Saturday 29 November 2014

ஜெயமோகனை செருப்பால் அடியுங்கள் - சாரு ஆவேசம்!

எழுத்துலகில் ஒரு சமூக விரோதி

April 20th, 2010

 

ஜெயமோகனை நீங்கள் எந்த இடத்தில் பார்த்தாலும் அவர் முகத்தில் காறித் துப்புங்கள் என்று என் வாசகர்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
கவிதா சரண் என்ற பத்திரிகையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஒரு மனித விரோதி, சமூக விரோதி, ஹிட்லரைப் போன்ற ஒரு ஃபாஸிஸ்ட் என்று எழுதியிருக்கிறேன். குற்றாலத்தில் கலாப்ரியா நடத்திய கருத்தரங்கில் சபையில் வைத்து ஜெயமோகன் என்னை கீழ்த்தரமாகப் பேசியபோது அவரை அடிக்கப் போயிருக்கிறேன்.  சங்க காலத்து இலக்கியமெல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து கடன் வாங்கியது என்று சுப மங்களா கருத்தரங்கில் அவர் பேசிய போது அறிவுமதி அவரை அடிக்கப் போனார்.  அப்போது பாலு மகேந்திராவும் நானும் ஜெயமோகனைக் காப்பாற்றினோம்.  அ. மார்க்ஸின் ஜாதியைச் சொல்லி ஜெயமோகன் ஒரு கருத்தரங்கில் திட்டிய போது அவரை அடிக்கப் பாய்ந்தேன்.
ஜெயமோகனின் புதிய காலம் என்ற குப்பைப் புத்தகத்தில் மனுஷ்ய புத்திரனை ஊனமுற்றவர் ஊனமுற்றவர் என்று பல இடங்களில் திட்டியிருக்கிறார்.  அதனால்தான் டிசம்பரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் அந்தப் புத்தகத்தைக் கிழித்து எறிந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன், ஜெயமோகன் நடத்திய சொல் புதிது பத்திரிகையில் மனுஷ்ய புத்திரனை நொண்டி நாய் என்று எழுதி மன்னிப்புக் கேட்டார்.  இப்போது என்னவோ புதிதாக ஜெயமோகனின் மனித விரோதப் போக்கைக் கண்டு பிடித்து விட்டது போல் எல்லோரும் குதிக்கிறார்கள்.  நான் சொன்னபோதெல்லாம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?  குறிப்பாக நான் அபிலாஷைக் கேட்கிறேன்.  புதிய காலம் என்ற புத்தகத்தை சபையில் வைத்துக் கிழித்து விட்டேன் என்ற விஷயம்தான் பரபரப்பாகப் பேசப்பட்டதே தவிர அதில் ஜெயமோகன் மனுஷ்ய புத்திரனை ஊனமுற்றவர் என்று திட்டியதைப் பற்றி யாருமே கண்டு கொள்ளவில்லை.
அப்போதே நீங்கள் ஜெயமோகனை செருப்பால் அடித்திருக்க வேண்டாமா?
இப்போது ஜெயமோகனின் புதிய காலம் என்ற புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். இந்தக் குப்பையின் பதிப்பாளர் யார் தெரியுமா?  உயிர்மை! அதாவது, மனுஷ்ய புத்திரனின் மனதுக்குள் ஓடும் எண்ணம் என்ன தெரியுமா?  அவர் பெரிய தியாகியாம்!
இப்போது மேற்கோள்:
“மனுஷ்ய புத்திரனில் புரட்சிகரம் உருவாகாது போகக் காரணமாக அமைந்த் ஆளுமைக் கூறு என்ன? அவரது உடலின் ஊனம்தான்.  ஒரு மேலோட்டமான வாசகன் கூட அவரது ஆரம்ப காலக் கவிதைகளில் புரட்சிகரத்துடன் கூடவே தன்னிரக்கமும் கலந்து ஒலிப்பதைக் காணலாம். மெல்ல மெல்ல தன்னிரக்கம் புரட்சிகரத்தை தோளால் இடித்து பெஞ்சில் இருந்து தள்ளி விட்டு விடுகிறது.  இந்தத் தன்னிரக்கத்தை விரிவாக ஆராயாமல் மனுஷ்ய புத்திரனின் கவிதைகுள் நுழைய முடியாது.  நமது சமூகம் ஊனமுற்ற ஒருவரை புறனடையாளனாக நடத்துகிறது.  காரணம் இது இன்னமும் நிலப்பிரபுத்துவ மனநிலை நிலவும் சமூகம்.  உடலே அதன் அடிப்படை.  உடலுழைப்பே இங்கு ஆதார விசை.  மூளையை மயமாக்கிய நவீன யுகத்தின் மதிப்பீடுகள் அங்கே உருவாவதில்லை.  ஆகவே, புறக்கணிக்கப்பட்டு, கருணைக்காக காத்திருக்க வைக்கப்பட்டு இழிவு கொள்ளும் ஓர் மானுட இருப்பின் குரலாக அவரது தொடக்க காலக் கவிதைகளில் தன்னிரக்கம் வெளிப்படுகிறது.  அது இயல்பானது.” (பக்கம்: 265)
”ஊனமுற்றவன் என்ற சுய உணர்வு எப்படி புரட்சிகரத்திற்கு எதிராக இயங்குகிறது என்பதுதான் இன்னும் கூர்ந்து ஆராயத்தக்கது.”
சரி, ஜெயமோகன், என்னுடைய குஞ்சு கூட கொஞ்சம் சிறிய சைஸாக, ஊனமுற்றதாகத்தான் இருக்கிறது.  அதையும் கொஞ்சம் ஆராய்ந்து கட்டுரை எழுதுங்களேன், ப்ளீஸ்.
மேலும் மேற்கோள்கள்:
“அவரது (மனுஷ்ய புத்திரனின்) முதல் தொகுப்பில் உள்ள கவிதைகள் ‘பரவாயில்லை… கால்கள் இல்லாவிட்டால் என்ன, நீயும் புரட்சி செய்யலாம்’ என்று அவர் (மனுஷ்ய புத்திரன்) அவரிடமே கூறிக் கொண்டவை போல் உள்ளன.” (பக்கம்: 266)
“(புரட்சியாளன்) மக்களை பின்னால் திரும்பிப் பார்த்து ‘வாருங்கள் என் பின்னால்’ என்று அறைகூவுபவனாக இருக்கிறான். ஊனம் காரணமாக புறனடையாளனாக உணரும் ஒருவனின் கோணம் அதற்கு நேர்மாறானது.  அவன் தன்னை கடந்து முன்னால் செல்லும் வரலாற்றை, மக்கள் திரளைப் பார்த்து ‘என்னைப் பாருங்கள்’ என்று கோருபவனாக இருக்கிறான்.”
“படிப்படியாக மனுஷ்ய புத்திர புரட்சிகர மனநிலையை முற்றாகவே உதறிவிட்டு தன்னிரக்கத்திற்குள் செல்வதை நாம் காண்கிறோம்…”
“மனுஷ்ய புத்திரன் அவரது உடல் குறித்த குறையுணர்வால் புரட்சிகர உணர்வெழுச்சியை ஐயப்பட்டு தன்னிரக்கக் கவிதைகளுக்கு வந்தார்…” (பக்:268)
மனுஷ்ய புத்திரனின் சுய பிரக்ஞையில் அவரது ஊனம் அழுத்தமான ஒரு தொடக்கத்தை அளித்திருக்கிறது என்பதைக் கண்டோம். (பக்கம்: 273)
“மனுஷ்ய புத்திரனின்  கவியுலகில் உவகையே இல்லை.  குதூகலத்தின், பரவசத்தின், எக்களிப்பின் நெகிழ்தலின் கணங்களே பதிவாகவில்லை.” (பக்: 276)
மனுஷ்ய புத்திரன் பற்றி இவ்வளவு சொல்லும் ஜெ. தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்:
“இருபத்திரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து விடுபட்டு எழுந்து ஒரு காலையில் புதிதாகப் பிறந்தபின் இன்றுவரை நான் துயரமாக ஒருநாள் கூட இருந்ததில்லை என்று கூறினால் என்னை அறிந்தவர்கள் நம்புவார்கள்.  மனச்சோர்வும் சஞ்சலமும் கசப்பும் என்னிடம் இல்லை.  ஒரு தருணத்தில் கூட நான் புறக்கணிக்கப்பட்டவனாக, தோற்கடிக்கப்பட்டவனாக, எளியவனாக என்னை உணர்ந்ததில்லை.  என் எளிய உடலின் எல்லைகளை மீறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு பேராற்றலையே நான் என்று உணர்கிறேன்.”
ஆனால் ஜெயமோகனுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் ஒருவரோ இதை மறுக்கிறார்.  தினம் தினம் ஜெ. என்னைப் பற்றிய பொறாமையின் காரணமாக தூக்கம் வராமல் துயரப்படுகிறார்.  தூக்கம் வருவதற்காக தூக்க மாத்திரைகளைப் போட்டுக் கொள்கிறார்.  தொடர்ந்து தூக்கமே இல்லாததன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு அதற்கும் பல மாத்திரைகளை உட்கொள்ளுகிறார்.  இதுதான் ஜெயமோகனின் நண்பர் அவரைப் பற்றி என்னிடம் சொன்னது.  அதைக் கூட அவர் சொல்லியிருக்க மாட்டார்.  குடிபோதையில் உளறி விட்டார்.  மேலும், ஜெயமோகனுக்கு தோழிகள் இல்லாததால் மிகப் பெரிய செக்ஸ் வறுமையில் இருக்கிறார்.  அதுவும் அவருடைய மனநோய்க்குக் காரணம்.  ஆனால் தனக்கு இல்லாததை அவர் மற்றவர் மீது திணிக்கிறார்.
இதோ மேற்கோள்:
”மனுஷ்ய புத்திரனின் மொத்தக் கவிதையுலகிலும் பெண்ணுடல் குறித்த சித்தரிப்புகளே இல்லை.” (பக்கம்: 280)
இன்னும் அந்தக் கட்டுரையில் நிறைய இருக்கிறது நண்பர்களே…
நான் ஜெயமோகனின் எழுத்து எதையும் வாசிப்பதில்லை.  ஒரு மனநோயாளியின் எழுத்தை வாசிப்பதில் என்ன பயன்?  இப்போது அபிலாஷையும் ஊனமுற்றவர் என்று ஜெயமோகன் எழுதியிருப்பதாக அறிகிறேன்.  இரண்டுக்கும் சேர்த்து 28 ஆண்டுகள் ஜெயமோகனை சிறையில் அடைக்க வேண்டும்.
ஜெயமோகனின் அயோக்கியத்தனமான அவதூறுகளுக்கு அபிலாஷ் எழுதியிருக்கும் பதில் இங்கே:

 

No comments:

Post a Comment