்தைகள் இன்னமும் என் செவிகளில் ஒலிக்கின்றன) வாழ்ந்த்தால்  மஞ்சள் காமாலை மாதிரி ஏதோ ஒரு கடும் நோய் தாக்கி மருத்துவம் பார்க்க வழியில்லாமல் செத்தார்.
ங்கோத்தா, இப்படி அனாதையாக தெரு நாய்களைப் போல் செத்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழ் எழுத்தாளர்கள்.  இந்த நிலை எனக்கு வேண்டாம் என்று நான் தீர்மானம் செய்தேன். அதற்கு நான் முதலில் செய்ய வேண்டியது, என் சுயகௌரவத்தை விட்டுக் கொடுப்பது. சுயகௌரவத்தைக் குப்பையில் எறிந்து விட்டு குப்பையில் கிடந்த திருவோட்டைக் கையில் எடுத்துக் கொண்டேன்.
தர்மு சிவராமு செய்ய மறுத்த காரியம் அது.  அவருக்கு வேண்டிய ஒரு தொழிலதிபர் ஒரு அலுவலகத்தில் அவருக்கு ஒரு வேலை போட்டுக் கொடுத்தார்.  தர்மு செய்ய வேண்டியது வேலை அல்ல.  அவ்வப்போது அந்த அலுவலகத்துக்குச் சென்று கையெழுத்துப் போட வேண்டும்.  ”என் கவிதைதான் என் கையெழுத்து; போடா உன் உதவியை எடுத்துக் கொண்டு” என்று உதை கொடுத்து அனுப்பி விட்டார்.  என்னோடு தேநீர் அருந்தும் போது கூட “நீ கொடுக்காதே; கொடுப்பதாக இருந்தால் குடிக்க மாட்டேன்” என்று சொல்வார்.  அந்த அளவுக்கு சுயகௌரவம் கொண்டவர்.
எனக்கு என் சுயகௌரவத்தை விட நான் வாழும் சமூகமும் தமிழும் முக்கியமாகத் தோன்றியதால்தான் திருவோட்டைக் கையில் எடுத்தேன்.  ஏனென்றால், எழுத்தாளர்களால்தான் தமிழே வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஒரு மொழியையும் அம்மொழி சார்ந்த கலாச்சாரத்தையும் முன்னெடுத்துச் சென்று கொண்டிருப்பவர்கள் எழுத்தாளர்கள் மட்டுமே.  இதை நான் தமிழ்ச் சூழலை வைத்துச் சொல்கிறேன். மற்ற சமூகங்களில் இந்த வேலை எழுத்தாளர்களின் தோளில் மட்டுமே விழுவதில்லை; அதைச் செய்ய பல்கலைக் கழகங்களும் மற்றும் பலரும் இருக்கின்றனர்.  அந்தச் சமூகங்கள் எழுத்தாளர்களைத் தங்கள் சொத்தாக நினைத்துக் கொண்டாடுவதால் எழுத்தாளர்களும் இப்படித் தெருநாய்களைப் போல் அநாதைகளாய் சாவதில்லை.
தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வதென்பது ஆஃப்கனிஸ்தானில் ஒரு இசைக் கலைஞனாக வாழ்வதற்கு ஒப்பாகும்.
உத்தமத் தமிழ் எழுத்தாளனின் நடவடிக்கைகளையும், அவருடைய எழுத்தையும் எனக்குப் பிடிக்காது.  ஆனால் தமிழில் எங்கள் எல்லோரையும் விட அதிகம் எழுதியவர் அவர்தான். அப்படிப்பட்ட ஒரு எழுத்தாளரே தான் சினிமாவில் வசனம் எழுதியதால்தான் தன் ஏழ்மை நீங்கியது என்றும், தன் மகனின் கல்லூரிப் படிப்புச் செலவுக்கு சினிமா வசனத்தினால் கிடைத்த பணம்தான் உதவியது என்றும் எழுதுகிறார்.  மாடியில் தனக்கென்று ஒரு அறை கட்டியதற்கும் சினிமா பணம்தான் அவருக்கு உதவியிருக்கிறது.  என்ன ஒரு சமூக அவலம் பாருங்கள்! உலகில் வேறு எந்த இடத்திலும் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கலாச்சார அவலத்தைப் பார்க்க முடியாது.
எஸ். ராமகிருஷ்ணன் எப்போதுமே தன்னைப் பற்றி எழுத மாட்டார்.  அந்த விஷயத்தில் அவர் சுஜாதா மாதிரி.  அதனால் நான் சொல்கிறேன்.  15 ஆண்டுகளுக்கு முந்திய கதை அது.  என்னைப் பார்க்க என் எலிப் பொந்துக்கு வருவார். உங்கள் வீட்டுக் கக்கூஸ் அளவுதான் இருக்கும் என் வீடு.  மந்தைவெளி. ”டீ குடிக்க உங்களிடம் காசு இருக்கிறதா?” என்று அவர் என்னையும் நான் அவரையும் கேட்டுக் கொண்டிருப்போம். சரி, கண்ணன் வரட்டும் என்று இன்னொரு நண்பரின் வருகைக்காகக் காத்திருப்போம். சிங்கிள் டீக்கு வழியின்றி இருந்த காலம் அது.
எனவேதான் என் சுயமரியாதையைக் கைவிட்டு திருவோடு ஏந்தத் துணிந்தேன்.  அதனால்தான் ஒரு எழுத்தாளர் 50 லட்சம் பேர் வாசிக்கும் ஒரு பத்திரிகையில் என்னைப் பற்றி ‘இண்டர்நெட் பிச்சைக்காரன்’ என்று எழுதவும், அதைப் பின்பற்றி பதிவுலக அன்பர்கள் என்னை பிச்சைக்காரன், பிச்சைக்காரன் என்று தூற்றவும் ஆரம்பித்தார்கள்.
இந்தப் பிச்சைக்காரத்தனத்திலிருந்து ஒரே நாளில் நான் வெளியே வந்து விட முடியும்.  ஒன்றுமில்லை.  15 ஆண்டுகளாக நான் எழுதி வரும் சினிமா விமர்சனம் என்ற காரியத்தை நிறுத்தி விட வேண்டும். பொய்யாகப் பாராட்டி எழுத வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.  சினிமா விமர்சனம் எழுதுவதை நிறுத்த வேண்டும்.  ஒரே நாளில் என் வறுமை என்னை விட்டு அகன்று விடும்.  வசந்த பாலனுக்கு அல்ல; அவருடைய குருநாதரான ஷங்கருக்கே வசனம் எழுதுவேன். ஆனால் என்னால் முடியுமா?  ஜெண்டில்மேனிலிருந்து ஷங்கருடைய படங்களைக் கிழித்துக் கிழித்துத் தோரணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.  ஜெண்டில்மேன், முதல்வன், இந்தியன், அந்நியன், பாய்ஸ், சிவாஜி என்று ஷங்கரின் ஒவ்வொரு படத்தையும் குப்பை குப்பை என்று சொல்லி நார்நாராய்க் கிழித்துக் கொண்டிருக்கிறேன்.  அவர் எப்படி என்னை வசனம் எழுதக் கூப்பிடுவார்?
என் சினிமா விமர்சனம் அப்படி என்றால், என் அரசியல் விமர்சனம் எனக்கு உயிராபத்தையே விளைவித்து விடும் போல் இருக்கிறது.  ’என்ன நடந்து கொண்டிருக்கிறது இங்கே?’  என்ற அரசியல் கட்டுரையை என்னைத் தவிர வேறு எந்தத் தமிழ் எழுத்தாளராவது தமிழ்நாட்டில் இருந்து கொண்டு எழுதுவாரா? எழுதுவதற்குத் துணிச்சல் இருக்குமா? (ஞாநி, சோ இருவரும் அரசியல் விமர்சகர்கள் என்பதால் அவர்கள் இருவரையும் இங்கே சேர்க்கவில்லை).
கடைசியாகச் சொல்கிறேன்.  இது எனக்குப் பண உதவி செய்யும் அன்பர்களுக்கான வார்த்தை.  மற்றவர்கள் வழக்கம்போல் என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று தங்கள் இஷ்டம் போல் திட்டிக் கொண்டு திரியலாம்.
நீங்கள் எனக்குச் செய்யும் உதவி உதவி அல்ல. அது உங்களுடைய பொறுப்பு; கடமை.  நான் உங்களுடைய மனசாட்சியாக இருக்கிறேன்.  அதனாலேயே இந்த சமூகத்தால் கைவிடப்பட்ட அநாதைக் குழந்தையாக இருக்கிறேன்.  எனவே ஒரு தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டுவதைப் போன்றதுதான் நீங்கள் எனக்கு செய்யும் உதவி.  என்னுடைய தினசரி வாழ்வுக்கான சிறிதளவு பணத்தை நீங்கள்தான் எனக்குத் தர வேண்டும்.  என் எழுத்தின் முக்கியவத்தும் உங்களுக்குத் தெரிந்தால் நான் சொல்லும் இந்த வார்த்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.  என்னுடைய எழுத்துப் பயணம் சற்று பொருட்செலவை அளிக்கக் கூடியது. 2001-இல் நான் மேற்கொண்ட ஐரோப்பியப் பயணம் ராஸ லீலாவின் 200 பக்கங்களாக மாறியது.  அந்த 4 லட்சம் ரூபாயையும் என் நண்பர் ஷோபா சக்திதான் ஏற்றுக் கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு வெளிவந்த அவருடைய நாவல் கொரில்லாவை நான் கடுமையாக விமர்சித்தேன்.  4 லட்ச ரூபாய்க்காக என்னை விற்கவில்லை.  அந்த நாவல் ஈழப் போராட்டத்தை மிக மோசமாகக் கொச்சைப் படுத்தியது.  என்னுடைய அந்த விமர்சனம் எங்கள் நட்பில் விரிசலை ஏற்படுத்தியது.  பிறகு அவருடைய ‘ம்’ என்ற நாவல் வந்தது. அது ஒரு இனவாத நாவல்.  சிங்களர்கள் கொடுங்கோலர்கள் என்று ஒரு இனத்தையே பழிக்கும் நாவல் அது.  அதற்கு மேல் ஷோபா சக்தியும் நானும் சந்திக்கவில்லை.  இடையில் ஒருமுறை சந்தித்த போது என் புரவலர் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு நான் அவரிடம் என்னை விற்று விட்டேன் என்றார்.  அவருடைய கோபத்தையும், என் விமர்சனத்தால் ஏற்பட்ட காயத்தையும் புரிந்து கொண்டேன்.  அதற்குப் பிறகு நாங்கள் சந்திக்கவில்லை.  அதற்குப் பிறகு என் பயண வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.
ஆக, இப்படி எந்தத் தருணத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் வாழ்வதால்தான் உங்களிடம் திருவோடு ஏந்துகிறேன்.  எனவே என்னுடைய எழுத்துப் பயணத்தைத் தொடர்வதற்கு எனக்கு உங்களுடைய உதவி தேவை. அப்படியே உங்களால் எனக்கு உதவி செய்ய முடியாமல் போனாலும் மேற்கண்டவாறு அந்தப் பெண் எழுதியபடி கடிதம் எழுதாதீர்கள். பெருமாளுக்குக் கோவில் கட்டுவதற்காக திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டார்.  நான் அப்படியெல்லாம் செய்யவில்லை; திருவோடுதான் ஏந்துகிறேன்.  அதையும் தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள். ஏனென்றால், என்னுடைய எழுத்துக்கு உங்களால் உதவி செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருந்தாலும், என் எழுத்தின் முக்கியத்துவம் உங்களுக்குப் புரிந்தால் உங்களை என்னுடைய சகபயணியாகவே கருதுவேன்.  அதில் சந்தேகமில்லை.
ஒரு துறவியைப் போலவே நான் உங்களிடம் வருகிறேன்; அன்னமிடுங்கள். அந்த அன்னம் எனக்கு நீங்கள் தரும் உணவு; உதவி அல்ல.
17.9.2010.
4.00 p.m.
(காலடியிலிருந்து)
(என் வங்கிக் கணக்கு எண்:
ICICI   602601 505045
T.Nagar, Chennai.
Account holder’s name:
K. ARIVAZHAGAN

2 comments:

  1. குடிக்க பணம் வேணும்னா ஊம்பவும் தயாரா இருக்குற மாதிரி உருக்கமா எழுதுற இந்த நாய்தான், நடுத்தர மக்கள கேலி செஞ்சி ஒரு சொறி நாய் எழுதுனத பார்த்து என்ன மாதிரியே ஒருத்தன் இருக்குறான்னு எழுதுச்சி.
    கல்லால அடிச்சி சாகடிக்குனும் இந்த தே.மகன.

    ReplyDelete