Wednesday, 12 June 2013

சொந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கும் சாரு


Oct 10, 2008ல் சாரு :


வீட்டு உரிமையாளரிடமிருந்து ஓலை வந்து விட்டது. வீட்டைக் காலி பண்ணச் சொல்லி

வீடு பார்க்க ஆரம்பித்தோம்

பழைய கதைதான். ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் வாடகைதான் எகிறி இருந்தது. இருபது ஆயிரத்துக்குக் குறைந்து வீடே இல்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடியிருப்பின் மூன்றாவது மாடியில் ஒரே ஒரு அறையில் குடியிருந்தேன். வாழ்வதற்கு 300 சதுர அடி உள்ள ஒரே ஒரு அறை எனக்குப் போதும். ஆனால் என்னுடைய புத்தகங்களை வைப்பதற்குத்தான் குறைந்த பட்சம் 700 சதுர அடிகள் தேவை



முதல் மாடியில் ஒரு வீடு அகப்பட்டது. 700 சதுர அடிதான். போதாது என்று திரும்பிய போது வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டின் சாதகமான அம்சங்களை அடுக்கினார். வீட்டுக்கு எதிரே கலங்கரை விளக்கம். தினமும் காலையில் கடற்கரையிலேயே வாக்கிங் போகலாம். ஆஹா ஆனந்தம். வீட்டின் உரிமையாளர் ஒரு பெண். அங்கேயே க்ரௌண்ட் ஃப்ளோரில் வசிக்கிறாராம். 25 வயது இருக்கும். குசேலன் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்திருப்பவரைப் போல் இருந்தார். சரி, அவர் எப்படி இருந்தால் நமக்கு என்ன? ஆனால் அவர் சொன்ன வாடகைதான் எனக்கு என்னென்னவோ விபரீத எண்ணங்களை வரவழைத்து விட்டது.

வாடகை 20,000 ரூபாயாம். வீட்டுக்கா அல்லது... 

சரி, எதுக்கு வம்பு என்று ஓடி வந்து விட்டேன்

இப்போது ஒரு சுமாரான வீடு கிடைத்திருக்கிறது. ஆனால் முன் பணமாகக் கொடுக்க வேண்டிய தொகை இந்த இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகி விட்டது. பழைய ஓனரிடம் இருக்கும் தொகையை வாங்கி புதிய ஓனரிடம் கொடுக்கலாம் என்றால் இன்னும் ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது

எனது வாசகர்களிடம் மீண்டும் விண்ணப்பிக்கிறேன்

இது பற்றிப் பலரும் கேலியும் அவதூறும் செய்வார்கள். ஐந்து லட்சம் விற்பனையாகும் பெரும் பத்திரிகையில் கூட அவதூறு செய்து எழுதுவார் பிரபல கட்டுரையாளர். ப்ளாகில் எழுதுபவர்களோ...கேட்கவே வேண்டாம். பஸ்ஸில் அட்டை வைத்து பிச்சை கேட்கும் சிறுமியின் ஞாபகம் வருவதாக எழுதியிருந்தார் ஒரு ப்ளாகர். யார் கலைஞன், யார் பிச்சைக்காரன் என்று கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு இருக்கிறார்கள் ப்ளாகில் எழுதுபவர்கள். பார்த்துக் கொள்ளுங்கள்

நன்று. என் தொழில் எழுத்து. அட்டை வைத்துப் பிச்சை எடுப்பது அல்ல. பிச்சை எடுப்பது என்பது இன்று முதலீடே இல்லாத ஒரு பெருந்தொழில். பல கோடிகள் அதில் புரளுகின்றன. செக்ஸ் தொழிலைப் போல் மிகக் கொடூரமான வன்முறையும், நம்பவே முடியாத படு பாதகங்களும் நிறைந்த ஒரு தொழில் அது. பஸ்ஸில் அட்டை போடும் அந்தச் சிறுமியிடம் பேசினால் அது உங்களுக்குப் புரியும்

ஆனால் என்னுடைய தொழில் எழுத்து. இதில் தமிழ்நாட்டிலேயே அதிக பட்சம் உழைப்பவன் நான்தான். ‘ இந்த 2008-இல் நான் எழுதியிருக்கும் பக்கங்களை எண்ணிச் சொல்லுங்கள்என்று இரண்டு நண்பர்களிடம் சொல்லியிருந்தேன். ஒரு வாரமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். புத்தகங்களாகப் போட்டால் இருபது வரும் என்று நினைக்கிறேன். இந்த அளவுக்கு உழைத்தும் இப்படிக் காசு கேட்டு அட்டை போடும் நிலைக்குக் காரணங்கள் இரண்டு

ஒன்று, நானேதான். என்னுடைய சமரசமற்ற போக்கு. யாரோடும் எதற்காகவும் நான் சமரசம் செய்து கொண்டதில்லை. இது பற்றி நிறைய எழுதி விட்டேன். இரண்டு, என் எழுத்துக்கு ஊதியம் கிடைப்பதில்லை. காரணம், இலக்கியப் பத்திரிகைகள் நஷ்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றன

700 சதுர அடிக்கு 20,000 ரூ. வாடகை கேட்ட ஓனரைப் பற்றிச் சொன்னேன். அதே சமயம் இன்னொன்றையும் சொல்ல வேண்டும். நேற்று இப்போது நான் குடியிருக்கும் வீட்டு ஓனர் வந்தார். அட்வான்ஸ் தொகையைத் திருப்பித் தருவதற்காக. அவரும் ஒரு பெண்மணிதான். செக்கில் கையெழுத்து மட்டும் போட்டுக் கொடுத்து விட்டுமற்றதை நீங்கள் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். ப்ளாங்க் செக். இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

என்னுடைய வங்கிக் கணக்கு எண்:
ICICI A/c No.
T.Nagar Branch, Chennai 17.
Account holder’s name: k. arivazhagan 


இப்போ நம்ம அல்டிமேட் எழுத்தாளர் 2002ல் என்ன எழுதிருக்காருன்னு பார்ப்போம் :


நானும் அவந்திகாவும் ஒரு சோதிடரை சந்திக்க நேர்ந்தது. சோதிடர் என்பதைவிட clairvoyant என்று சொல்லலாம். எழுபது வயது அம்மா. கண்களை மூடி தியானித்து வருங்காலத்தையும் கடந்த காலத்தையும் நிகழ்காத்தையும் காணக் கூடியவர்.

“விரைவில் நீங்கள் ஒரு வீடு வாங்குஈர்கள். அதன் அருகே ஒரு நதியும் தெரிகிறது” என்றார்.

‘நிச்சயமாக இல்லை’ என்று நினைத்துக் கொண்டேன். அதிலும் நதிக்கருகில் வீடா ? அப்படியானால் அடையாறு தான். அடையாறில் வீடு வாங்க வேண்டுமானால் அதற்கு வைர வியாபாரயாக அல்லவா இருக்க வேண்டும் ?

ஆனால் அந்த அம்மா சொன்னது மிக விரைவில் பலிதமாயிற்று. அடையாறு அல்ல. சின்மயா நகர். நதி ? என்ன செய்வது ? வீட்டுக்கு எதிரும் புதிரும் திரும்பின இடமெல்லாம் கூவம் தான் வளைந்து நெளிந்து ஓடுகிறது

-------------------------------------



சொந்த வீட்டுக்கு எதுக்குய்யா வாடகை கொடுக்குற ?? தமிழன் தான் எதையும் நியாபகம் வச்சுக்க மாட்டான், நல்லா தலையில் மிளாகாய் அரைக்காலாம்னு நினைச்சுட்டிங்களா சாரு ?? அது எப்படி ? பழைய ஹவுஸ் ஓனர் கிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கினாலும் இன்னும் ஐம்பதாயிரம் ருபாய் குறையுதாமாம்... அட்றா..அட்றா.அட்றா.. சொந்த வீட்டுக்கு வாடகை மட்டும் தான் கொடுப்பாருன்னு பார்த்தா அதுக்கு அட்வான்ஸ் வேற கொடுத்திருக்காரு நம்ம சாரு...

3 comments:

  1. ada veetila indha jandhuvai vachirukka stepson rent ketirupaarupaa!!!!!!!!!

    ReplyDelete
  2. நமீதா வெறியன்13 June 2013 at 02:36

    அடேய் மோசக்காரா சாரு, 20ஆயிரத்துக்கு ஏனடா வீடு பிடிக்கிற? நீ வீடு பிடிக்கிறியா அல்லது சின்னவீடு பிடிக்கிறியா? அடேய் அயோக்கிய பயலே ராயபுரம், வண்ணாரப்பேட்டை, 7 கிணறு பகுதிகளில் அட்வான்ஸ் 20,000 க்கும் வாடகை 2ஆயிரத்துக்கும் கிடைக்குமடா! அடேய் மோசக்காரா யாரை ஏமாற்றப்பார்க்கிறாய்

    ReplyDelete
  3. இந்த பொம்புளைப் பொறுக்கிக் குடிகாரன் வாய் திறந்தாலே பொய் தான்

    ReplyDelete