Thursday 21 February 2013

கோயமுத்தூர் லட்ஜில் பெருமாள் - You are putting in a wrong place!



குட்டிக் கதைகள் நூற்றியெட்டு (64)
You are putting in a wrong place! 

எப்போதும் வீட்டிலேயே தியானத்தை முடித்து விட்டுத்தான் நாகேஸ்வர ராவ் பூங்காவுக்கு வாக்கிங் கிளம்புவான் பெருமாள். அன்றைய தினம் எழுந்து கொள்ளக் கொஞ்சம் தாமதமாகி விட்டதால் நேராக பூங்காவுக்கு வந்து விட்டான். வாக்கிங் முடிந்தது. ராகவன், காமேஸ்வரன் இருவரையும் காணோம். அங்கேயே தியானத்தில் அமரலாமா, அல்லது வீட்டுக்குப் போய் செய்து கொள்ளலாமா என்று யோசித்தான். வீட்டுக்குப் போனால் இன்னும் நேரமாகி விடும் என்பதால் இங்கேயே முடித்து விடலாம் என்று அமர்ந்தான்

உள்ளுக்குள் ஆழ்ந்து வெண்ணிற மேக அலைகளில் மிதந்து கொண்டிருந்த போதுமதியழகன், மதியழகன்... ” என்று அழைத்து யாரோ அவனைத் தொட்டு எழுப்புவதை உணர்ந்தான். கண் விழித்துப் பார்த்தால் ராகவன். பக்கத்தில் அவரது தர்ம பத்தினி

என் வைஃப் வந்திருக்காங்க; அதனால் நீங்கள் இன்று எனக்காக வெய்ட் பண்ண வேண்டாம்... ” 

அடப்பாவி, இதற்காகவா என் தியானத்தைக் கலைத்தீர்? ’ என்று நினைத்தபடி எழுந்து அவர் மனைவிக்கு வணக்கம் சொன்னான். பிறகுகிளம்புகிறேன்என்று இருவரிடமும் சொல்லி விட்டுப் புறப்பட்டான்

கோபமும் எரிச்சலுமாக வந்தது. மனிதர்கள் இந்த அளவுக்கா சொரணையுணர்வு அற்றுப் போய் விட்டார்கள் என்று ஆச்சரியப்பட்டான். தியானத்தைத் தொடங்கும் போதே தன் உள்ளுணர்வு எச்சரித்ததையும் எண்ணிப் பார்த்தான்

எவ்வளவு ஆச்சரியப்பட்டும் ராகவன் செய்ததை அவனால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இனி எந்தக் காலத்திலும் இங்கே தியானம் செய்யக் கூடாது என்று மீண்டும் மீண்டும் எரிச்சலுடன் நினைத்தபடி வீட்டை நோக்கிப் புறப்பட்டான். உணர்வுகள் அதீதமாகப் பொங்குவதை சமநிலைப் படுத்துவதற்காக தியானம் செய்யப் போக, அது தடைப்பட்ட உடனேயே கோபம் அதீதமாகப் பீறிடுவது எவ்வளவு அபத்தம் என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் அவனால் ராகவனின் செய்கையைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. நினைக்க நினைக்க எரிச்சல்தான் கூடியது


தியானத்தில் குறுக்கிட்டது பற்றித் தான் எரிச்சலடைந்ததையும், இனிமேல் இந்தப் பூங்காவில் தான் தியானம் செய்யவே போவதில்லை என்றும் ராகவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் பெருமாள்

அடடா, இதற்குப் போய் ஏன் இப்படி ஒரு முடிவு எடுக்கிறீர்கள்? எனக்குத் தெரிந்திருந்தால் குறுக்கிட்டிருப்பேனா? இப்போதுதான் தெரிந்து விட்டதே, இனிமேல் செய்ய மாட்டேன்என்றார் ராகவன்

மை காட்...இதெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும். சாலையின் குறுக்கே நடந்தால் மரணம் என்று அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கு நாம் நம்முடைய உயிரையே அல்லவா விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்? ” என்று ஆரம்பித்து நீண்டதொரு விளக்கம் தர ஆரம்பித்தான் பெருமாள்

புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஜீவராசிகளைப் பிரிப்பது எப்படி பாவமோ அதே மாதிரிதான் தியானத்தில் இருப்பவனைத் தட்டி எழுப்புவதும்; அது சரி, 30 ஆண்டுக் காலம் தபால் இலாகாவில் குப்பை கொட்டி இந்த அளவுக்காவது நம்முடைய சொரணையுணர்வு மழுங்கவில்லையானால் அப்புறம் தபால் இலாகாவுக்குத்தான் என்ன பெருமை

பெருமாளுக்கு அப்போது ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்தக்குறிப்பிட்ட நேரத்தில்அலெக்ஸுக்கு எப்படித்தான் மூக்கில் வியர்க்குமோ தெரியாது; மிகச் சரியாக பெருமாளுக்கு போன் பண்ணி அவனைக் கதற அடித்து விடுவான். அதாவது, ஒரு பெண்ணை மடக்கிசே, வேண்டாம்ஒரு பெண்ணைக் காதலித்து அவளோடு முதல் முறையாக சரீர சம்பந்தம் கொள்ளும் வேளையில்அந்த உச்சக் கட்ட தருணத்தில் பெருமாளின் போன் அடிக்கும். அரண்டு மிரண்டு போனை எடுத்துப் பார்த்தால் அலெக்ஸ். அதோடு விட மாட்டான். ஐந்து ஆறு முறை அடிப்பான். பெரிய வேடிக்கை என்னவென்றால், அலெக்ஸ் அவ்வளவாக பெருமாளுக்கு போன் செய்பவன் அல்ல என்பதுதான்

அப்படித்தான் பெருமாள் கோவையில் ஒரு லாட்ஜில் தன் காதலியோடு முதல் தடவையாகக் கலவியில் ஈடுபட்டிருந்த போது அலெக்ஸிடமிருந்து அழைப்பு. அது ஒரு வித்தியாசமான அனுபவம் பெருமாளுக்கு. அந்தப் பெண் ப்ரீத்தி பெருமாள் சற்றும் எதிர்பாராத விதத்தில் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பித்து விட்டாள். அப்படிப்பட்ட சப்தத்தை பெருமாள் நீலப் படங்களில் மட்டுமே கண்டு களித்திருக்கிறான். நேர் வாழ்க்கையில் அதுதான் முதல் முறை. கலவியின் போது இந்தியப் பெண்கள் கூட இவ்வளவு உக்கிரமாகக் கத்துவார்களா

சே, அந்த அறை மிகச் சிறியதாக இருந்ததால் அந்த சப்தத்தை அவனால் அன்றைய தினம் அனுபவிக்க முடியாமல் போனது. (அந்த ஓட்டல்தான் பாதுகாப்பானது என்று அங்கே ரூம் போட்டிருந்தான் பெருமாள். அதுதான் கடைசியில் இப்படி ஒரு பிரச்சினையில் கொண்டு வந்து விட்டது). அறைக்கு வெளியே பக்கத்திலேயே லிஃப்ட் வேறு இருந்ததால் ஆட்கள் போவதும் வருவதுமாக ஒரே சப்தமாக இருந்தது. பயத்தில் அவனால் முழுமையாக ஈடுபட முடியாமல் போனது. இதற்கு இடையில்தான் அலெக்ஸின் போன்

(இரண்டு நாள் இப்படியே அரையும் குறையுமாகப் போராடி விட்டு அறையைக் காலி செய்து விட்டுக் கிளம்பும் போது ப்ரீத்தி சொன்னாள், “பெருமாள், ஒரு ஐடியா, பேசாமல் நாம் டீவியை ஃபுல் வால்யூமில் வைத்து விட்டுச் செய்திருக்கலாம். ” 
இதே மாதிரிதான் குன்றத்தூரில் வைத்து மற்றொரு காதலியுடன் (அவள் பெயர் என்ன? மறந்து விட்டது...) கலவி கொண்டிருந்த போதும் அலெக்ஸின் போன் வந்தது


மூன்றாவது ஜெஸ்ஸியுடன். ஜெஸ்ஸியுடன் நிகழ்ந்தது ஒரு சிறிதும் திட்டமிடாதது. முத்தத்தில்தான் ஆரம்பித்தது. ஆனால் இருவரையும் மீறி அங்கே போய் முடிந்து விட்டது. கலவியின் மூர்க்கத்தில் கட்டுண்டு கிடந்த போது அலெக்ஸிடமிருந்து போன். அதுவும் ஐந்தாறு முறை. ஒவ்வொரு முறையும் யாரோ எவரோ என்று பதறியடித்து போனை எடுத்துப் பார்த்தால், அலெக்ஸ். போனையே தூக்கிப் போட்டு உடைத்திருப்பான். ஆனால் அதற்குக் கூட முடியாத படி பணி

இதைப் போய் சிற்றின்பம் சிற்றின்பம் என்கிறார்கள் மடையர்கள். நோ...ஆன்மீகவாதிகளை அப்படியெல்லாம் திட்டக்கூடாது. பெருமாளுக்கு அது பேரின்பமாகத் தோன்றியது, அவ்வளவுதான். அதாவது, போகமே அவனுக்கு ஒரு ஆன்மீக அனுபவமாகத் தோன்றியது

ஆக, ஒரு பெண்ணுடன் கொள்ளும் சரீர சேர்க்கையே பேரின்பமாகத் தோன்றியது என்றால் கடவுளோடு கொள்ளும் ஆத்மார்த்தமான ஒன்றுதல் எப்பேர்ப்பட்ட பேரின்பமாக இருக்க வேண்டும்? அந்த நேரத்தில் வந்துமதியழகன், மதியழகன்என்று தட்டி எழுப்பினால் அதை என்னவென்று சொல்வது

தெரிந்திருந்தால் செய்திருப்பேனாஎன்று வேறு சொல்கிறீர். இம்மாதிரி விஷயங்களெல்லாம் சொல்லியா தெரிய வேண்டும்

இந்த ஜெஸ்ஸி இருக்கிறாளே, அவளுக்கு செக்ஸ் பற்றி எதுவுமே தெரியாது. முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்பது மாதிரி நம்புகிற கேஸ். பெருமாள் அவளுடன் உறவு கொள்ளும் போது அவள் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா

“You are putting in a wrong place…” 

எல்லாவற்றையும் கேட்டு விட்டு ராகவன் சொன்னார். “எழுதுங்கள்; என்னைப் பற்றி விமர்சனமாக எழுதினால் ராகவன் என்று போட்டு எழுதுங்கள்; பாராட்டாக எழுதினால் வேறு பெயர் போடுங்கள்... ” 

இதுதான் ராகவன். இதுதான் ராகவனுக்கும் காமேஸ்வரனுக்கும் வித்தியாசம். காமேஸ்வரன் பெருமாளுடன் பேசுவது இல்லை. அவரைப் பற்றி எழுதி விட்டதால் அண்ணனுக்குக் கோபம்

போ... யாருக்கு நஷ்டம்? காமேஸ்வரனிடமிருந்து பெருமாளுக்குக் கிடைக்கும் இசை பற்றிய அற்புதமான விஷயங்கள் இனி அவனுக்குக் கிடைக்காது. பரவாயில்லை. அவன் கேட்க வேண்டிய இசைக் கலைஞர்களை இன்னும் மூணு ஜென்மம் எடுத்தாலும் கேட்டு முடிக்க முடியாது போலிருக்கிறது. இதில் காமேஸ்வரனாவது, சோமேஸ்வரனாவது

நான் ஒன்றும் சும்மா சொல்லவில்லை. Cheb Haninou என்ற கலைஞனின் Ash Dak என்ற அரபி ரய் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நான் சொல்வது விளங்கும். மற்றொரு அரபிப் பாடல் இங்கே கிடைக்கும்.

 
5.10.2008.
7.15 p.m.